மக்கள் நல்லுறவு பகிர்கிறது.
கழுத்தின் இரு
பக்கங்கள் வழியாக தலைக்குச் செல்லும் கழுத்து தமனிகள், இதயத்தில் இருந்து, மூளைக்கு ரத்தத்தை கொண்டு செல்கின்றன.பெரிதாக
உள்ள ரத்தக்குழாய்கள், பல கிளைகளாக
பிரிந்து, நுண்ணிய ரத்தக்
குழாய்களாக மாறி, மூளையின் எல்லா
திசுக்களுக்கும் தேவையான பிராண வாயு, ஊட்டச்சத்துகளை வழங்குகின்றன.
மூளைக்கு
செல்லும் பேரு, சிறு ரத்தக்
குழாய்களில் ரத்த ஓட்டம் குறைதல் மற்றும் தடைபடும்போது, பிராணவாயு, ஊட்டச்சத்துக்கள் கிடைப்பது தடைபட்டு, மூளையின் சில பாகங்கள் செயல் இழந்து, உடலின் சில பாகங்களும் செயல் இழக்கின்றன.
இதை, பக்கவாதம் (ஸ்ட்ரோக்) என்கிறோம். மாரடைப்பு
போன்று, இதை, மூளை அடைப்பு எனலாம்.
உயர் ரத்த
அழுத்தம், சர்க்கரை நோய்,
இதய நோய்கள், ரத்தக் குழாய்களில் கொழுப்பு படித்தல், அதிக உடல் எடை, பருமன் கூடுதல், புகை, மது பழக்கம், ஆரோக்கியமற்ற
உணவுப் பழக்கம், சோம்பேறியான
வாழ்க்கை முறை, நாட்பட்ட மன
அழுத்தம், உடற்பயிற்சி
இன்மை மற்றும் நாட்பட்ட தொற்று நோயாலும், பக்கவாதம் வரலாம்.
பாரம்பரியமாகவும்
இந்த பாதிப்பு வருகிறது. 80 சதவீத பக்கவாதம்,
மூளையில்
ரத்தக்குழாய்களில் அடைப்பாலும், 20 சதவீஸ்
பக்கவாதம், மூளையில் ரத்தம்
கசிந்து தேங்குவதாலும் ஏற்படுகிறது. பக்கவாதத்தை வரும் முன், உடலின் ஒரு பகுதி அல்லது முகம், கை, கால்கள் மரத்துப் போகுதல், செயல் இழந்து
போகுதல் போன்ற உணர்வு, திடீரென தலை
சுற்றல், திடீர் குழப்பம்,
பேச்சு குழறுதல், பேரர் பேசுவதை புரிய முடியாமை, திடீரென கடும் தலைவலி, தான் எங்கு இருக்கிறோம் என்ற உணர்வு
இல்லாதிருத்தல் போன்ற அறிகுறிகள் தோன்றும்.
அப்போதே, உஷாராகி விடுவது நல்லது. அறிகுறிகள் தெரிந்த
மூன்று மணி நேரத்திற்குள், 'சிடி' ஸ்கேன் எடுக்கும் வசதி உள்ள மருத்துவமனைக்கு
பாதிக்கப்பட்டோரை அழைத்துச் செல்ல வேண்டும். மொழி அடைப்பை உறுதி செய்ய வேண்டும்.
மூன்று மணி நேரத்திற்குள், ரத்த அடைப்பு
நீக்கும் மருந்து (thrombolitic therapy ) செலுத்தினால், முற்றிலும்
குணப்படுத்த முடியும்.
தாமதமாக வந்தால்,
மருந்து மருந்து
போட்டாலும் பயனில்லை. பக்க விளைவுகள் ஏற்பட வாய்ப்புள்ளது. பாதிப்புடன்
வருவோருக்கு சில முக்கிய பரிசோதனைகள் செய்யப்படும்.
தகுதியான்
நபருக்கு மட்டுமே, ரத்த அடைப்பு
நீக்கும் மருந்தை செலுத்த முடியும். எல்லோருக்கும் இந்த மருந்தை செலுத்த முடியாது.
பக்கவாதத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டோருக்கு, நீண்ட கால சிகிச்சையாக மூளை நரம்பியல் சிகிச்சை
நிபுணரின் ஆலோசனைக்கு ஏற்ப, பேச்சு
பயிற்சியாளர், உடல் இயக்க
சிகிச்சையாளர், மன நல ஆலோசகர்
மற்றும் ஊட்டச்சத்து நிபுணர்களின் உதவி, பாதிப்புக்கு தகுந்தாற்போல் தேவைப்படும். இவர்கள் அனைவரும் இணைந்து
நோயாளிகளுக்கு சிகிச்சை மற்றும் பயிற்சி அளிக்கும்போது, வெகு விரைவில் குணமாக வாய்ப்புள்ளது.
சர்க்கரை அளவு,
உயர் ரத்த அழுத்தத்தையும்
கட்டுப்படுத்த வேண்டும். புகை, மது பழக்கத்தைக்
கைவிட வேண்டும். கொழுப்பு சத்தைக் கட்டுப்படுத்துதல், தினமும் உடற்பயிற்சி செய்தல், மன அழுத்தம் வராமல் பணிகளை எளிமைப்படுத்துதல்
அவசியம். பழம் கீரையை உணவில் அதிகம் சேர்க்க வேண்டும்.
ஆண்டுக்கு ஒரு
முறையாவது ரத்த அழுத்தம், சர்க்கரை
கொழுப்பு உப்பு பரிசோதனை செய்து கொள்வது அவசியம் அலட்சியமாக இருந்தால், பக்கவாதம் பாதித்து குடும்பத்திற்கும், சமுதாயத்திற்கும் சுமையாகி விடுவோம். அத்தகைய
நிலை வராமல் பாதுகாப்பது நம் கையில் உள்ளது.