Thursday, November 8, 2018

ஒரு வாழ்கை பல பார்வை


இறைவனின் பார்வையில் நான் மனிதன்
உலகத்தின் பார்வையில் நான் இந்தியன்
மாநிலத்தின் பார்வையில் நான் தமிழன்
மாவட்டத்தின் பார்வையில் நான் கோயமுத்தூர்காரன்
பெற்றோரின் பார்வையில் நான் நல்லமகன்
கரம் பிடித்தவள் பார்வையில் நான்  நல்ல கணவன்
பிள்ளைகளின் பார்வையில் நல்ல தகப்பன்
உங்களின் பார்வையில் என்றுமே நல்ல நண்பன்
பார்வை பல கொண்டவர்கள் அன்புடன் வாழ்க வளமுடன்

ஏன் இந்த நிலை?


இன்றைய பெற்றோர்கள் கவனத்திற்க்கு!

               என் மகளுக்கு எத்தனை செலவு செய்து திருமணம் செய்து கொடுத்தேன், நகை, பணம், கார், பங்களா, சீரும் சிறப்புமாக, பல விதமான உடைகள், பல வகையான உணவுகள், விருந்துகள் அளித்து ஆடம்பரமாக செலவு செய்து, பணக்காரனாக பார்த்து கட்டிக்கொடுத்தேன், ஆனால் என் மகள் ஆறு மாதத்தில் வாழமாட்டேன்  அவருடன் சரிபட்டு வரவில்லை என வந்து விட்டதால்  நாங்கள் மன நிம்மதி இல்லாமல் தவிக்கிறோம் ,நாங்கள் சரியாக விசாரிக்கவில்லை,  நாங்கள் ஏமாந்து விட்டோம் என பல பெற்றோர்கள் சொல்வதை நாள்தோறும் காண்கிறோம்.

               எதைப்பற்றியும் யோசிக்காமல், தங்களின் எதிர்காலத்தை பற்றி சிந்திக்காமல், சின்ன சின்ன விசயத்திற்க்கு  விவாகரத்து வேண்டி நீதிமன்றதில் பொறுமையுடன் மாதக் கணக்கில் பல பேர்  காத்து கிடக்கிறார்கள், நிதிமன்றத்தின் தீர்ப்புக்கு காத்திருக்கும் காலம் வாழ்க்கையில் கொஞ்சம் கூட காத்திருப்பதில்லையே! உங்கள்  வாரிசுகளின்  எதிர்கால வாழ்க்கையை அடுத்தவர்கள் தீர்மானிக்கும் நிலை வருவது சரியா ? அந்த வாய்ப்பை நாம் கொடுக்கலாமா?

               பெற்றோர்கள் தங்களது மகன் மகளுக்கு அன்பு, பண்பு, பொறுமை, ஒழுக்கம், விட்டு கொடுக்கும் மனப்பக்குவம், கல்வி,  வாழ்க்கை நெறிமுறைகளையும், குடும்ப நடத்துவதற்கான அடிப்படை வழிமுறைகளையும், இளவயது முதல் கற்றுத் தராமல் இருக்கும் பெற்றோர்கள் தான் இதற்க்கு முதல் காரணம்.

               செல்வம் சேர்பது ஒரு புறம் இருந்தாலும் மறுபுறம் ஏன்ன தேவை என்பதை மறந்து விடுகிறோம்,செல்வம் சேர்பதில் ஆர்வம் காட்டும் நாம் இதை சேர்க்க தவறிவிடுகிறோம், இது தான் வாழ்க்கை என்ற கட்டிடத்திற்க்கு அஸ்திவாரம்,  அஸ்திரம், அதை எடுக்க, கொடுக்க மறந்து விடுகிறோம், தான் பட்ட கஷ்டம் தனது மகள் மகன் அனுபவிக்க கூடாது என சொல்லி அடிப்படை கஷ்ட நஷ்டங்களை சொல்லாமல், தெரிந்து கொள்ள வாய்ப்பு கொடுக்காமல் அடுத்தவனிடம் ஒப்படைத்தால், அவன், அவளை புரிந்து கொள்ளும் முன் பிரிவு ஏற்பட்டு விடுகிறது.

               ஒவ்வொருத்தரும் தன் பக்கம் உள்ள கருத்துக்களை மட்டும் நீயாயமாக  பேசி அடுத்தவனிடம் குறைகளை காட்டி பிரிந்து  செல்ல வழி தேடுகிறார்கள், இவர்களை அறிவுரை கூறி சேர்த்து வைக்கவும் பெரியோர்கள் முயற்சி செய்வதில்லை, முயற்சி செய்தாலும் தற்கொலை செய்து கொள்வதாக மிரட்டுபவர்களையும் காணமுடிகிறது.

               சிறு தோல்விகளையும், கஷ்டங்களையும் தாங்கிக் கொள்ளாத சமூகத்தை, சந்ததிகளை உருவாக்கிக் கொண்டிருக்கிறோம், Fast food காலத்தில் எல்லாமே Fast ஆக வேண்டும் என்ற கோணத்தில் தான் இயங்குது உலகம், உங்கள் மகளுக்கோ, மகனுக்கோ, தொலைகாட்சி சீரியல்கள் தான் ஆலோசனை வழங்கி வருகிறது,  வரதட்சணை, கோபம், வில்லத்தனம், எனஅனைத்து தவறான விசயங்கள் எளிதில் பற்றிக்கொள்கிறது,

               எனவே பெற்றோர்களே ஆடம்பரம், அழகு, தற்பெருமை நமக்கு முக்கியமல்ல, கல்வியோடு, நல்ல ஒழுக்கம், அன்பு, உழைப்பு, பொறுமை, பொறுப்பு, மரியாதை, மன்னிக்கும் குணம் தான் அவசியம், அது தான் தனது சந்ததிகளை வளர செய்யும் முதல் சொத்து என்பதை மனதில் கொள்ளவேண்டும், அதையே கற்றுக்கொடுங்கள், வாழ்க்கை வளமாகும்!

வாழ்க வளமுடன்!

மக்கள் நல்லுறவு


Thursday, July 12, 2018

தடுப்பது யார்?


இளைஞர்களை விரைவில் ஈர்க்கும் பழக்கம்! பெற்றோர்கள் கவனம்!

அடுத்தவனிடம் வலிமை பெருமை பேச பந்தா! பண்ண ஆரம்பித்த பழக்கம் தான் இந்த புகை, குட்கா, மது ,கஞ்சா, போதை பழக்கம்  அதற்க்கு அடுத்து லாட்டரி, சூதாட்டம், ரேஸ், இதற்க்கு அடிப்படை தகுதி செல்போன், 'பைக், கையில் பணம்.

இதில் பணம் பற்றாக்குறையானால் அடுத்த கட்டம் வழிப்பறி, திருட்டு, பெண்கள் சகவாசம், கொலை, கொள்ளை, பெற்றோர்கள், நல்ல நண்பர்கள் நினைத்தால்தான் முதற்கட்டமாக தடுக்க முடியும், இல்லையெனில் பாதிப்பு ஒட்டு மொத்த குடும்பத்திற்க்கே! ஒட்டு மொத்த நாட்டிற்க்கே!

குறிப்பிட்ட வயது வரை பெற்றோர் கண்காணிப்பில், அன்பான, நட்பான  அரவனைப்பில், வழிகாட்டினால் நிச்சயமாக அது  நேர் வழியில் நடக்க வழி வகுக்கும்!

மாற்றத்தை உன் வீட்டிலிருந்து தொடங்கு!

இரும்பில் ஒரு இதயம்


தலையில்கணம் கொண்டவனா நீ!

நட்புக்கு இலக்கணம் நீ!
சேர்ந்தே உழைக்கிறாய்!
சேராமல் இருக்கிறாய்!

தன்னம்பிக்கைக்கு உதாரணம் நீ!
ஆம் நீ தினம் தினம் தற்கொலை செய்து கொள்கிறாய், அடுத்த நிமிடமே அதை மறந்து மறுபடியும் பணிக்கு தயராய் இருக்கிறாய்,

ஆயிரம் பேர் அசிங்கம் செய்தாலும் அமைதியாய் இருக்கிறாய்!

கல்லும் முள்ளும் கட்டையும் தான் உனக்கு படுக்கை!

சலிக்காமல் பலரின் பாரத்தை சுமக்கிறாய், இந்த பாரதத்தின் பெருமையாய் திகழ்கிறாய்!

நீண்ட ஆயூளுக்கு நேர் வழி காட்டுகிறாய், நீ மட்டும் தடம் புரண்டால் மக்களின் தலையெழுத்து மாறிவிடும்,

இந்த இரும்பிலும் இதயம் உள்ளதே!

ஏன் தண்டவாளமே! நீ வாழ்க  வளமுடன்! மக்கள் இருப்பார்கள் நலமுடன்!

அஸ்திவாரம்



பெற்றோர் தான் உன்  வீட்டின் அஸ்திவாரம்!
அதில்
உறவு உன்னை தாங்கும் தூண்கள்!

அஸ்திவாரம்
உன் அடையாளம்!  அது தான் பலம்!
அஸ்திவாரம் அழகாக தெரியாது
அடியில் இருப்பதால் அதன் அருமை உன் கண்களுக்கு தெரியாது!

Wednesday, June 27, 2018

பக்கவாதம்

மக்கள் நல்லுறவு பகிர்கிறது.

கழுத்தின் இரு பக்கங்கள் வழியாக தலைக்குச் செல்லும் கழுத்து தமனிகள், இதயத்தில் இருந்து, மூளைக்கு ரத்தத்தை கொண்டு செல்கின்றன.பெரிதாக உள்ள ரத்தக்குழாய்கள், பல கிளைகளாக பிரிந்து, நுண்ணிய ரத்தக் குழாய்களாக மாறி, மூளையின் எல்லா திசுக்களுக்கும் தேவையான பிராண வாயு, ஊட்டச்சத்துகளை வழங்குகின்றன.

மூளைக்கு செல்லும் பேரு, சிறு ரத்தக் குழாய்களில் ரத்த ஓட்டம் குறைதல் மற்றும் தடைபடும்போது, பிராணவாயு, ஊட்டச்சத்துக்கள் கிடைப்பது தடைபட்டு, மூளையின் சில பாகங்கள் செயல் இழந்து, உடலின் சில பாகங்களும் செயல் இழக்கின்றன.

இதை, பக்கவாதம் (ஸ்ட்ரோக்) என்கிறோம். மாரடைப்பு போன்று,  இதை, மூளை அடைப்பு எனலாம்.

உயர் ரத்த அழுத்தம், சர்க்கரை நோய், இதய நோய்கள், ரத்தக் குழாய்களில் கொழுப்பு படித்தல், அதிக உடல் எடை, பருமன் கூடுதல், புகை, மது பழக்கம், ஆரோக்கியமற்ற உணவுப் பழக்கம், சோம்பேறியான வாழ்க்கை முறை, நாட்பட்ட மன அழுத்தம், உடற்பயிற்சி இன்மை மற்றும் நாட்பட்ட தொற்று நோயாலும், பக்கவாதம் வரலாம்.

பாரம்பரியமாகவும் இந்த பாதிப்பு வருகிறது. 80 சதவீத பக்கவாதம், மூளையில் ரத்தக்குழாய்களில் அடைப்பாலும், 20 சதவீஸ் பக்கவாதம், மூளையில் ரத்தம் கசிந்து தேங்குவதாலும் ஏற்படுகிறது. பக்கவாதத்தை வரும் முன், உடலின் ஒரு பகுதி அல்லது முகம், கை, கால்கள் மரத்துப் போகுதல், செயல் இழந்து போகுதல் போன்ற உணர்வு, திடீரென தலை சுற்றல், திடீர் குழப்பம், பேச்சு குழறுதல், பேரர் பேசுவதை புரிய முடியாமை, திடீரென கடும் தலைவலி, தான் எங்கு இருக்கிறோம் என்ற உணர்வு இல்லாதிருத்தல் போன்ற அறிகுறிகள் தோன்றும்.

அப்போதே, உஷாராகி விடுவது நல்லது. அறிகுறிகள் தெரிந்த மூன்று மணி நேரத்திற்குள், 'சிடி' ஸ்கேன் எடுக்கும் வசதி உள்ள மருத்துவமனைக்கு பாதிக்கப்பட்டோரை அழைத்துச் செல்ல வேண்டும். மொழி அடைப்பை உறுதி செய்ய வேண்டும். மூன்று மணி நேரத்திற்குள், ரத்த அடைப்பு நீக்கும் மருந்து (thrombolitic therapy ) செலுத்தினால், முற்றிலும் குணப்படுத்த முடியும்.

தாமதமாக வந்தால், மருந்து மருந்து போட்டாலும் பயனில்லை. பக்க விளைவுகள் ஏற்பட வாய்ப்புள்ளது. பாதிப்புடன் வருவோருக்கு சில முக்கிய பரிசோதனைகள் செய்யப்படும்.

தகுதியான் நபருக்கு மட்டுமே, ரத்த அடைப்பு நீக்கும் மருந்தை செலுத்த முடியும். எல்லோருக்கும் இந்த மருந்தை செலுத்த முடியாது. பக்கவாதத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டோருக்கு, நீண்ட கால சிகிச்சையாக மூளை நரம்பியல் சிகிச்சை நிபுணரின் ஆலோசனைக்கு ஏற்ப, பேச்சு பயிற்சியாளர், உடல் இயக்க சிகிச்சையாளர், மன நல ஆலோசகர் மற்றும் ஊட்டச்சத்து நிபுணர்களின் உதவி, பாதிப்புக்கு தகுந்தாற்போல் தேவைப்படும். இவர்கள் அனைவரும் இணைந்து நோயாளிகளுக்கு சிகிச்சை மற்றும் பயிற்சி அளிக்கும்போது, வெகு விரைவில் குணமாக வாய்ப்புள்ளது.

சர்க்கரை அளவு, உயர் ரத்த அழுத்தத்தையும் கட்டுப்படுத்த வேண்டும். புகை, மது பழக்கத்தைக் கைவிட வேண்டும். கொழுப்பு சத்தைக் கட்டுப்படுத்துதல், தினமும் உடற்பயிற்சி செய்தல், மன அழுத்தம் வராமல் பணிகளை எளிமைப்படுத்துதல் அவசியம். பழம் கீரையை உணவில் அதிகம் சேர்க்க வேண்டும்.

ஆண்டுக்கு ஒரு முறையாவது ரத்த அழுத்தம், சர்க்கரை கொழுப்பு உப்பு பரிசோதனை செய்து கொள்வது அவசியம் அலட்சியமாக இருந்தால், பக்கவாதம் பாதித்து குடும்பத்திற்கும், சமுதாயத்திற்கும் சுமையாகி விடுவோம். அத்தகைய நிலை வராமல் பாதுகாப்பது நம் கையில் உள்ளது.

மத்தி மீன்



மக்கள் நல்லுறவு பகிர்கிறது

சர்க்கரை நோய் உள்ளவர்கள், மத்தி மீன் (சாளை மீன் )சாப்பிட்டால் நோய் எதிர்ப்பு திறன் அதிகரித்து ரத்தத்தில் சர்க்கரையின் அளவை கட்டுப்படுத்தலாம். மத்தி மீன்களில் கால்சியம் அதிகம் இருப்பதால் எலும்புகளின் வளர்ச்சிக்கு உதவுகிறது.

மேலும் பாஸ்பரஸ் சத்தினால் எலும்புகளுக்கு வலிமை தருகிறது. மத்தி மீனில் வைட்டமின் பி 12 உள்ளது. இது உடலில் ஹோமோசைஸ்டீனின் அளவை சமநிலைப்படுத்தி இதய சுவர்களில் பாதிப்பு ஏற்படுவதை குறைக்கிறது.

மத்தி மீனில் அயோடின் என்ற தாதுச்சத்து உள்ளதால் முன் கழுத்துகழலை நோய் ஏற்படும் வாய்ப்பை குறைக்கிறது. மத்தி மீனில் செல்களில் இருந்து கால்சியம் மாத்திரைகள் தயாரிக்கப்படுகிறது.

இந்த மாத்திரைகளை உட்கொள்பவர்களின் தோல்கள் பளிச்சென்றும், நகங்கள் உறுதியாகவும், கண் பார்வை தெளிவாக இருக்கும்.