Friday, February 26, 2016

கண்டிப்பாக சிந்திக்கவும்...

மக்கள் நல்லுறவு பகிர்கிறது
கண்டிப்பாக சிந்திக்கவும்...


தமிழகத்தில் என்ன நடந்து கொண்டு இருக்கிறது.  அரசு ஊழியர்கள் வேலை நிறுத்தம் பற்றி தான்.

ஒரு தனியார் நிறுவன பியூன் சம்பளம் எவ்வளவு தெரியுமா? 


குறைந்த பட்சம் - 4000 - அதிகபட்சம் 12000.
அரசு பியூன் சம்பளம் - 20000 - 80000

தனியார் பள்ளி ஆசிரியர்கள் - 5000 - 35000
அரசு பள்ளி ஆசிரியர்கள் - 24000 - 1,25,000


தனியாரிடம் வேலை பார்ப்பவர் 12 மணி நேரம் குறைந்த பட்சம் வேலை பார்க்க வேண்டும், பி எப், மெடிகல் கிலைம் எதுவும் இல்லை.  உயிர் போனாலும் ஒன்றும் இல்லை.

அரசு ஊழியர்கள் 8 மணி நேரம் வேலை. அதில் என்னவெல்லாம் இல்லையோ எல்லாம் உண்டு. கேள்வி கேட்க ஆள் மட்டும் இல்லை.

இவ்வாறு இருக்க சம்பளம் பற்றவில்லை என்று கூறி போராட்டம். மத்திய அரசு இணையாக சம்பளம் வேண்டும் (இரண்டு மடங்கு) அதுவும் எந்த நேரத்தில்?  தேர்தல் அறிவிக்கப்பட்ட பிறகு.

யாரை ஏமாற்ற இந்த போராட்டம்? 
யாருடைய தூண்டுளில் இந்த போராட்டம்?

கடந்த நாளே முக்கால் ஆண்டில் ஏன் இந்த போராட்டம் செய்ய வில்லை?  அல்லது, இவ்வளவு நாள் பொருமையாக இருந்தவர்கள் இன்னும் 3 மாதம் ஏன் பொருக்க வில்லை? திட்டம் புரிகிறதா?
சரி,  உங்களுக்கு தான் சம்பளம் பற்றவில்லை யே? நீங்கள் ஏன் குறைந்த சம்பளத்தில் பனியாற்ற வேண்டும்? வேலையை வேண்டாம் என்று எழுதி கொடுத்து விட்டு, உங்கள் திறமைக்கு ஏற்ற (மத்திய அரசு பணி) அதிக சம்பளம் கிடைக்கும் வேலைக்கு போக வேண்டியது தானே?  ஏன் அதை செய்ய வில்லை?

நீங்கள் அப்படி செய்தால்,  உங்களை விட அதிகம் படித்த, திறமையான,  வறுமையில் வாடும் இளைஞர்கள் பலர் உங்கள் சம்பளத்தில் கால் பாகம் கிடைத்தால் போதும் வேலை செய்ய காத்திருக்கிறார்கள்.

வீணாக அரசியல் வாதிகளோடு சேர்ந்து மக்களை ஏமாற்றும் செயல் செய்ய வேண்டாம்.
மக்களின் நலனுக்காக பணியமர்த்த பட்ட உங்களால் மக்கள் படும் அவதியை சிந்தனை செய்து பாருங்கள்.

இளைய பாரதம்,
(இளைஞர்களின் புதிய தேடல்)...

மக்கள் நல்லுறவு

பொறுமையான மக்களே

பொறுப்பான, பொறுமையான மக்களே

இந்த அரசு  உங்களுக்கு (மக்களுக்கு) நல்லது செய்தது என நீங்கள் உணரக் கூடியவர்களாக இருந்தால் நன்மை செய்யுங்கள் வரும் தேர்தலில்,

இந்த அரசு அறிவித்த திட்டங்கள் அனைத்தும் காகிதத்தில் மட்டும் இல்லாமல் காரியத்தில் செய்து காட்டப்பட்டது என்று அரசும்,  கட்சி தொண்டர்கள் சொல்வதை நீங்களும் மக்களும்  உணரும் பட்சத்தில் எதற்கு விளம்பரம், மக்களே தகுந்த பதில் அளிப்பார்கள் .
நாகரிகம் மிக்க காலத்தில் அநாகரிக அரசியல் விளம்பரம் தேவையா? 

ஒருவரை ஒருவர் கேவலப்படுத்திக் கொள்வதில் போட்டி தேவையா?  

கட்சிகளுடையே மக்களுக்கு நன்மை செய்ய ஏன் போட்டியிடுவதில்லை?

காசு சம்பாதிக்கும் துறையாக மாறி வருவது எதனால், யாரால் என்பதை  சிந்தித்து பாருங்கள்.

மாற்றம் வேண்டும் என நினைத்து தடுமாற்றத்தில் இருக்கும் மக்களே நீங்கள்  சிந்தித்து வாக்களியுங்கள், கொடுத்த வாக்குறுதி,  ஐந்து ஆண்டு அனுபவம் ஆகியவற்றை நிதானமாக அசைபோட்டு பாருங்கள், எந்த துறையில் யார் யாருக்கு நன்மை, தொந்தரவு, கஷ்டம், நஷ்டம், ஏற்பட்டது என்பதை சிந்தித்துப்பாருங்கள், உங்கள்  பொன்னான ஓட்டுகளை பணத்திற்க்காக (நாட்டை) அடகு வைத்து விடாதீர்கள், ஒளிமயமான எதிர்காலத்தை எதிர்பார்க்கும் மக்களுக்கு  ஓளிமாயமான எதிர்காலத்தை ஏற்படுத்திக்கொடுத்து விடாதீர்கள்.

நல்லதை தேர்ந்தெடுத்து நாட்டு மக்களுக்கு கொடுங்கள், கொடுத்தபின்பு குத்திக் கொண்டு இருக்காமல் குறைகளை கோரிக்கையிட்டு முடிந்து கொள்ளுங்கள், மக்களின் தீர்ப்பை நீங்கள்  ஏற்றுக்கொள்ளுங்கள் அரசியல்வாதிகளே, அதை வியாதியாக மாற்றிவிடாதிர்கள்.

மக்களிடம் நல்லுறவை விரும்பும் மக்கள் நல்லுறவு.

Thursday, February 25, 2016

நம் நாட்டு விவசாயிகளுக்கு உதவுவோம்...

Plz Must read....
Support for formers..
நம் விவசாயிகளுக்கு உதவ இப்படி செய்தால் என்ன...!

அதாவது "கோடை-2016" என்ற பெயரில் வரும் கோடை முழுவதும்(ஏப்ரல்,மே) பெப்சி/கோக் போன்ற பன்னாட்டு குளிர்பானங்களை முற்றிலுமாக தவிர்த்து

பழச்சாறு, கரும்புச்சாறு, இளநீர், மோர், கூழ் மற்றும் நுங்கு இவற்றை மட்டுமே நாம் பருகினால் விவசாயிகளும் , சிறுவியாபாரிகளும் வரும் கோடையிலாவது பயன் பெறுவர்.

கோடையை வெப்பதை தணிக்க நாம் செய்யும் செலவு நம் விவசாயிகளை கடனிலிருந்தும், தற்கொலைலிருந்தும் காக்கும்.

என்ன நண்பர்களே நம் விவசாயிகளை பாதுகாக்க "கோடை-2016" என்னும் பேரில் இரண்டுமாத இயக்கம் ஒன்றினை மக்களிடம் கொண்டு சேர்ப்போமா...?

👌👌👇 மாண்புமிகு முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் நாட்டு மக்களுக்கு கூறியுள்ள செய்தி .....👌👌👇

💪💪 இந்தியாவில் 121 கோடி பேரில் 10% தான் தினமும் பழச்சாறு அருந்துகிறார்கள் தினசரி  அருந்தினால் 3600 கோடி ருபாய் தோராயமாக  !!!!!!

💪💪 நாம் பெப்சி மற்றும் கோகோ கோலா குடிக்கும் போது, இந்த 3600 கோடி நம் நாட்டின் பணம் வெளியே செல்கிறது. பெப்சி மற்றும் கோகோ கோலா நிறுவனங்கள் சுமார் 7000 கோடி ருபாய் வரை ஒவ்வொரு நாளும் பெறுகின்றனர்.

💪💪 நாம் கரும்பு சாறு அல்லது இளநீர் அல்லது பழசாறுகள் குடித்தால் நம் நாட்டின் 7000 கோடி ருபாய் வரை சேமிக்கலாம் நம் விவசாயிகளுக்கு அவற்றை கொடுக்க நம் விவசாயிகள் யாரும் இனிமேல் தற்கொலை செய்துகொள்ள மாட்டார்கள் நாம் பழச்சாறுகள் உட்கொள்ளும் போது ஒரு கோடி பேருக்கு வருமானம் கொடுக்கும். 

💪💪 10 அல்லது 20 ருபாய் வரை கிடைக்கும் பழச்சாறு நாளடைவில் 10 அல்லது 5 ருபாய் வரை கிடைக்கும் இந்தியப் பொருட்கள் ஆதரவு மற்றும் நம் நாட்டின் நிதி வலுவடையும்.

💪💪 இந்த செய்தியை குறைந்தது 3 குருப்புக்கு அல்லது 10 பேருக்கு அனுப்பவும் 
கோகோ கோலா, Maggi, ஃபாண்டா, கார்னியர், ரெவ்லோன், லோரியல், Huggies, Levis, நோக்கியா, மெக்டொனால்டு, கால்வின் கிளின், கிட் கேட், மாய சிறு தெய்வம், நெஸ்லே, பெப்சி, கேஎஃப்சி.  இவற்றை முற்றிலும் தவிர்க்கவும்.


💪💪 நாட்டை காப்பாற்ற. அனைத்து இந்தியர்களும் 90 நாட்கள் இடைவெளியில் வெளிநாட்டு பொருள் வாங்குவதை நிறுத்திவிட்டால் பிறகு இந்தியா உலகின் இரண்டாவது பணக்கார நாடாகமாறும்.

💪💪 வெறும் 90 நாட்களில் ரூபாயின் மதிப்பு டாலருக்கு சமமாக இருக்கும். நாம் அனைவரும் ஒன்றாக இணைந்து அதை செய்ய வேண்டும். நாம் இதை செய்யவில்லை என்றால், பிறகு நாம் வெளிநாடுகளுக்கு நம் செல்வத்தை இழக்க நேரிடும்.

💪💪 நாம் எவ்வளவு ஜோக்ஸ் செய்திகளையும் வாழ்த்துக்களை மற்றவருடன் பகிர்ந்து கொள்கிறோம் அதுபோல இதையும் இந்தியர்கள் அனைவரும் அடையும் படி அனுப்புவோம்
👌👆💪💪💪

Wednesday, February 24, 2016

மதுவை அருந்தும் பழக்கம் உடையவர்கள்! ஒரு நிமிடம் ஒதுக்குங்கள்!!

மதுவை அருந்தும் பழக்கம் உடையவர்களுக்கு உங்கள் நேரத்தை ஒரு நிமிடம் ஒதுக்குங்கள், சிந்தியுங்கள் இது உங்கள் பகுதி.

இந்த நாட்டின் குடிபோதைக்காக கடையை நோக்கி நடக்கும்போது தான் தன் அழிவு பாதையின் முதல் படியை தேர்தெடுத்துக் கொள்கிறான்.

கடையில் பணத்தை கொடுத்து மதுவை வாங்கும்போது
உன் வருங்கால மரணத்தை விலை கொடுத்து வாங்குகிறாய் உன் மானத்தை விலை கொடுத்து விற்கிறாய்.

அடுத்து மதுவை கையில் ஏந்தி குடிக்கும்பொழுது
உன் மனைவி, குழந்தைகள், சகோதரிகள், தாய் தந்தை இப்படி ஏதேனும் உறவுகள் யாரோ ஒருவருக்கு உன்னால் சென்றடையும் உணவையும், உதவியையும் நீயே வினாக்கினாய் - தடுக்கிறாய்.

அடுத்து வாய்வைத்து உறிஞ்சும்பொழுது.
உன்னால் பயனடையும் பல பேரின் ரத்தத்தை நீயே உறிஞ்சிக் குடிக்கிறாய், உனது வாழ்நாளை நீயே உறிஞ்சி குறைக்கிறாய், நீ வேர்வை சிந்தி சம்பாதித்தகை உன் ரத்தத்தை நீயே உறிஞ்சி உன் ரத்தம் சுண்ட குடிக்கிறாய்.
நீ வாழும் நாட்களை உன் சுகத்திற்காக குறைத்துக் கொள்கிறாய்.

சாலையில் தள்ளாடி நடக்கும்போது
உனது மானம் தள்ளாடுகிறது, குடும்ப கெளரவம் தள்ளாடுகிறது நீ குப்பையாகிறாய், சாக்கடை உனக்கு பஞ்சுமெத்தை, சாலை உனக்கு படுக்கையறை.

சாலையில் மண்ணில் கிடக்கும்பொழுது
உனது மானம் மண்ணுக்குள் சென்றுவிட்டது நீ வெகுவிரைவில் மண்ணுக்குள் சென்றுவிடுவாய் எனவே நீ மரணத்தை அழைக்க மண்ணிற்க்கு முத்தமிடுகிறாய்.

இப்படி உன் இஷ்டத்திற்கு குடித்து பிறர்க்கு கஷ்டத்தை ஏற்படுத்தாதே மானத்தை விற்று அவமானத்தை சம்பாதித்து இறுதியில் மரணத்தை விலைக்கு வாங்குவது தான் உன் லட்சியம்.

பொதுவாக குடிப்பவர்களுக்கு தன்னம்பிக்கை மிக குறைவு. தன்னம்பிக்கை இல்லாதவனை எளிதில் வெல்லலாம், குடித்தால் தன்னம்பிக்கை, பலம், தைரியம், ஆறுதல் கிடைக்கும் என நினைத்து மதுவை குடிப்பவர்கள் அச்சமயம் பல சாவால்களை போடுவார்கள், சண்டை போடுவார்கள், சோகத்தை சொல்வார்கள், சத்தியம் செய்வார்கள், மேலும் குடிப்பதற்கு இன்னும் பல காரணங்களை சொல்வார்கள். ஆனால் மறுநாள் அதை மறுப்பார்கள் இதை தான் குடிகாரன் பேச்சு விடிந்தால் போச்சு என்கிறார்கள்.

சொல்பவர்கள் செயலில் காட்டமாட்டார்கள்.
குடி - குடியை கெடுக்கும், குடும்பத்தை சிதைக்கும் குழப்பத்தை கொடுக்கும், கூட இருந்து அழிக்கும் எனவே இந்த குடிப் பழக்கத்தால் தெருக்கூடி நிற்று உன்னை பார்த்து கைகொட்டி சிரிக்க நியே சிவப்பு கம்பளத்தை விரிக்காதே.

மதுவை தடைசெய் என போராட்டம் செய்தால் அரசை எதிர்பது போன்ற சூழ்நிலை ஏற்பட்டுள்ளது காரணம் மதுவை சப்ளை செய்வது, மதுக்கடையை எடுத்து நடத்துவது அரசாங்கம்.

உண்மையில் மதுவை ஒழிக்க வேண்டும் என்றால் முதலில் உன் வீட்டினிலிருந்து தொடங்கு, முதலில் உன் குடும்பத்தில் யாரேனும் இருந்தால் அவர்களை திருத்து, குடிகாரனாய் பார்த்து திருந்தாவிட்டால் குடியை அழிக்க முடியாது. அரசாங்கம் தடைசெய்தால் அடுத்த மாநிலத்திற்க்கு தான் பலன், கள்ளசாராயம் வளரும், காவல்துறைக்கு வேலை அதிகம்.

மதுவிலக்கு வேண்டும் என்பது நல்ல முடிவு, ஆனால் வந்த வருவாய் கருத்தில் கொண்டு அதன் மூலம் (மதுவிலக்கின் மூலம்) ஏற்படும் இழப்பிற்க்கு மாற்று திட்டம் வருவாய் இருந்தால் தெரிவிக்கலாம், தெரிந்தால் ஆலோசனை பகிரவும் இதுதான் மக்களின் நலன் கருதும் நபர்கள் செய்யும் முதல் வேலை. ஆதைவிட்டு மதுவிலக்கை வைத்து பிரசாரம் செய்வதும், மதுக்கடையை அடித்து நொறுக்குவதும், காவல்துறை கடமையை செய்ய விடாமல் TASMAC முன்பு காவல் காக்க வைப்பதும், அதை வைத்து அரசியல் செய்வதும் சரியா? மாற்று வழியை சிந்தியுங்கள்.

மதுவிலக்கு வளரும் இளைய சமுதாயத்தினரை கருத்தில் கொண்டும் மக்களின் நலன் கருதியும் கொண்டு வருவது அவசியம், பரந்து விரிந்து கிடக்கும் இந்த மது என்ற கொடிய மரத்தை சிறிது சிறிதாக வெட்டித்தான் அழிக்க வேண்டும், அகற்ற வேண்டும்.

ஆண்கள், பெண்கள், சிறுவர்கள், இளைஞர்கள், என பலரும் மதுவை பருகும் நிலை வந்துவிட்டதால் அரசின் திட்டம் மரணத்திட்டம் என பலர் கருதும் சூழ்நிலை ஏற்பட்டு மதுவிலக்கு வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர்.

இதில் அந்த ஆட்சியில் தொடங்கியது. இவர் வளர்த்தார். ஆரம்பித்தார், அரசு நடத்துகிறது என்ற கடந்தகால, நிகழ்கால பேச்சை விட்டுவிட்டு வருங்காலத்தை கருத்தில் கொண்டு மதுவிலக்கை விரும்புவர்களோடு கட்சி, அரசியல், சுய லாபத்தை மறந்து இனைந்து போராடுங்கள் அமைதியான முறையில் அரசின் அனுமதியோடு வெற்றிகிட்டும்.

பொது நலன் கருதி வெளியீடு:-

கோவை மக்கள் நல்லுறவு நலச்சங்கம்,


தகவல் அறியும் உரிமைச் சட்டம் 2005

தெரிந்து கொள்ளுங்கள்
மக்கள் நல்லுறவு பகிர்கிறது


தகவல் அறியும் உரிமைச் சட்டம் 2005ம் ஆண்டு இயற்றப்பட்டது. இச்சட்டத்தை சரியாக பயன்படுத்துவதன் மூலம் லஞ்சம் மற்றும் ஊழலை பெருமளவு கட்டுப்படுத்த முடியும்.

சட்டம் எதற்கு?
************************
அரசு அலுவலகங்கள் பொது மக்களுக்கு தகவல் சொல்லக் கடமைப்பட்டிருந்தாலும் இச்சட்டம் இயற்றப்படுவதற்கு முன் நீங்கள் கேட்கும் தகவலை அவ்வளவு எளிதில் பெற இயலாது. நீங்கள் தகவல் கேட்டு அனுப்பும் கடிதம் குப்பைக்கு கூட செல்லும் வாய்ப்பு உள்ளது. ஆனால் இச்சட்டம் இயற்றப்பட்ட பிறகு தகவல் தர மறுத்தால் சட்டத்தை மீறுவதாகும். தண்டனை கிடைக்கும் என்ற அச்சத்தால் தகவல் கிடைக்கும் வாய்ப்பு உறுதியாகிறது.


எங்கிருந்து தகவல் பெறலாம்?
************************************************
மத்திய மாநில அரசு நிறுவனங்கள், பொதுத்துறை நிறுவனங்கள், அரசு நிதி பெறும் நிறுவனங்கள் ஆகியவற்றிலிருந்து தகவல் பெறலாம்.

தனியார் நிறுவனங்களுக்கு இச்சட்டம் பொருந்தாது.

என்ன தகவல் பெறலாம்?
*************************************
அரசு அலுவலகங்களில் உள்ள கோப்புகள். ஆவணங்கள், சுற்றறிக்கைகள். ஆணைகள், ஈமெயில்கள், நோட் பைல் எனப்படும் அலுவலக குறிப்புகள் ஆகியவை பெறலாம். இது தவிர சாலை போடுதல், அரசு கட்டுமானப் பணிகள் நடைபெறும் இடங்களில் மாதிரிகள் கேட்டுப் பெறலாம்.
எடுத்துக்காட்டாக,

1. நமது மாவட்ட எம்.பி. அவர்களுக்கு மத்திய அரசு ஒவ்வொரு ஆண்டும் வழங்கக்கூடிய நிதியில் (5 கோடி ரூபாய்) இருந்து நமது ஊருக்கு என்ன என்ன நலத்திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது?
2. அதேபோல் நமது தொகுதி எம்.எல்.ஏ. அவர்களுக்கு மாநில அரசு ஒவ்வொரு ஆண்டும் வழங்கக்கூடிய நிதியில் (2 கோடி ரூபாய்) இருந்து நமது ஊருக்கு என்ன என்ன நலத்திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது?

எவ்வாறு பெறுவது?
******************************
ஒரு தகவல் பெறுவதற்கென தனியான படிவம் ஏதும் கிடையாது. ஒரு சாதாரண வெள்ளைத் தாளில் வேண்டிய தகவல்களை கேட்டு விண்ணப்பிக்கலாம். 
விண்ணப்ப மனு A4 சைஸ் பேப்பரில் கைகளால் ஆங்கிலம் அல்லது தமிழில் எழுதலாம் அல்லது டைப்பிங் செய்து கொள்ளலாம்,

மனுவில் பத்து ரூபாய் மதிப்புள்ள கோர்ட் ஸ்டாம்ப் ஒட்டி நம்முடைய விவரங்களை அதில் தெளிவாக கொடுக்க வேண்டும்.
குறிப்பாக சம்பந்தப்பட்ட துறையின் பொதுத்தகவல் அதிகாரியின் (PIO) பெயர், மனுவில் எந்த வகையான தகவல்கள் இடம் பெற வேண்டும்,
அதிகாரியிடமிருந்து நாம் எதிர்பார்க்கும் தகவல்கள் என்ன, என்ன? , தேதி, இடம், தந்தை பெயர், இருப்பிட முகவரி, கையொப்பம், இதில் இணைக்கக்கூடிய ஆவணங்களின் பட்டியல் மற்றும் கைப்பேசி எண், மின்னஞ்சல் முகவரி (இவை இரண்டும் கட்டாயமில்லை) ஆகியவைகள் இடம்பெற வேண்டும்.
மனுக்களை நேரிலோ அல்லது ரிஜிஸ்டர் போஸ்ட் செய்தோ அனுப்பலாம். கூரியர் மூலம் மனுவை அனுப்புவதை தவிர்க்கவும். 
மனுக்களை அனுப்பும் முன்பு ஜெராக்ஸ் காப்பியும் அனுப்பிய பிறகு அஞ்சல் முத்துரையுடன் கூடிய ஆதார சீட்டை பாதுகாத்துக்கொள்ளவும்.
மனுக்களை மாவட்ட கலெக்டர் அலுவலகம் மற்றும்
தாலுக்கா அலுவலகம் ஆகியவற்றில் உள்ள பொதுத்துறை தகவல் அதிகாரிகளிடமும் தாக்கல்செய்யலாம்.
நமது மனுக்களை நேரடியாக மாநில பொதுத்துறை தகவல் அதிகாரிகளுக்கு அனுப்புவதே சிறந்தது.


கட்டணம் விவரம்:
*****************************
மத்திய அரசும். தமிழ்நாடு அரசும் தகவல் பெற ரூ.10/- என கட்டணம் நிர்ணயித்துள்ளன. இக்கட்டணத்தை ரொக்கமாகவோ, வரைவேலையாகவோ, நீதிமன்ற கட்டண வில்லை மூலமாகவோ செலுத்தலாம். நகல் பெறுகையில் ஒரு தாளுக்கு ரூ. 2/- எனக் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.


யாரிடம் தகவல் கேட்பது?
****************************************
ஒவ்வொரு அரசு அலுவலகத்திலும் உதவிப் பொதுத் தகவல் அலுவலர் அல்லது பொதுத்தகவல் அலுவலர் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். இப்பொதுத் தகவல் அலுவலர்களின் மத்திய அரசுக்கான பட்டியல் www.tn.gov.in என்ற தளத்திலும் உள்ளன.


தகவல் ஏன் கேட்கிறோம் என சொல்ல வேண்டுமா?
***************************************************************************
பிரிவு 6 (2)ன்படி தகவல் கேட்பவர் எதற்காக தகவல் கேட்கப்படுகிறது என்ற விபரத்தை தெரிவிக்க வேண்டியதில்லை. பதில் அனுப்ப ஒரு தொடர்பு முகவரியைத் தவிர வேறு எந்த விபரத்தையும் அளிக்க வேண்டிய அவசியம் இல்லை.


எவ்வளவு நாட்களில் தகவல் பெறலாம்?
****************************************************************
பிரிவு 7 (1)ன் படி ஒரு பொதுத் தகவல் அலுவலர் 30 நாட்களில் தகவல் தர வேண்டும். கேட்கப்படும் தகவல் ஒரு நபரின் உயிர்ப்பாதுகாப்பு பற்றிய செய்தியாக இருந்தால் 48 மணி நேரத்தில் தர வேண்டும்.


முதல் மேல் முறையீடு:
************************************
பொதுத் தகவல் அலுவலர் 30 நாட்களில் தகவல் தரவில்லையென்றாலோ, அல்லது அவர் அளித்த தகவல் திருப்திகரமாக இல்லையென்றாலோ அந்தந்த துறைகளில் பிரிவு 19ன் கீழ் உள்ள மேல் முறையீட்டு அதிகாரியிடம் 30 நாட்களுக்குள் முதல் மேல் முறையீடு செய்யலாம்.

மேல் முறையீட்டு அதிகாரியின் பதில் திருப்திகரமாக இல்லையெனில் 90 நாட்களுக்குள் பிரிவு 19 (3)ன் கீழ் மாநில தகவல் ஆணையரிடம் இரண்டாவது மேல் முறையீடு செய்யலாம்.

முகவரி:
*************
மாநில தலைமை தகவல் ஆணையர்,
தமிழ்நாடு தகவல் ஆணையம், 
ஆலையம்மன் கோவில் அருகில்
தியாகராயர் ரொடு,
தேனாம்பேட்டை,
சென்னை - 600 018
தொலைப்பேசி எண்: 044 - 2435 7581, 2435 7580


தகவல் தராவிட்டால் தண்டனை உண்டா?
***************************************************************
பிரிவு 20ன் கீழ் குறிப்பிட்ட காலத்துக்குள், உரிய நியாயமான காரணங்கள் எதுவுமின்றி தகவல் தர மறுத்தாலோ, தவறான தகவல் அளித்தாலோ அரைகுறையான முழுமையற்ற தகவல்கள் அளித்தாலோ, தகவல்களை அழித்தாலோ பிரிவு 20ன் கீழ் அதிகபட்சமாக ரூ.25,000/- அபராதம் மற்றும் துறை நடவடிக்கை எடுக்க தகவல் ஆணையத்துக்கு அதிகாரம் உண்டு.


விதி விலக்குகள் :
******************************
பிரிவு 8ன் படி நாட்டின் இறையாண்மைக்கு ஊறு விளைவிக்கும், நீதிமன்றத்தால் தடை செய்யப்பட்டிருக்கும், சட்டமன்ற, பாராளுமன்ற உரிமைகள் மீறும், வியாபார ரகசியங்கள், வெளிநாடுகளிலிருந்து அரசுக்கு வந்த ரகசியங்கள், காவல் துறையின் ரகசிய தகவலாளர்களுக்கு ஆபத்து ஏற்படுத்தும் தகவல்கள், புலனாய்வில் உள்ள வழக்குகள், அமைச்சரவை கூட்ட குறிப்புகள் போன்றவை இச்சட்டத்திலிருந்து விலக்கு அளிக்கப் பட்டுள்ளது.

மேலும் பிரிவு 24ன் கீழ் மத்திய மற்றும் மாநில அரசுகளால் பட்டியலிடப்படும் பாதுகாப்பு மற்றும் உளவுத் துறை நிறுவனங்கள் ஆகியன இச்சட்டத்திலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளன.

எவ்வாறு இச்சட்டத்தை உபயோகமாய் பயன்படுத்தலாம்?
***************************************************************************************
இச்சட்டத்தை பயன்படுத்திட சட்டமன்ற உறுப்பினர் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களின் தொகுதிமேம்பாடு நிதி எவ்வாறு செலவிடப்படுகிறது என்று கேட்கலாம்.

நகராட்சி மற்றும் ஊராட்சிகளில் வழங்கப்படும் நிதிகள் எவ்வாறு செலவிடப்படுகிறது எனக் கேட்கலாம்.
ஊழல் நடைபெறக் கூடும் என்று சந்தேகப்படும் அலுவலகங்களில் தகவல் கேட்கலாம்.
உங்கள் தெருக்களில் போடப்படும் சாலைகளிலோ அரசு கட்டுமானப் பணிகளிலோ மாதிரிகள் எடுத்து சோதனைக் கூடங்களுக்கு அனுப்பலாம்.
டெண்டர் விபரங்களைக் கேட்கலாம்.

இதற்கான இணையதளங்கள்:
*********************************************

http://www.indg.in/e-governance/rti/bb5bbfba3bcdba3baabcdbaa-baab9fbbfbb5b99bcdb95bb3bcd/view?set_language=ta   இணையதளம் மூலமாக விண்ணப்பிக்க http://www.rtination.com/ என்ற தளத்தைப் பார்வையிடலாம்.

Tuesday, February 23, 2016

பழமொழி வடிவில் தமிழரின் "உணவு பழக்கம்"

மக்கள் நல்லுறவு 
தமிழரின் "உணவு பழக்கம்" பழமொழி வடிவில்
* காட்டுலே புலியும் , வீட்டுலே புளியும் ஆளைக் கொல்லும்.
* போன ஜுரத்தை புளி இட்டு அழைக்காதே
* பொங்குற காலத்தில் புளி.. மங்குற காலம் மாங்கா
* சீரகம் இல்லா உணவும் , சிறு குழந்தைகள் இல்லா வீடும் சிறக்காது.
* எண்னை குடத்தை சுற்றிய எறும்பு போல
* தன் காயம் காக்க வெங்காயம் போதும்
* வாழை வாழ வைக்கும்
* அவசர சோறு ஆபத்து
* ஆறிய உணவு மூட்டு வலி உண்டாக்கும்
* இரைப்பை புண்ணுக்கு எலுமிச்சை சாறு
* ரத்த கொதிப்புக்கு அகத்திக் கீரை
*இருமலை போக்கும் வெந்தயக் கீரை
* உண்ணா நோன்பு ஆயுளைக் கூட்டும்.
* உஷ்ணம் தவிர்க்க கம்பங் களி
* கல்லீரல் பலம் பெற கொய்யாப் பழம்
* குடல் புண் நலம் பெற அகத்திக்கீரை
* கொலஸ்ட்ரால் குறைக்க பன்னீர் திராச்சை
* சித்தம் தெளிய வில்வம்
* சிறுநீர் கடுப்புக்கு அன்னாசி
* சூட்டை தணிக்க கருணை கிழங்கு
* ஜீரண சக்திக்கு சுண்டக்காய்
* தலை வலி நீங்க முள்ளங்கி சாறு
* தேனுடன் இஞ்சி ரத்தத் தூய்மை
* பூண்டில் இருக்கு பென்சிலின் சக்தி
* மூல நோய் தீர வாழைப்பூ கூட்டு
* வாந்திக்கு மருந்து மணத்தக்காளி
* வாத நோய் தடுக்க அரைக் கீரை
* வாய் துர்நாற்றம் தீர்க்க ஏலக்காய்
* பருமன் குறைய முட்டைக்கோஸ்
* பித்தம் தணிக்க நெல்லிக்காய்
” உணவு மருந்தாக இருக்க வேண்டும்…. இல்லாவிட்டால் மருந்தே நமக்கு உணவாகும் நிலைமை உருவாகும் ”.
நலம் உடன் வாழ்வோம்.
மக்கள் நல்லுறவு 

விதி

மக்கள் நல்லுறவு 
ஒரு நாள் …எமதர்மன் ஒரு மனிதனிடம் வந்து சொன்னான் :

“மனிதா! இன்று உன்னுடைய வாழ்கையின் கடைசி நாள் ”

மனிதன் :!!!!ஆனா நான் உன்னுடன் வர தயாராக இல்லை !!

எமதர்மன் சொன்னான் : ” நல்லது,இன்று உன்னுடைய பெயர்தான் பட்டியலின் முதலில் உள்ளது …..”

மனிதன்: ” சரி,நீங்கள் இருக்கையில் உட்காருங்கள் ,நாம் இருவரும் புறப்படுவதற்கு முன் ஒரு COFFEE சாப்பிட்டு விட்டு போகலாம் ”

எமதர்மன் : சரி,அப்படியே செய்யலாம் !

அந்த மனிதன் எமதர்மனுக்கு தூக்க மருந்து கலந்த COFFEE கொடுத்தான்,குடித்தவுடன் எமதர்மன் நன்றாக தூங்கி விட்டான்!!!

மனிதன் உடனே அந்த பட்டியலை எடுத்து முதலில் இருந்த தன் பெயரை எடுத்துவிட்டு,கடைசியில் கொண்டு எழுதி வைத்தான் ….

எமதர்மன் தூக்கத்திலிருந்து எழுந்தவுடன் அந்த மனிதனிடம் சொன்னான் “நீ என்னிடம் மிகவும் நன்றாக, அன்பாக நடந்து கொண்டாய் ,அதனால் நானும் உனக்காக என்னுடைய முடிவை மாற்றி கொண்டேன்…என்னவென்றால் பட்டியலின் மேலிருந்து இல்லாமல் ,பட்டியலின் கிழே இருந்து உயிர்களை எடுக்க முடிவு செய்துள்ளேன் என்றான் “!!!


கதையின் நீதி :எல்லாம் விதியின்படிதான் நடக்கும் …….
நீ எவ்வளவு முயற்சி செய்தாலும் கூட ……

மக்கள் நல்லுறவு 

தெரிந்து கொள்ளக...

மக்கள் நல்லுறவு பகிர்கிறது

தெரிந்து கொள்ள...
👉 தயிராக மாற்ற முடியாத ஒரே பால் ஒட்டகப்பால்
👉 ஒட்டகத்தை விட அதிக நாட்கள் தண்ணீர் இன்றி வாழும் ஒரு உயரினம் கங்காரு எலி.
👉 துருவக் கரடிகள் அனைத்துமே இடது கை பழக்கம் உடையவை.
👉 பின்புறமாக மரம் ஏறும் விலங்கு கரடி.
👉 ஒரு மோட்டார் வாகனத்தில் 30 சதவீதம் எரிபொருள் மட்டும்தான் வண்டி ஓடுவதற்கு பயன்படுகிறது. மீதமுள்ள 70 சதவீதம் எரிபொருள் கார்பன் மோனோ ஆக்சைடு என்கிற ஒரு நச்சு வாயுவாகத் தான் வெளியேறுகிறது.
👉 சீனாவில் ஒரு மனிதனின் பிறந்தநாள் அவன் தாய் வயிற்று கருவில் உருவாகும் நாளில் இருந்தே கணக்கிடப்படுகிறது.
👉 ஆக்டோபஸ்க்கு மூன்று இதயம் இருக்கும். அதன் ரத்தம் நீல நிறத்தில் இருக்கும்.
👉 குரங்குகளுக்கு இரண்டு மூளை இருக்கிறது.
👉 சூரியனின் வயது 470 கோடி ஆண்டுகள்(2010 ஆண்டு வரை). பூமியின் மீது காணப்படும் பழைய பாறைகளை கொண்டு இதை கணக்கிட்டுள்ளனர்.
👉 சுகபிரசவம் அல்லாமல் தன் தாயின் வயிற்றில் இருந்து கிழித்து வெளியே எடுக்கப்பட்டவர் ஜூலியஸ் சீசர் . அதனால்தான் இந்த முறைக்கு சீசரியன் என்று பெயர் வந்தது.
👉 பிறந்து ஆறு முதல் எட்டு வாரங்கள் வரை குழந்தைகள் அழுதால் கண்ணீர் வராது.
👉 நான்கு வயது குழந்தைகள் ஒரு நாளைக்கு சுமார் 400 கேள்விகள் கேட்க்கும்.
👉 நாம் நேற்று கட்டிய பள்ளிகூடங்கள் எல்லாம் இன்று விரிசல் விழும் நிலையில் இருக்க
ஷி-ஹூவாங்-டி என்பரின் ஆட்சி காலத்தில் சீன பெருஞ்சுவர் கி.மு 200களில் கட்டப்பட்டது.
👉 தைவான் நாட்டில் உள்ள மூன்யூச் மரம் 4120 ஆண்டுகள் பழைமையானவை.
👉 காட்டுக்கே ராஜா என்று சொல்லும் விலங்கு சிங்கம் ஆனால் அதான் ஆயுட்காலம் 15 ஆண்டுகள் தான். வயிறு நிரம்பி இருந்தால்தான் சிங்கம் கர்ஜிக்கும்.
👉 மிக சிறிய இதயம் கொண்ட விலங்கு சிங்கம்.
👉 “லங்கா வீரன் சுத்ரா என்ற மத நூல் முழுவதும் ரத்தத்தால் எழுதப்பட்டது.
👉 தன் காதை (காது) நாக்கால் தொடும் ஒரே விலங்கு ஒட்டகம்.
👉 இலைகள் உதிர்க்காத மரம் ஊசி இலை மரம்.
👉 காட்டு வாத்து கருப்பு நிறத்தில்தான் முட்டையிடும்.
👉 குளிர் காலத்தில் குயில் கூவாது.
👉 எடிசன் தன் வாழ்நாளில் மொத்தம் 1368 கண்டுபிடிப்புகளை அறிமுகபடுத்தியுள்ளார்.
அவர் மூன்று மாதங்கள் மட்டுமே பள்ளிக்கூடம் சென்றவர்.
👉 லியான்னடோ டாவின்சி ஒரு கையால் எழுதி கொண்டே மறுகையால் படம் வரையும் திறன் உடையவர்.
அவர் வரைந்த உலகபுகழ் பெற்ற மோனாலிச ஓவியம் இடது கையால் வரையப்பட்டது.
👉 கரப்பான்பூச்சி தலையை வெட்டி எறிந்தாலும் அது தலை இன்றி ஒன்பது நாள் வரை உயிர்வாழும். ஒன்பதாவது நாளின் இறுதியில் அது பசியில் தான் இறந்து போகும்.
👉 கிளியும் முயலும் தன் பின்னால் இருப்பதை தலையை திருப்பாமலே கண்டுபிடித்துவிடும்.
👉 யானையின் கால் தடத்தின் நீளம் அளந்து, அதை ஆறால் பெருக்கி வரும் விடையே யானையின் உயரம்.
👉 கருவில் முதன் முதலில் உருவாகும் உறுப்பு இதயம்
மனிதன் இறந்து போனதும் முதலில் செயலிழக்கும் உறுப்பு இதயம்.
👉 1610 ஆம் ஆண்டு அமெரிக்க மக்கள் தொகை வெறும் 310 பேர் தான்.
👉 ஒரு ஆண்டு ஆணாகவும் அடுத்த ஆண்டு பெண்ணாகவும் மாறும் உயரினம் ஈரிதழ்சிட்டு.
👉 வால்டிஷ்ணி மொத்தம் 32 ஆஸ்கார் விருதுகளை பெற்றுள்ளார்.
👉 ஒருதலைமுறை என்பது 33 ஆண்டுகள்.
👉 பெரியார் பொதுக்கூட்டங்களில் மாநாடுகளில் சுமார் 21400 மணிநேரம் பேசியுள்ளார். அவருடைய சொற்பொழிவை ஒலிநாடாவில் பதிவு செய்தால் 2 ஆண்டுகள் 5 மாதங்கள் 11 நாட்கள் வரை தொடர்ந்து ஒலிபரப்பாகும்.
👉 ஒட்டகம் ஒரே சமயத்தில் ௦90 லிட்டர் தண்ணீரை குடிக்கும். ஆனால் ஒட்டகத்திற்கு தண்ணீரில் நீந்த தெரியாது.
👉 தத்துவம் பயின்று ஆன்மீகவாதியான பிறகுதான்
கராத்தே வீரர் ஆனார் புருஸ்லீ.
👉 சுவாரின் என்ற ஆஸ்திரேலிய நாட்டு பறவை குளிக்காமல் தன் கூட்டுக்குள் நுழையாது.
👉 விமானத்தில் இருக்கும் கருப்பு பெட்டிஆரஞ்சு நிறத்தில் இருக்கும்.
👉 சீல்வண்டுகள் 17 ஆண்டுகள் தூங்கும்.
👉 யானை குதிரை நின்று கொண்டே தூங்கும்.
👉 நீர் நாய் ஒன்றரை நிமிடம் மட்டுமே தூங்கும்.
👉 டால்பின் ஒரு கண் விழித்தே தூங்கும்
👉 புழுக்களுக்கு தூக்கம கிடையாது.
👉 நாம் இறந்து பிறகும் கண்கள் 6 மணிநேரம் பார்க்கும் தன்மையுடையது.