Monday, May 21, 2018

சிறுநிரக கோளாறு

மக்கள் நல்லுறவு பகிர்கிறது...

இத்தனை ஆண்டுகளில் நோயில் படுத்தவனில்லை. சிறு அறுவை சிகிச்சை கூட இல்லை. பதினைந்து நாட்களுக்கு முன் அடிவயிற்றில் கடும் வலி! பெங்களுரில் தவிர்க்க முடியாத திருமணங்கள். போய் விட்டேன் வலி அதிகமாயிற்று!

உடனே மருத்துவமனைக்கு சென்று காண்பிக்க ஸ்கேனில் சிறுநீரகக் கட்டி என்று வந்தது.

"உடனே அறுவை சிகிச்சை செய்யா விடில் உயிருக்கே ஆபத்து என்ற எச்சரிக்கை!"

நான் மறுத்துவிட்டு நிகழ்ச்சிகளை முடித்து விட்டு சென்னையில் என் குடும்ப டாக்டரிடம் காண்பிக்க அவரும் உறுதிப்படுத்தினார்...

என் மகன் அமெரிக்காவில் இருந்து உடனே வருவதாக தகவல் அனுப்பினான்...

என் மனைவி எத்தனை லட்சம் செலவானாலும் சரி என்று கதற ஆரம்பித்து விட்டாள்...

கையமர்த்திய டாக்டர், "முதலில் பதினைந்து நாட்களுக்கு ஒரு மருந்து தருகிறேன் அதில் குணம்
தெரியாவிட்டால் அறுவை சிகிச்சை செய்யலாம்" என்றார்.

அவர் கொடுத்த மருந்து நான்கு நாட்களில் வேலை செய்ய ஆரம்பித்தது. நேற்றோடு வலி போய்விட்டது...

டாக்டர் மீண்டும் ஸ்கேன் எடுத்துப் பார்க்க கட்டியும் போய்விட்டது...
எனக்கு ஆச்சரியம்…
"உங்களுக்கு குணமாகி விட்டது" என்றார்.

அவர் கொடுத்த மருந்து #Citralka என்ற 60 ரூபாய் ஸிரப்...

இந்த மருந்தை பற்றி 40 வருடங்களுக்கு முன்பே கேள்விப் பட்டிருக்கிறேன்

Urinary infection க்கு தலைசிறந்த மருந்து,

"ஏன் டாக்டர் இந்த மருந்தை யாரும் prescibe செய்வதில்லை?" என்று கேட்க...

அவரோ சிரித்துக் கொண்டே "பின்பு எப்படி லட்சங்களை கறப்பது?" என்றவர் 

"நம் நாட்டின் மிகப் பெரிய எதிரிகள் மருந்துக் கம்பெனிகள் மருத்துவ மனைகள், இவர்களை சரி செய்தாலே பலர் ஏமாற்றப்படுவது குறையும்" என்றவர், பல மருத்துவமனைகள் எனக்கு எதிராக செயல்படுகின்றன என் உயிருக்கே கூட ஆபத்து வரலாம்! 
I am agaist exploitation of innocent patients!" என்று முடிக்க அவரை ஒரு கேள்வி கேட்டேன்.

"ஏன் டாக்டர் நீங்கள் எப்போதுமே கறுப்பு கலரிலேயே உடை அணிகிறீர்கள்? உங்கள் காரில் சே'குவாரா ஸ்டிக்கர் இருக்கிறதே?" 
என கேட்க...

"நான் கடவுள் நம்பிக்கை உடையவன் தான், ஆனால் Anti Establishment... சுரண்டலுக்கு எதிரனவன் அதனால் சே' குவாரா பிடிக்கும்" என்றார்.

25 வருடங்களாக இன்சுலினிலேயே வாழ்ந்து வந்த எனக்கு சக்கரை நோயை ஒரே வருடத்தில் ஒழித்து... என்னை டசன் கணக்கில் '#இமாம்_பசந்த்' மாம்பழங்களை சாப்பிடும் அளவிற்கு குணமாக்கிய டாக்டர் இவர் தான்... இவர் ஒரு ஆங்கில மருத்துவர் MS படித்தவர் அவருடைய அனுமதியுடன் அவருடைய தொடர்பு தகவல்களை வெளியிடுகிறேன்.

Dr. V.Madhavan MD (Int. Med) Consultant Diabetologist/Physician*l

#CARE_CLINIC

For Appointments 044 65551839 24483314 (between 9 am and 1 pm)

At Chennai T Nagar, Thiruvanmiyur, Nanganalur. …

அவரைப்பார்க்க செல்லும் போது சமீபத்தில் நல்ல தரமான Labல் எடுக்கப்பட்ட FF , PP , HbA1c (3 மாத சராசரி சக்கரை அளவீடு) தகவல்களுடன் செல்லவும்

வடமாநில மார்வாடிகள்



தமிழக  மாவட்டங்களின்  வியாபாரம்...  ஓர் அலசல்

பத்தாண்டுகளுக்கு முன்பு வரை தமிழ்  சமூகத்திடமும், முஸ்லிம்கள் வசமுமிருந்த சிறு, குறு வியாபாரம் கொஞ்சம் கொஞ்சமாக வடநாட்டு மார்வாடிகள் கைப்பற்றி வருகின்றனர் என்பது அதிர்ச்சி அளிக்கிறது.

அன்று வட்டிக் கடையில் ஆரம்பித்து இன்று அனைத்து துறையிலும் வேகமாக வளர்ந்து வரும் வடமாநிலத்தவர்கள், முன்பு சென்னை,  மதுரை, கோவையை மையமாக வைத்து மொத்த வியாபாரம் செய்து வந்த வட மாநிலத்தவர்கள் தற்போது அனைத்து மாவட்டங்களில், நேரடியாக சில்லறை வணிகத்திலும்  ஈடுபட்டு வருகின்றனர்.

பெரும்பாலான கடைகளை விலைக்கு வாங்கி விடுகின்றனர்,  தற்பொழுது
முக்கிய சாலைகளில் உள்ள ரோட்டின் பெரும்பாலான வியாபாரம் மார்வாடிகள் கையில்.

பேல்பூரி, பானிபூரி தொடங்கி, பனியன் கம்பனி,  கட்டிட வேலை, தொழிற்சாலை வேலையில் அதிக பேர் உள்ளார்கள், முன்பு ஜவுளி வியாபாரத்தில் கவனம் செலுத்திய  குஜராத்திகள் கையில் தற்போது நகரின் பிளைவுட் வியாபாரம், செருப்பு மற்றும் பேக்ஸ் வியாபாரம்,  எலக்டிரிக்கல், சானிடரி மற்றும் பிளம்பிங் வியாபாரம்,  செல்போன் உதிரி பாகங்கள் மற்றும் மின்னணு உதிரி பாகங்கள் வியாபாரம், பிரமாண்டமாக ஸ்டேசனரி வியாபாரம்,  பரிசு பொருட்கள் வியாபாரம் டிஸ்போசபிள் கப் பிளேட் வியாபாரம் என்று நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

விலை குறைவாகவும் சீனா தயாரிப்பு பொருட்களையும் மார்வாடிகள் விற்பனை செய்வது காரணமாக பொருளின் தரத்தை பற்றி கவலைப்படாதவர்கள் வாங்கி செல்கின்றனர். மேலும் இவர்களின் நிறுவனங்களில் உள்ளூரைச்சேர்ந்த ஒருவருக்கு கூட வேலை வாய்ப்பு வழங்குவது கிடையாது.

புதிதாக கட்டப்பட்டு வரும் வணிக வளாகங்களில் கேட்கும் அட்வான்ஸ் மற்றும் வாடகை கொடுத்து இவர்கள் கடை எடுப்பதால் சிறிய முதலீட்டில் வியாபாரம் துவங்க முயற்சிக்கும் உள்ளூர் இளைஞர்கள் எதிர்காலம் கேள்விக்குறியாகிறது.

குமரி மாவட்டத்தில் நாகர்கோவில் தவிர்த்து மார்த்தாண்டம், கருங்கல், குலசேகரம் புதுக்கடை களியக்காவிளை என்று ஒவ்வொரு ஊரிலும் தங்களது வியாபாரத்தை விரிவுபடுத்தி வருகின்றனர்.

பல்லாண்டுகளாக வியாபாரம் செய்து வருபவர்களுக்கு கவலைக்குரிய விசயம் காரணம் அவர்களோடு போட்டி போட்டு வியாபாரம் பண்ண முடியாது என்ற எண்ணம் வந்து விட்டது, வடமாநிலத்தவரின் ஆதிக்கம் வருங்காலத்தில் தமிழ் நாட்டில் மேலும் அதிகரிக்கும், வருங்காலத்தில் தமிழக அரசியலை நிர்ணயம் செய்யும் அளவிற்க்கு வலிமை அடைந்தாலும் ஆச்சரியமில்லை!

Saturday, May 19, 2018

செல்வம் குறைவதின் அறிகுறிகள்

1. கழுவபடாத எச்சில் மற்றும் சமையல் பாத்திரங்கள் அதிக நேரம் அப்படியே இருப்பது.
2. வீட்டில் பெண்கள் விளக்கேற்றாமல் ஆண்கள் விளக்கேற்றுவது.
3. தலைமுடி தரையில் உலாவருவது.
4. ஒற்றடைகள் சேருவது.
5. சூரிய மறைவுக்கு பின் வீட்டை பெறுக்குவது துடைப்பது தூங்குவது.
6. எச்சில் பொருள்கள் பாத்திரங்கள் காபி கப்புக்கள் ஆங்காங்கே இருப்பது.
6. பெண்கள் தினமும் தலைக்கு குளிப்பவர்களை தவிர மற்றவர்கள் செவ்வாய் வெள்ளி தவிர மற்ற நாளில் தலை குளிப்பது.
7. ஆண்கள் புதன் சனி தவிர மற்ற நாளில் தலை குளிப்பது.
8. குழாய்களில் தண்ணிர் சொட்டுவது.சுவற்றில் ஈரம் தங்குவது.
9. செல் (கரையான்) சேருவது.
9. பூராண் போன்ற விஷ ஜந்துகள் உலாவுவது.
9. அதிக நேரம் ஈர துணிகள் போட்டு வைப்பது. தேவைக்கு அதிகமான பொருட்கள் வைத்து இருப்பது. வீணடிப்பது.
10. உணவு பொருள்கள் வீண்ணடிப்பது.
11. உப்பு பால் சர்க்கரை அரிசி போன்றவற்றை சுத்தமாக தீரும் வரை வாங்காமல் இருப்பது, மீண்டும் வாங்காமல் அதன் பாத்திரங்களை கழுவி வைப்பது.
12. குறைந்த பட்ச வெளிச்சம் இல்லாமல் மின்சாரம் சேமிப்பதாக வெளிச்சங்களை குறைப்பது.
13. மெல்லிசை கேட்காமல் சதா காலம் ராஜச இசையை, அபச இசைகளை கேட்பது.
14. இல்லை இல்லை வராது வராது வேண்டாம் வேண்டாம் போன்ற வார்த்தைகளை அதிம் உச்சரிப்பது.
15. படுக்கையையும் பூஜை பொருட்களையும் வேலையாட்களை கொண்டு சுத்தம் செய்வது.
16. வாசலில் செருப்பு துடப்பம் போன்றவற்றால் அலங்கோலப்படுத்தி வைத்து இருப்பது.
இவற்றை தவிர்த்து, வளமுடன் வாழ்க வளர்க நட்புடன்.

மாற்றிக்கொள்

நம் மனித சமுதாயத்தில் ஜாதி மதத்தை கொண்டும், பதவி கட்சியை கொண்டும் ஒருவனை ஒருவன் அழித்துவிட நினைக்கிறான் 

உலகம் முழுவதும் அப்படிபட்ட எண்ணம் கொண்டவர்கள் மெல்ல மெல்ல வளர்ந்து வருகிறார்கள், ஆனால் இறுதியில் அவமானப்பட்டு, அடிபட்டு மிதிபட்டு நாயை விட  கேவலமாக செத்துக்கொண்டு இருக்கிறான் 

ஒருவன் தவறு செய்தால் அவனை தண்டிக்க சட்டம் இருக்கிறது, அதைவிட பெரிது நம்மை படைத்த இறைவன் இருக்கிறார் அவர் பாத்துக்கொள்வார் என்ற நம்பிக்கை வேண்டும், 

ஒருவன் மற்றவனை குறை சொல்ல எந்த அருகதையும் அவனுக்கு கிடையாது, இறுதியில்  குறை கூறுகிறவனும் எதவாது ஒரு வகையில்  தவறு செய்தவனாக உலகிற்க்கு காட்டப்படுவான், அதேசமயம் ஒருவனுடைய  தவறை   மறைக்க கூடாது, அதை நீயாயப்படுத்தி பேசக்கூடாது, தவறுக்கும் துணைபோகக் கூடாது.

கொஞ்ச நாளாக ஒருவர் மற்றொருவரை படுமோசமாக கீழ்த்தரமாக விமர்சித்து வருகின்றனர் அவர்கள் விமர்சனத்தை படிக்கவே மனம் கூசுகின்றது அந்தளவுக்கு தரம்தாழ்ந்து பதிவிடுகிறார்கள், அதை பகிர்ந்தும் வருகிறார்கள், வேண்டாம் இந்த செயல், மனிதஇனம்  அமைதியாக சாந்தியும் சமாதானமாக, வாழத்தான் விரும்புகிறது, அதற்கேற்ப முயற்சி செய்யுங்கள், அடுத்தவர் மனம் நோகும்படியான எந்த செயலுக்கும் துணை போகாதீர்கள், அதை செய்யாதீர்கள்.

உங்களை சுற்றியுள்ள சூழ்நிலையை மாற்றுங்கள், நட்பை பலப்படுத்துங்கள், இனியாவது இறைவனுக்கு பயந்து நடந்து  கொள்ளுங்கள், மனித நேயத்தை காட்டுங்கள்! 

எவரால் மனித இனத்திற்க்கு அதிக நன்மை ஏற்படுகிறதோ அவரே மனிதரில் மிக சிறந்தவர்! 

அன்புடன் கோவை மக்கள் நல்லுறவு

Monday, May 14, 2018

வாத வகைகள்

➖➖➖➖➖➖➖➖
🌴வாத நோய்கள் 🌴
 ➖➖➖➖➖➖➖➖

       வாதம் என்றால் கொடுமை என்று பொருள். அழையாத வீட்டிற்குள் வரும் விருந்தாளியைப் போல் வாதமானது உடலில் திடீர் என தாக்கும்.

     நல்ல இரத்தம் உள்ளவர்களை நோய் தாக்கினால் அது அவ்வளவாக முதலில் தெரியாது .

நாள் செல்ல செல்ல ஆரோக்கியம் குன்றிய நிலை வரும் போது வாத நோய் மேலோங்கி வருகின்றது.

இது நிலையாக நிலைத்து விடாமல் இருக்க நல்ல சிகிச்சை வேண்டும். இல்லையேல் அசாத்தியமாக முடியும்.

வாத வகைகள். 
...........................

       உடல், கை , கால் நொந்து கடுத்து பலங்கெட்டு அசதி , சோம்பல், தூக்கம் மிகுந்தால் வாதமென்றும். 

தேகத்தில் பல இடங்களில் துடித்தடங்கினால் துடி வாதமென்றும்,

தேகம் வெதும்பி உளைந்து சிசிறுத்து நடுங்கி நா வரண்டால் நடுக்கு வாதமென்றும், 

ஒரு பீசம் வீங்கி வலித்து மேல் நோக்கி ஏறினால் அண்ட வாதமென்றும், 

சந்தில் பிடித்து விடாமல் உளைந்து வலித்து மாலையில் அதிகரித்து உடல் மெலிந்து தாது கெட்டால் சந்து வாதமென்றும், 

தேகம் மெலிந்து உளைந்து பல இடங்களில் ஓடி குத்தி பலங்குறைந்து நாவும் பல்லும் வரண்டால் ஓடு வாதமென்றும், 

தோள் வீங்கி கண்டம், பிடரி வலித்து கடுத்தால் தோள் வாதமென்றும், 

ஒரு புறத்தில் கையும் காலும் விழங்காதிருந்தால் பக்க வாதமென்றும்,

 கழுத்தை திருப்பி பார்க்க முடியாமல் பிடித்துக் கொண்டால் கழுத்து வாதமென்றும், 

இரவும் பகலும் விடாமல் சிரசு வலித்தால் சிரசு வாதமென்றும், 

திருத்தமாய் பேச ஒட்டாமல் நாவை இழுத்துக் கொண்டால் தம்பன வாதமென்றும், 

பல் அசைந்து வலித்தால் தந்த வாதமென்றும், 

இரு செவியும் மந்தித்தால் கர்ணீக வாதமென்றும், 

விரல்கள் விறைத்து பொருளை பிடிக்க முடியாமல் இருந்தால் அங்குலி வாதமென்றும்,

முன் கை இரண்டும் வீங்கி வலித்தால் முன் கை வாதமென்றும், 

முகம் ஊதி கடுத்தால் வதன வாதமென்றும், 

இடுளப்புளைந்து கடுத்து குனிய நிமிர கூடாதிருந்தால் இடுப்பு வாதமென்றும்,

 ஆசனம் நோந்து கடுத்தால் உருளை வாதமென்றும், 

துடை கடுத்து நடக்காதிருந்தால் துடை வாதமென்றும், 

முழங்கால் வீங்கி கடுத்தால் முழங்கால் வாதமென்றும், 

கெண்டைக்கால் கடுத்து வலித்தால் கெண்டை வாதமென்றும், 

குதிங்கால் வீங்கி கடுத்தால் குதி வாதமென்றும், 

வாய் கடுத்து அங்கு கிட்டி வியர்த்து  பேச முடியாமல் இருந்தால் வாய் வாதமென்றும், 

தண்டு பொருமி வீங்கினால் தண்டு வாதமென்றும், 

கை,காலை சுருங்க வாங்கி இழுத்துக் கொண்டால் வாண வாதமென்றும், 

அடிக்கடி தேகத்தை வில் போல் வளைத்து வியர்த்து நா உழறி பற்கிட்டி மேல் மூச்சு கண்டால் தனுர் வாதமென்றும், 

இரு காலிலும் இரத்தங்கட்டி அயர்ந்தால் சுரோணித வாதமென்றும், 

தூர நடக்க முடியாமலும் உண்ட உணவு செரிக்காமலும் ஏப்பம் பரிந்து கொண்டிருந்தால் அஜீரண வாதமென்றும்,

 உதரத்தின் மேல் நரம்பு பசுமையாய் தோன்றி மூலாக்கினி மந்தித்து உடல் வெளுத்தால் கப வாதமென்றும், 

குடல் புரண்டு குமுறி இனைந்து வலித்து மந்தித்து பரந்தொடி வலித்து காலுளைந்தால் குடல் வாதமென்றும் அறிக.

தென்னை மரக் கருவிகள்

Coimbatore- Tamilnadu
Contact - 099657-35768 ( what's app)

1.தென்னை  மரம் &பனை  மரம்   ஏறும் கருவி (coconut  tree &palm tree Climber.  Rs.3100

2..இளநீர் வெட்டும் கருவி(Tendor coconut machine) Rs.7750

3.மாட்டு தீவனம் வெட்டும் மெஷின்(Chaff  cutter 
machine)Rs.17500 to 28000

4. செடி , பயிர் நடும் கருவி ( Seedling planter) Rs.2500

5.உரம்  போடும்  கருவி ( Fertilizer planter) Rs.2500

6.. மருந்து அடிக்கும் கருவி(  Spraying machine blower onlyRs.2500

7. களை பறித்தல் machine   rs6500

8. Brush cutter Rs.10500

பட்டா வகைகள்

எட்டு வகையான பட்டாக்கள் - சட்டம் தெளிவோம்.
****************************************************************************

ஒருவரிடம் நிலம் உரிமையாகி இருக்கின்றது என்றால் இரண்டு ஆவணங்கள் முக்கியமாக இருத்தல் வேண்டும்.

ஒன்று பத்திரம்,

இன்னொன்று பட்டா.

பத்திரம் – பதிவுத்துறை சார்ந்த ஆவணம்,

பட்டா – வருவாய்த்துறை சார்ந்த ஆவணம்.

இதில் பட்டாவை பற்றி இப்பகுதியில் காண்போம்!

பட்டா என்பது நில உரிமை ஆவணம்! அதில் தற்பொழுது யார் பெயரில் இருக்கிறதோ அவரே தற்போதைய உரிமையாளர்.

பட்டா ஆவணத்தில் மாநிலம், மாவட்டம், வட்டம், கிராமம், நிலத்தின் சர்வே எண், என்ன வகையான நிலம், வரிதொகை எவ்வளவு, இடத்தின் விஸ்தீரணம், உரிமையாளர் பெயர் மற்றும் அவரின் தந்தை பெயர் இருக்கும்.
கூடுதலாக ஏதாவது நிலத்தை பற்றி குறிப்பு தேவைப்படின் அந்த குறிப்பு இருக்கும்.

அடுத்ததாக முக்கியமாக அறிந்து கொள்ள வேண்டிய பட்டாக்களின் வகைகளை கீழே பார்க்கலாம்!!

1. யு.டி.ஆர் பட்டா:
********************************************

யூ.டிஆர்.பட்டா
மேனுவலாக கண்டபடி இருந்த நில உரிமை ஆவணங்களை முறைபடுத்தி ரீசர்வேக்கள் செய்து அனைத்து கிராமத்து நிலங்களுக்கும் சென்று (நத்தம் நிலங்கள் தவிர) நேரடி கள விசாரனை செய்து (வீட்டில் உள்ள ஆவணங்களை புத்தகங்கள் எல்லாம் தேவையுள்ளது தேவையற்றது என பிரித்து நம்முடையது பிறருடையைது என ஒமுங்குபடுத்தும் வேலையை போல்) மிக பெரிய அளவில் 1979 முதல் 1989 வரை தமிழகம் முழுவதுமாய் யு.டி.ஆர. பட்டா (Updating Data Registry ) தந்து அதனை கம்ப்யூட்டரில் ஏற்றினார்கள்.
அதாவது மேனுவல் ஆவணங்கள் கணினி மயமானது முதல் இப்பொழுது வரை இதனை தான் பட்டா ஆவணமாக பயன்படுத்தி வருகிறோம், தற்பொழுது இவை எல்லாம் ஆன்லைனில் ஏற்றப்பட்டு விட்டது.

மேனுவல் பட்டா

இப்பொழுது நடக்கும் சொத்து பரிவர்த்தனைகளுக்கான பட்டா பெயர் மாற்றங்கள் சர்வே எண் உட்பிரிவுகள் பெரும்பாலும் இந்த பட்டாவில் தான் நடக்கிறது. பட்டாவில் பெயரை சேர்த்தல், பட்டாவில் பெயரை மாற்றுதல், பட்டாவில் சர்வே எண் உட்பிரிவு செய்தல், போன்ற வேலைகளுக்கு இன்னும் பலர் அரசு,எந்திரத்துடன் போராடி வருகின்றனர்.
இன்னும் பலர், பட்டாவில் தந்தை பெயர் பிழை, தன் பெயர் பிழை, சர்வே எண் பிழை, அளவு பிழை என்று அதனை திருத்துவதற்கும் அலைந்து கொண்டு இருக்கிறார்கள். இன்னும் நிறைய இளம் தலைமுறையினர் தன் பூட்டன் ,தாத்தா, பங்காளி ,அப்பா பெயரில் இருக்கும் பட்டாவை மாற்றாமல் நிலுவையில் வைத்து இருக்கிறார்கள்.
இவர்கள் பட்டாவை கிராம கணக்கரிடம் கொண்டு சென்றால் தான் பல நிதர்சனங்கள் புரியும்.

2. நத்தம் நிலவரி திட்டம் -தோராய பட்டா & தூய பட்டா:
**********************************************************************

தோராய பட்டா பின்பக்கம்
தோராய பட்டா முன்பக்கம்
யூ.டி.ஆர் பட்டாவில் நத்தம் நிலத்தை தவிர மீதி நிலங்களை பட்டியல் இட்டார்கள், அளந்தார்கள்! நத்தம் என்பது பொதுமக்களுக்கு குடியிருப்பு தேவைக்காக வெள்ளைகாரன் காலத்திலேயே வகை படுத்தப்பட்டு ஒதுக்கப்பட்டது.
பெரும்பாலும் நத்தம் நிலம் பழைய ஊர்களிலேயே அமைந்து இருக்கும்.அந்த நத்தம் நிலத்திற்குதான் தோராய மற்றும் தூய பட்டா வழங்கினர்.
தோராய பட்டா என்பது நத்தம் நிலத்தில் உள்ள ஏரி, குளம், வீடு, தெரு என பிரித்து வரைபடம் உருவாக்கி, புதிய சர்வே எண்களை கொடுத்து நத்தம் நிலவரித்திட்ட பட்டா அதில் குடியிருந்தவர்களுக்கு வழங்கியது.
நத்தம் நிலவரித்திட்ட தோராய பட்டாவில் ( பிழைகள், தவறுகள் இருக்கலாம் ) அதில் ஏதாவது சிக்கல்கள்,பெயர் பிழைகள் அளவு பிழைகள் இருப்பதை மக்கள் தெரிவித்தால் அதனை திருத்துவதற்க்கு கால அவகாசம் கொடுத்து கொடுக்கும் பட்டா, “தோராய பட்டா” இது ஒரு தற்காலிகமான பட்டா!
முழுமை விவரம் பெற்று தவறு எல்லாம் களைந்து மக்களுக்கு கொடுப்பது நத்தம நிலவரி திட்ட தூயப்பட்டா ஆகும்
அதாவது கல்யாண பெண் மேக்கப்க்கு முன் மேக்கப்புக்கு பின் என்பதில் இருக்கும் வித்தியாசம்தான் தோராய பட்டாவுக்கும் தூயபட்டாவுக்கும் உள்ள வித்தியாசம். பெரும்பாலும் இரண்டு பட்டாவும் மேனுவலாகவே இருக்கும். பட்டா ஆவணத்தின் பின்புறம் நிலத்தின் வரைபடம் அளவுகளுடன் வரையபட்டு இருக்கும்.
ஒரு சிலர் தோராய பட்டா வாங்கியதும் பட்டா வாங்கிவிட்டாடோம் என்ற சந்தாதோஷத்தில் இருந்து விடுவார்கள். அதில் அளவுபிழைகள் இருக்கிறதா என நிலத்தை அளந்து ஒப்புமைபடுத்தி சரி பார்த்துகொள்ள வேண்டும்.
ஏனென்றால் நத்தம் நிலத்தில் இதுவரை இவ்வளவு இடம் நீ அனுபவிக்கிறாய் என ஆவணபடுத்தபடவில்லை, தோராய பட்டா வழங்கும் போது நீங்கள் அனுபவிக்கும் இடம் ஆவண படுத்தப்படுகிறது என்பதை நினைவில் கொள்ளவும்.

தூய பட்டா:

நத்தம் நிலத்திறகு அரசு பட்டா வழங்குவது பொதுமக்களுக்கு என நினைக்க வேண்டாம். வரி விதிக்காமல் நீங்கள் அனுபவிக்கும் நிலத்தை வரி விதிப்புக்குள் கொண்டு வரவும், சாலை, குளம் ,பாதை இடங்களை ஆவணப்படுத்தி ஆக்கிரமிப்புகள் ஆகா வண்ணம் தடுக்கவும் நத்தம் நிலவரி திட்டத்தினை செயல்படுத்தபடும் போது
பை புராடக்டாக தங்களுக்கு பட்டா வழங்கபடுகிறது.
எனவே நிலவரிதிட்ட தோராய பட்டா வழங்கும் போது நிலத்தின் அளவுகளை கட்டாயம் சரி பார்க்கவும் இன்னும் பலர் தோராய பட்டா வாங்கியதுடன் நின்று விடுவர். தூயபட்டா அடுத்த ஆறுமாதத்துக்குள் கொடுத்து இருப்பர். அதனை அணுகி வாங்காமலேயே தோராய பட்டாவையே நிரந்தரபட்டா என்று நினைத்து கொண்டு இருப்பர்.

3. ஏ.டி கண்டிசன் பட்டா :
*********************************************************************

ஏ.டி.கண்டிசன் பட்டா என்பது வட்ட ஆதிதிராவிடர் நலன் தாசில்தார் அவர்கள் வீட்டுமனைகள் இல்லாத பழங்குடியினர் & ஆதிதிராவிடர் மக்களுக்கு கிராமத்தில் உபரியாக இருக்கும் புறம்போக்கு நிலத்தில் மனைகளாக பிரித்து அம்மக்களுக்கு ஒப்படைப்பர்.
மேலும் மத்திய மாநில அரசு நிதி ஒதுக்கும் பட்சத்தில் தனியார் இடம் உள்ள நிலத்தை கிரைய பேர பேச்சு மூலம் ஆதிதிராவிடர் நலத்துறை கிரயம் வாங்கி , பழங்குடி ஆதிதிராவிடர் மக்களுக்கு மனைகளாக பிரித்து ஒப்படைப்பார்.
அப்படி ஒப்படை செய்யும் போது , கொடுக்கும் பட்டா ஏ.டி.பட்டா ஆகும். அது பெரும்பாலும் மேனுவல் பட்டாவாகவே இருக்கும். பெண்கள் பெயருக்கு தான் வழங்குவது மரபாக இருக்கிறது.
பட்டா ஆவணத்தில் பட்டா பெறுபவரின் புகைப்படம் ஒட்டி தனிவட்டாட்சியர் கையெழுத்து இட்டு இருப்பார். இதில் பல கண்டிசன்கள் இடம் பெற்று இருக்கும்.
முக்கியமாக மேற்படி இடத்தை பெறுபவர் வேறு யாருக்கும் குறிப்பிட்ட காலத்திற்கு விற்க கூடாது. விற்றாலும் பழங்குடியினர் அல்லது ஆதிதிராவிடராக இருத்தல் வேண்டும் என்ற கண்டிசன்கள் முக்கியமானதாக இருக்கும்
இதே தன்மையில் பயிர் செய்ய நிலமில்லாத ஆதிதிராவிட பழங்குடியின மக்களுக்கு 5௦ சென்டில் இருந்து ஒரு ஏக்கர் வரை விவசாய நிலங்கள் ஒப்படைக்கப்படும்.

4. நில ஒப்படை பட்டா:
*********************************************************************
 
நில ஒப்படை பட்டா
வீட்டு மனைகள் ! விவசாய நிலங்களை அரசு இலவசமாக ஒப்படைப்பது ஒப்படை பட்டா ஆகும். !
முன்னாள் ராணுவ வீரர்கள் , பிற்படுத்தப்பட்ட ஏழை மக்கள் , நலிவுற்றவர்கள், அரவாணிகள், போன்றோர்களுக்கு அரசு நிலங்களை இலவசமாக கொடுக்கும். அதனை நில ஒப்படை பட்டா என்பர். இவற்றிலும் குறிப்பிட்ட ஆண்டுகளுக்கு பின் பிறருக்கு விற்க கூடாது என்று கண்டிசன்கள் இருக்கும். இதனை டி.கார்டு கண்டிசன் பட்டா என்றும் சொல்லுவர்.

5. டி.எஸ்.எல்.ஆர் பட்டா:
*********************************************************************

டி.எஸ்.எல்.ஆர் பட்டா
டி.எஸ்.எல்.ஆர் பட்டா என்பது டவுன் சர்வே லேன்ட் ரெகார்ட் ஆவணம் . இது நகராட்சி மற்றும் மாநகராட்சி பகுதிகளில் நகர் சர்வேயர்களை கொண்டு நிலங்களை மிக துல்லியமாக சர்வே செய்து உருவாக்கபடும் ஆவணகளில் இருந்து பொதுமக்களுக்கு ஒரு EXTRACT எடுத்து கொடுப்பார்கள் . இந்த TSLR EXTRACT என்பது பட்டாவுக்கு இணையான ஆவணம் ஆகும் .
கிராம பகுதிகளில் இருக்கும் பட்டாவிற்கும் நகர பகுதிகளில் இருக்கும் பட்டாவிற்கும், இருக்கும் வித்தியாசம் என்னவென்றால், நகர பகுதிகளில் ஒவ்வொரு சதுர அடியும் மதிப்பு மிக்கது , அதனால் ERROR மிக மிக குறைந்தே இருக்கும்.
ஆனால் கிராம பகுதி சர்வேகளில் ஏக்கருக்கு 5 சென்ட் கூடுதல் குறைதல் இருக்கலாம். அதனால் அதிக துல்லியமும் , எச்சரிக்கை உணர்வுடனும் நகர பகுதி சர்வேக்கள் செய்யபடுகிறது.

6. தூசி பட்டா:
****************************************************************

தூசி பட்டா
கிராம கணக்கில் 2 ம் நம்பர் புக்கில் “C” பதிவேட்டில் கொடுக்கும் பட்டா 2C பட்டா ஆகும். ஆனால் பேச்சு வழக்கில் தூசி பட்டா என்று அழைக்கபடுகிறது.
அரசு நிலத்தின் மேல் இருக்கும் (புளியமரங்கள், பனை மரங்கள் , கனி தரும் மரங்கள், ) மரங்களை அனுபவிக்க பராமரித்து கொள்ள , மேற்படி மரங்களுக்கு உரிமையளித்து கொடுக்கப்படும் பட்டா 2C பட்டா இதனை மர பட்டா என்றும் அழைப்பர்.

7. கூட்டு பட்டா:
*************************************************************************

தனிப்பட்டாவுக்கு நேர் எதிர் கூடுப்பட்டா , கூட்டுபட்டாவில் நிலத்தின் அளவு, சர்வே எண் உட்பிரிவு, FMB – சப்டிவிசன் தனி தனியாக யார் யாருக்கு எவ்வளவு என்று குறிப்பிட்டு இருக்காது, உதாரணமாக ஒரு பெரிய கேக்கை (யார் யாருக்கு எத்தனை துண்டு, எந்த பக்கம் என்று சொல்லாமல் ) நான்கு மகன்களிடம் கொடுத்து நீங்களே பிரித்து கொள்ளுங்கள் என்று சொல்வது போல் தான்.
நிலத்தில் நான்கு பேரோ, மூன்று பேரோ, இரண்டு பேரோ, அல்லது பல பேரோ ஒவ்வொரு மூலையில் நின்று அனுபவிப்பர். அவர்கள் பெயர்கள் எல்லாம் பட்டாவில் இருக்கும் ஆனால் சர்வே எண் உட்பிரிவு, அளவு பிரிவு, FMB உட்பிரிவு, செய்யப்பட்டு இருக்காது, பட்டாவே இல்லாமல் இருப்பதற்கு கூட்டு பட்டா சிறந்தது, கூட்டு பட்டவை விட தனிப்பட்டா சிறந்தது.
தனி பட்டா மற்றும் கூட்டு பட்டா

8, தனிபட்டா:
***************************************************************
தனிபட்டா என்பது தனி நபர் ஒருவர் பெயரில் இருக்கும் . மேற்படி நிலத்தின் சர்வே எண்ணில் தனியாக சப் டிவிசன் செய்யப்பட்டு இருக்கும். பேச்சு வழக்கில் பட்டா உடைந்து இந்த நபர் பெயருக்கு மாறி இருக்கும் என்று சொல்வோம்.
புல எண் வரைபடத்திலும் இவருடைய நிலத்துக்கு உட்பிரிவு வரைபடம் வரையப்பட்டு இருக்கும். தனிபட்டாவில் பெயர், நில அளவு, புல எண் உட்பிரிவு, FMB சப் டிவிசன் , ஆகியவற்றில் 1௦௦% தெளிவாக இருக்கும்.
யு.டி.ஆர் பட்டா,நத்தம் நிலவரி திட்டம் -தோராய பட்டா & தூய பட்டா ஏ.டி.கண்டிசன் பட்டா , நில ஒப்படை பட்டா , டி.எஸ்.எல்.ஆர் பட்டா, தூசி பட்டா, ஆகிய 6 பட்டாவும் யாருக்கு எத்தன்மையில் வழங்கபடுகிறது என பிரிக்கப்பட்டு இருக்கிறது .

தனிபட்டா கூட்டுபட்டா என்பது பட்டா ஆவணத்தின் தன்மையை பொறுத்தது என்பதை புரிந்து கொள்ளலாம்.