Tuesday, June 28, 2016

மஞ்சக்காமாலை


பொதுவாக மஞ்சள் காமாலை நோய், பித்தம் அதிகரிப்பதால் வருகிறது. கல்லீரல் செல்கள் பித்தநீரை வெளிப்படுத்தாதபோதும், பித்தப்பையில் இருந்து பித்தநீர் குடலுக்கு வருகின்ற பாதையில் ஏற்படும் அடைப்பினாலும் காமாலை ஏற்படுகிறது. 

மேலும், ரத்த சிவப்பணுக்கள் அழிவதினாலும், பிறவிலேயே ரத்தத்தில் உள்ள பிலிரூஃபின் அளவு அதிகரித்துக் காணப்படுவதாலும், காமாலை நோய் வைரஸ் கிருமிகளாலும், சில வகை மருந்துகளினாலும், மது அருந்துவதாலும் ஏற்படுகிறது.

அறிகுறிகள்:
சோர்வு, பலவீனம், உடல் அரிப்பு, வாந்தி, குமட்டல், பசியின்மை, மலக்கட்டு, கழிச்சல், சுரம், மஞ்சள் நிறத்தில் சிறுநீர் போன்ற அறிகுறிகள் காணப்படும்.

சித்த மருத்துவத்தில் எளிய தீர்வுகள்:

கீழாநெல்லி இலை, வேர் இரண்டையும் அரைத்து நெல்லிக்காய் அளவு மோரில் கலந்து பருகலாம்.

அரை ஸ்பூன் கடுக்காய்ப்பொடியை நீரில் கலந்து குடிக்கலாம்.


அருநெல்லி இலையை அரைத்து சிறு நெல்லிக்காய் அளவு மோரில் கலந்து அருந்தலாம்.

கொன்றைப் பூவையும், கொழுந்தையும் அரைத்த சுண்டைக்காய் அளவு மோரில் கலந்து பருகலாம்.

சுரை இலை கைப்பிடி அளவு எடுத்து இரண்டு டம்ளர் நீர் சேர்த்து அரை டம்ளராக வற்றவைத்து சர்க்கரை கலந்து அருந்தலாம்.


வில்வ இலைச் சாறு 30 மிலி எடுத்து அதில் மிளகுத் தூள், சர்க்கரை கலந்து பருகலாம்.

வேம்பின் துளிர், முதிர்ந்த இலை இரண்டையும் பொடித்து இதற்கு அரைபங்கு ஒமம், உப்பு சேர்த்து அதில் அரை ஸ்பூன் உண்ணலாம்.

நெல்லி வற்றல், மஞ்சள், புதினா சம அளவு எடுத்துப் பொடித்து அதில் அரை ஸ்பூன் எடுத்து நீரில் கலந்து அருந்தலாம்.

15 மி.லி. கரிசலாங்கண்ணிச் சாறுடன், சர்க்கரை கலந்து பருகலாம்.

ஒரு ஸ்பூன் வெட்டி வேர்ப்பொடியில் அரை டம்ளர் நீர் சேர்த்து ஒரு மணி நேரம் ஊறவைத்து வடித்துப் பருகலாம்.

சிற்றாமணக்கு இலையையும், கீழாநெல்லியையும் சமஅளவு எடுத்து அரைத்து மூன்று நாட்கள் காலையில், சிறு எலுமிச்சை அளவு உண்டு, பிறகு சிவதைப் பொடி அரைஸ்பூன் உண்ணலாம்.
செங்கரும்பின் சாற்றை ஒரு டம்ளர் காலை மாலை அருந்தலாம்.

சீரகத்தைக் கரிசாலைச் சாற்றில் ஊறவிட்டு பொடித்தப் பொடி நான்கு கிராம், சர்க்கரை இரண்டு கிராம், சுக்குப் பொடி இரண்டு கிராம் கலந்து அதில் ஒரு ஸ்பூன் உண்ணலாம்.

மிளகின் பழச்சாறு 15 மிலி எடுத்து மஞ்சள் பொடி கால் ஸ்பூன் சேர்த்து அருந்தலாம்.


அன்னாசிப் பழத்தை நன்கு பிழிந்து சாறு எடுத்து 30 மிலி அருந்தலாம்.

நெருஞ்சில் இலைச்சாறு 30 மி.லி.யுடன் சர்க்கரை கலந்து பருகலாம்.

பத்து கிராம் வேப்பம் பட்டை நசுக்கி, அதில் இரண்டு டம்ளர் நீர் விட்டு அரை டம்ளராக காய்ச்சி அருந்தலாம்.

சேர்க்க வேண்டியவை:

சின்ன வெங்காயம், மோர், இளநீர், பேயன் வாழைப்பழம் (அ) நாட்டு வாழைப்பழம், மொந்தன் வாழைப்பழம், வெண் பூசணி, தர்பூசணி, மாதுளம்பழம், வெள்ளரிக்காய்.

தவிர்க்க வேண்டியவை:

அசைவ உணவுகள், எண்ணெய், நெய், காரம்.

Locker


Bank locker பற்றி தெரிந்து கொள்ளுங்கள்....
வங்கி பாதுகாப்பு பெட்டகம்
(லாக்கரில்)  வைக்கும் பணம் நகை Documents, மூலம் பாதிப்பு உண்டாகலாம், எச்சரிக்கை.
*
திடீரென வங்கியில் தீப்பிடித்தோ, கொள்ளை நடந்தோ உங்கள் லாக்கரில் உள்ள பணம், நகை பரிபோனால் இழப்பீடு எதுவும் பெறமுடியாது.
*
இந்த விதிமுறை நம்மில் பலருக்குத் தெரியாது. அதனால், லாக்கரில் ரொக்கம் வைப்பதை விட, சேமிப்புக்கணக்கில் வைப்பது தான் சிறந்தது.வங்கியில் கொள்ளை நடந்தாலும் உங்கள் கணக்கில் பணம் பத்திரமாக இருக்கும்.
*
அதே போல, லாக்கரில் நகையை வைப்பதை விட, அதை அடமானம் வைத்து நகை கடன் பெறலாம்.
*
உதாரணமாக,10 சவரன் நகைக்கு 25,000 ரூபாய் நகை கடன் பெறலாம். அடுத்த நாளே 24,000 ரூபாயை திருப்பி செலுத்தி விடவேண்டும்.
*
வட்டி விகிதம் ஆண்டுக்கு 12% என்று வைத்து கொண்டாலும் 25,000க்கு ஒரு நாளைக்கு 8.25 செலுத்துவீர்கள்.
*
மீதத்தொகையான 1000 ரூபாய்க்கு மாதமொன்றுக்கு 10 ரூபாய் தான் வட்டி.
*
நகை தேவைப்படும் போது கணக்கை முடித்து கொள்ளலாம். நகையும் பாதுகாப்பாக இருக்கும்.
*
வங்கியில் கொள்ளை நடந்தாலும், தீ பிடித்தாலும் உங்கள் நகைக்கு வங்கி கண்டிப்பாக பொறுப்பேற்கும்...

Thursday, June 23, 2016

தயிர்

மக்கள் நல்லுறவு பகிர்கிறது

தயிர் தொடர்ந்து சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள் !!!
பலருக்கு தயிர், மோர் போன்றவை பிடிக்காது.
நான் இவைகளை எடுத்துக்கொள்ள மாட்டேன் என்று பெருமையாக சொல்வார்கள்.!!!


சிலருக்கு தயிர் இல்லாமல் ஏதுமில்லை.(நானும் இப்போ அப்படி ஆகிட்டேன். 3 வேளையும் தயிர்
என் டயட்டில் கட்டயமாக்கப்பட்டிருக்கு) தயிர் நம் உடலுக்கு ஒரு அரு மருந்து.குளிர்ச்சியைத் தரும். 

நல்ல ஜீரண சக்தியை தருவது தயிர்தான்.


பால் சாப்பிட்டால் ஒரு மணி நேரம் கழித்து  32%பால்தான் ஜீரணமாகியிருக்கும். ஆனால், தயிர் சாப்பிட்ட ஒரு மணி  நேரத்தில் 91% உடனே ஜீரணிக்கப்பட்டிருக்கும்.


பாலில் LACTO இருக்கிறது.
தயிரில் இருப்பது LACTOBACIL. இது ஜீரண சக்தியை தூண்டி வயிற்றின் உபாதைகளை சரி செய்கிறது.


வயிறு சரியில்லாத பொழுது வெறும் தயிர் சோறு மட்டுமாவது உணவாக உட்கொள்ளச் சொல்லி மருத்துவர்கள் சொல்வார்கள்.


பால் கூட வயிற்றை மந்தமாக்கி ஜீரண சக்தியை குறைக்கும் வாய்ப்பிருக்கிறது. ஆனால் தயிர்
அப்படி அல்ல.


அதிகமாக வயிற்றுபோக்கு ஏற்படும் பொழுது வெந்தயம் + தயிர் 1 கப் சாப்பிட்டால் வயிற்று
பொருமல் அடங்கும்.


பாலைதிரித்து உருவாக்கபடுவதுதான் பனீர். (பனீரைதனியாக எடுத்த பிறகு இருக்கும் 
whey புரதச் சத்துமிக்கதாகவும், வாந்தியை நிறுத்த உதவுவதாகவும் இருக்கிறது.


பிரியாணி போன்று உடலுக்கு சூடு தரும் உணவுவகைகளை சாப்பிடும்பொழுது வயிற்றுக்கு அதிகம் கேடு விளைவிக்காமல் இருக்கத்தான் தயிர் ரயித்தா சாப்பிடுகிறோம்.


மெனோபாஸ் பருவத்தை எட்டப்போகும் பெண்களுக்கு தயிர் மிகவும் உபயோகமாகிறது. உடலுக்குத் தேவையான அதிக கால்சியத்தை தயிர் வழங்குகிறது.


தயிரில் முக்கியமான வைட்டமின் சத்துகளும், புரதச் சத்துகளும் அடங்கியுள்ளது. கால்சியமும், ரிபோ ப்ளேவின் என்ற வைட்டமின் `பி' யும் தயிரிலிருந்தே பெறப்படுகிறது.

தயிரில் உள்ள புரோட்டீன், பாலில் உள்ள புரோட்டீனை விட சீக்கிரமாகவே ஜீரணமாகிவிடும். பாலை உட்கொண்ட ஒரு மணிநேரத்தில் 32 சதவீத பால் மட்டுமே ஜீரணப் பாதையில் செல்கிறது. ஆனால் தயிரோ 91 சதவீதம் ஜீரணமாகி விடும். இதனால் ஏற்படும் நன்மைகள் சில

1. பாலைத் தயிராக மாற்றும் பாக்டீரியா குடலில் உருவாகும் நோய் கிருமி பாக்டீரியாவின் வளர்ச்சியை தடுக்கிறது. த‌‌யி‌ரி‌ல் இரு‌க்கு‌ம் பா‌க்டீ‌ரியா ஜீரண சக்தியை அதிகரிக்கும் நன்மை செய்யும் பாக்டீரியாவை உருவாக்குகிறது.

2. ஒரு கை நிறைய தயிரை எடுத்து தலையில் நன்றாக தேய்த்தால் தூக்கம் நன்றாக வரும்.

3. சூரிய ஒளியில் பாதிக்கப்படும் நரம்புகளையும், தோல் பகுதிகளையும், தயிர் தனது ஆரோக்கியமான கலவைகளால் பாதுகாக்கிறது. பழச்சாறு உடலு‌க்கு‌த் தேவையான வைட்டமின் `சி'யை அளிக்கிறது. த‌யிரு‌ம் பழ‌‌ச்சாறு‌க்கு இணையான ச‌த்து‌க்களை‌க் கொ‌ண்டு‌ள்ளது.

4. மலச்சிக்கல் மற்றும் வயிற்றுப்போக்கு போன்றவற்றிற்கும் தயிர் தான் சிறந்த மருந்து.

5. அ‌ப்ர‌ண்டீ‌‌ஸ் மற்றும் வயிற்றுப் போக்கு‌க்கு காரணமாகும் கிருமிகள் தயிர், மோரில் உள்ள லேக்டிக் அமிலத்தால் விரட்டியக்கப்படும். மஞ்சள்காமாலையின் போது தயிரிலோ, மோரிலோ சிறிதளவு தேனைக் கலந்து உட்கொள்வது சிறந்த உணவு முறையாகும்.

6. மலம் கழித்த பிறகு சிலருக்கு மலக்குடலில் எரிச்சல் ஏற்படும். த‌யி‌ர் ம‌ற்று‌ம் எலுமிச்சை சாறு கொண்டு இதை குணப்படுத்தலாம்.

7. சில தோல் வியாதிகளுக்கு மோ‌ரி‌ல் நனை‌ந்த து‌ணியை‌ பா‌தி‌த்த இட‌த்‌தில் க‌ட்டி வருவது ‌சிற‌ந்த மரு‌ந்தாகு‌ம். தோல் வீக்க நோ‌ய்‌க்கு மோ‌ர் க‌ட்டு அருமையான மருந்தாகச் செயல்படுகிறது.

தயிர் சோறு உண்ண பிடிக்காதவர்களும் தயிரை உணவில் வெவ்வேறு விதமாக சேர்த்துக்கொள்ளலாம்.


1. தயிருடன் + சர்க்கரை சேர்த்து கலக்கி லஸ்ஸியாக உண்ணலாம்.

2. பனீர்கட்டிகள் உணவில் சேர்த்துக்கொள்ளலாம். (அதிகம் வேண்டாம், கொழுப்புச் சத்து அதிகமாகிவிடும்)

3. மோராக கடைந்து உப்பு,கொத்தமல்லி, கறிவேப்பிலை, பெருங்காயம் சேர்த்து நீர் மோராக்கி குடிக்கலாம்.


மக்கள் நல்லுறவு பகிர்கிறது

Wednesday, June 22, 2016

அமிழ்தம்


அமிழ்தம்

உலகில் 'அமிழ்தம்என்று ஒன்று இருக்குமானால் நாம் பருகும் நீரே ஆகும். அமிழ்தம் என்றால் 'இரவாதுஎன்று பொருள். ஏன்நஞ்சு போக்கும் மருந்து என்றும் கூறலாம். ஒரரிவு உயிரினம் முதல் ஆறறிவு உயிரினமான மனித இனம் வரை நிர் இன்றியமையாத ஒர் பானமாகத் திகழ்கிறது. நீர் இன்றி உயிர் இல்லை. உயிர் வாழ உணவு அவசியம். அந்த உணவு உற்பத்திக்கு நீர் அவசியம். நீர் இல்லாத நிலத்தை கண்ணால் பார்த்தாலே கண்கள் வெடிக்கும். உலகமே நீர் இல்லாமல் போனால் கணினியுகத்தை வேகமாக கானும் இன்றைய நாளில்அதை விட வேகமாக நீர்யுகத்தை கான மணிதம் மறந்தது ஏன்?

'மண்ணிண்று நீரெடுத்து விண்ணின்று பொழியும் மாமழை'

நாம் வாழும் பூமி 97 விழுக்காடு கடல் நீரைக் கொண்டுள்ளது. நாம் உண்ணும் நீர் குடல் வழியாகச் சென்று உடல் முழுவதும் சுமார் 75 விழுக்காடு நிறைந்துள்ளது.

''எங்கும் தண்ணீர் பொங்கும் கடலில்,அதில் உண்ணீர் ஒரு சொட்டு தங்குவதில்லை. ஆகவே கடல் வற்றும் அளவுக்கு கனரகளை உயர்த்தவேண்டும். மனிதனால் அமைக்கபட்ட ஏரி,குளம்,குட்டைகளில் மழை பெய்யும் பொழுது  நீர் தேங்கி நிற்கிறது  இப்படி தேங்கி நிற்கும் தண்ணீர்  ஆனது பூமிக்கடியில் சென்று நீரோட்டத்தில் கலந்து நிலத்தடி நீராக மாறுகிறது. சூரிய வெப்பத்தால் வின்னுக்கு நீராவியாகச் சென்று மழையாக பொழிகிறது. வான் உயரவான் மழை நீரால் வரப்புயரவரப்புயர் நீரால் நெல் உயர நல் கொற்றவன் குடை உயருமாம் ஒளவை வாக்கு. அதனின் கடலே வற்றிப் போகும் என்பது தின்னம்.

ஆனால்இங்கு வற்றிப் போவது என்னவோ! காவிரி தென்பென்னை பாலாறு தமிழ்நாடு கவலையாய் பார்த்ததொரு பொருனை நதி - என்று மேவிய பல ஆறுகள் வாட திருமேனி இழந்த தமிழ்நாடு என்று பாரதியின் கூற்று இவ்வாறு சொல்லும் அளவுக்கு நீர் நிலகளை இழந்து தவிக்கிறது தமிழ்நாடு.

தமிழ்நாடு மட்டுமல்லாமல் இன்னும் ஒரிரு ஆண்டுகளில் இந்தியாவே தண்ணீர் வளம் பெரும் தண்ணீர் பஞ்சத்தில் நிலைகுழைந்து போவது உறுதி என்கிறார் இஸ்ரோ விஞ்ஞானி திரு:கஸ்தூரி ரங்கன். (பார்க்க 23.01.2013 தினகரன் நாளிதழ் கோவை பதிப்பு பக்கம் என்: 9) ஏன் இந்த அவல நிலை ஒரு குடும்பம் அதில் குடும்பத்தலைவன்குடும்பத்தலைவியும் சரியாக ஒழுக்கமாக கடைமையை செய்யாவிட்டால் அந்த குடும்பம் பிரிந்து குழந்தைகள் அனாதைகளாக மாறி ஏன் திவிரவாதிகளாக கூட ஆவதற்கான சாத்தியகூறுகள் உள்ளன.

எனவே மத்திய மாநில அரசுகள் எங்களுக்கு தந்தையும் தாயுமாக நின்று நீர் வளத்துறையை கடமையில் இருந்து விழகாமல்அதேசமயம் அந்தக் கடமையை சொத்தையில்லாமலும்சத்தானதாகவும் செய்திட்டாலே அன்னையும் பிதாவும் முன்னரி தெய்வமாக விளங்குவதற்கு மிகச்சிறந்த எடுத்துக்காட்டாக விளங்கும்.

இது வரை காவிரி நதி நீர் பங்கீடு தொடர்பாக நடந்த நிகழ்வுகள்:

மேட்டூர் அனை கட்டப்பட்டது 1925 முதல் 1934 ஆம் வருடம் வரை.

1924 ஆம் ஆண்டு நதிநீர் பங்கீடு ஒப்பந்தம் போடப்பட்டது.
கர்நாடக அரசு ஏற்றுக்கொள்ளவில்லை.

1956 ஆம் வருடம் பன் மாநில நதிநீர் பங்கீட்டு சிக்கல் தீர்வுக்கன சட்டம் போடப்பட்டது.

அந்த சட்டத்திற்குட்பட்ட நடுவர் மன்றம் அமைக்க பரிந்துரை செய்தது.

முதன் முறையாக 1968ல் நடந்த காவிரி நநீர் பங்கீடு விவாத கூட்டம்  மத்திய அமைச்சர் மான்புமிகு K.ராவ் அவர்கள் தலைமையில் நடந்தது. இக் கூட்டம் 1970 ஆம் வருடம் வரை தொடர்ந்து ஜந்து முறை நடந்தது.

1956ஆம் வருட ஒப்பந்த அடிப்படையில் நடுவர் மன்றம் அமைக்க தமிழ்நாடு மத்திய அரசுக்கு வேண்டுகோள் விடுத்தது.
அதற்கு கர்நாடக அரசு மறுத்துவிட்டது.

ஏற்றுக்கொள்ள கர்நாடக அரசுக்கு உத்திரவிட வேண்டும் என்று உச்சநீதிமன்றத்தில் வழக்கு ஒன்றை தமிழ்நாடு அரசால் தாக்கல் செய்த்தது. இத்துடன் கேரள அரசும் இனைந்தது. ஆனால் அப்போதைய மான்புமிகு பாரதப் பிரதமர் திருமதி இந்திரா காந்தி அவர்களால் வாபஸ் பெறப்பட்டது.

1924 ஆம் வருட ஒப்பந்தத்தை 50 ஆண்டு கழிந்து அதாவது 1974ல்விதிமுறைகளை கடந்த ஆண்டுகளின் அனுபவரிதியாக பரிசிலனை செய்ய குறிப்பிட்டிடுருந்தது.

அனுபவ ரீதியென்றால் இரு மாநிலங்களின் பதிவேடுகளையும் காவிரி நதி நீர் உன்மை நிலை அறியும் குழுவின் (CFFT) 1972 ஆம் வருட அறிக்கையின் படி ஆக்கபூர்வமான பனி நிறைவு ஏதும் தீர்வாகமலே போய்விட்டதுநிறைவேற்றப்படவும் இல்லைமேலும் இந்திய நதிகளை இனைப்பதற்குப் கீழ்கண்ட பலவழிமுறைகளை பொறியாளர்களும்அரசியல்வாதிகளும்சுற்றுசூழல் ஆர்வலர்களும் கூறுகின்றனர்.

1.கங்கை - பிரம்மபுத்ரா நதிகளை காவிரி நதியுடன் இனைத்தல்.

2.தீபகற்ப நதிகளை இனைத்தல்.தென் இந்தியாவில் பாயும் மாகநதிகோதாவரிகிருஷ்னாகாவிரி வைகை நதிகளை இனைத்தல்.

3.கேரளம் மற்றும் கர்நாடக மாநிலங்களில் மேற்குத்தொடர்ச்சி மலையில் உற்பத்தியாகி அரபிக்கடலில் கலந்து வீணாகப்போகும் நதிகளைக் கிழக்கே திருப்பி தமிழ்நாடுஆந்திரம் மற்றும் கர்நாடகம் மாநிலங்களுக்குப் பயன்படுத்துதல். 

தற்பொழுது வறட்சியால் அதிகமாக பாதிக்கப்பட்டுள்ளது தமிழகமே. தமிழத்தில் தொடர்ந்து வறட்சி நிலவுவதால் நிலத்தடி நீர் அதிகப்படியாக உறிஞ்சப்பட்டுவிட்டது. மற்ற மாநிலங்களைவிட தமிழ்நாடே இத் திட்டத்திற்கு முன்னுரிமை கொடுத்துச் செய்யவேண்டிய கட்டாயத்தில் உள்ளது கங்கைபிரம்மபுத்திராகாவிரி நதிகள். 

தேசிய நீர்வள மேம்பாட்டு நிறுவனம் (National Water Development Agency (NWDA) தென்னக நதிகளை இனைக்க முழுமையான அறிக்கையினைச் சமர்பித்துள்ளது. நில அளவை செய்து முடிக்கப்பட்டு,திட்டங்கள் நிறைவேறுவதற்கான வாய்ப்புகளையும் தயார் செய்துள்ளது. நதிகள் இனைப்பிற்கான மதிப்பீடும்காலகெடுவையும் தேசிய நீர்வள மேம்பாட்டு நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதற்கு அந்தந்த மாநில அரசுகள் ஒப்புதல் அளிக்க வேண்டும். ஒப்புதல் அளிக்குமா என்பதனைக் காலம் பதில் சொல்ல வேண்டும்.

தென் இந்திய நதிகளை இனைத்தல்.

தேசிய நீர்வளமேம்பாட்டு நிறுவனம் (NWDA) ஒரு சுயேச்சையான அமைப்பாகும்.இந் நிறுவனம் 1982 ஆம் ஆண்டில் நடுவன் அரசால் அமைக்கப்பட்டது. இவ்வமைப்பு கடந்த 20 ஆண்டுகளாக பல பொறியியல் வல்லுநர்களைக் கொண்டுஅளவு செய்து பல புள்ளி விவரங்களை சேகரித்துள்ளது. இதன் மூலம் தென்னக நதிகள் இனைப்பு ஒரு சாத்தியமான திட்டம் என்று அறிவித்துள்ளது.

இவ்வறிக்கையின்படி மகாநதியில் 280 டி.எம்.சி. தண்ணீரும்கோதாவரி நதியில் 530 டி.எம்.சி. தண்ணீரும் மிகுதியாக உள்ளது.ஆகமொத்தம் ஆண்டிற்கு 810 டி.எம்.சி. தண்ணீர் உபரியாக ஒடிக் கடலில் கலக்கிறது. தேவைக்கு அதிகமாக உள்ள இந்த 810 டி.எம்.சி. நீரை, 3176 கி.மீட்டர் நீளம் உள்ள பெரியசிரிய கால்வாய்களைத் தோண்டி காவேரி மற்றும் வைகை நதியுடன் இனைக்கலாம் என்று தேசிய நீர்வளமேம்பாட்டு நிறுவனம் பரிந்துரை செய்துள்ளது.

இவ்வினைப்பின் மூலம் காவேரியின் கல்லனைக்கு 200 டி.எம்.சி. நீர் கிடைக்க வாய்ப்புள்ளது.இதற்கு தற்பொழுது உள்ள சூழலின்(2006)படி ரூ: 60000 கோடி முதல் 70000 கோடி வரை செலவாகும் இன்று மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது. 

தமிழகம் மற்றும் உலகளவில் நீர்வள ஆதாரத்திற்கு ஆலோசகராக இருக்கும் டாக்டர்.இரா.க.சிவனப்பன் முப்பது ஆண்டுகளுக்கு முன்பே கேரள மாநிலத்தின் எல்லாக் காரியங்களுக்கும் பயன்படும் நீரின் அளவு போக 500 டி.எம்.சி. உபரியாக உள்ளதாக அறிவித்திருந்தார். 

தற்பொழுது ஓடும் நீர்வளத்தைக் கொண்டு தேசிய நீர்வள மேம்பாட்டு நிறுவனம் கேரள மாநிலத்தில் மட்டும் 1000 டி.எம்.சி நீர் மிகுதியாக உள்ளது என்று அறிவித்துள்ளது.

இத்திட்டத்தின் கீழ் கேரளத்தில் ஒடும் பம்பை மற்றும் அச்சன் கோவில் நதிகலின் உபரி நீரைத் தமிழ்நாட்டின் வைப்பாறு நதிக்கு திருப்பிவிட்டால் தமிழகம் பயன்பெறும். 

இத்திட்டதிற்கு 1400 கோடி செலவும்எட்டு ஆண்டு காலத்தில் முடிக்கவும் தேசிய நீர்வள மேம்பாட்டு நிறுவனம் அறிவித்துள்ளது. இதற்கு கேரள அரசு அனுமதி அளிக்கவேண்டும்.

பாண்டியாறுபுன்னம்புழா இவ்விரு நதிகளும் தமிழ் நாட்டில் நீலகிரி மாவட்டத்தில் கூடலூர் பகுதியில் உற்பத்தியாகி மேற்கு நோக்கி கேரளப்பகுதியில் பாய்ந்து அரபிக்கடலில் கலந்து வீணாகின்றது. 

இந்த ஆறுகளை கிழக்கே திருப்பிவிட்டால் ஈரோடுகோவை மாவட்டங்களில் 60000 எக்டேர் பரப்புள்ள  நிலம் பாசன வசதி பெறும்.

கர்நாடக மேற்கு தொடர்ச்சி மலைக்கும்அரபிக்கடலுக்கும் இடையே உள்ள நிலப்பரப்பில் பெய்யும் பெருமழையில் 60 விழுக்காடு நீர் அரபிக்கடலில் கலந்து வீணாகின்றது. 

இந்த நீரின் அளவு 2000 டி.எம்.சி. மேட்டூர் நீர் தேக்கத்தின் கொள்ளளவு 90 டி.எம்.சி. ஆகும்.இப்படி வீணாகக் கடலில் கலக்கும் நீரின் ஒரு பகுதியைக் கிழகே திருப்பிவிட்டால் கர்நாடகத்தில் உள்ள நீர்ச்சிக்கல் தீர்ந்துவிடும்.

இந்திய நதிகள் இனைப்பு திட்டம் தற்பொழுது நாடெங்கும் பேசப்பட்டு வருகிறது. உலகிலேயே இது ஒரு மிகப்பெரிய திட்டமாகும். முப்பதிற்கும் மேற்ப்பட்ட இனைப்பு கால்வாய்களைக் கொண்ட இத்திட்டத்தின் மதிப்பீடு 6 லட்சம் கோடியாகும். தென்னக நதிகள் இனைக்கும் பொழுதுபிரம்மபுத்திரா மற்றும் கங்கை நதிகளில் ஒடும் மிகை நீரை தெற்கில் திருப்பும் பணியும் மேற்கொள்ளவேண்டும். 

இத்திட்டம் நிறைவேறினால் 71 விழுக்காடு பாசனப் பகுதி அதிகரிக்கும்நீர்மின் உற்பத்தி 152 விழுக்காடு அதிகரிக்கும்நாட்டின் தண்ணீர் தேவையும்மின்சாரத்தின் தேவையும் பூர்த்தி செய்யப்பட்டு பாருக்குள்ளே சிறந்த பாரத நாடாகும். அப்படி செய்யாததின் காரனமாக விவசாயிகளின் தற்கொலைகள் அதிகரித்து வருகிறது. 

நீர் ஆதாரத்தையும் இழந்துகடவுள் முதலாளி கண்டெடுத்த தொழிலாளி விவசாயியையும் இழக்கும் பேராபத்தை நோக்கி போய்க்கொண்டு இருக்கிறோம்.

இவை அனைத்தும் நிகழ வேண்டும் என்றால் இந்திய அரசு சென்ரல் பப்ளிக் சர்வீஸ் (Central Public Service, Govt. of INDIA) என்ற அமைப்பை உருவாக்கிஅரசு அதிகாரிகளுக்கும் பொதுமக்களுக்கும் இடையில் நீர் விநியோகம் ஜனநாயகப்படுத்துவதின் வழிமுறைகளை போல்நீர் பங்கீடு என்பதைபொதுநல பனித்துறை அதிகாரிகளும்அரசியல் அல்லாத அரசு சார்ந்தவர்களும் ஜனநாயகப்படுதுவதின் வழிமுறைகளை பயன்படுத்தி நதிநீர் பங்கீட்டை விரிவாக உனர்வுபூர்வமாக ஏற்றுகொள்ளும் அரசியல் அல்லாத தலைவரை நியமித்து நீண்டகால முடிவான தொடர் ஒப்பந்தத்தை ஏற்படுத்தினாலேயொழிய இந்த நதி நீர் பங்கீடு குனமாகாது. இந்த ஜனநாயகப்படுத்துவதின் மூலமாவது விவசாயிகள் விளைநிலங்கள் ரியல் எஸ்டேட் ஆகாமல் தடுப்பதற்கான வழியாக அமைய வேண்டும்.

குரங்கு


மக்கள் நல்லுறவு

🌼ஒரு பாம்பு வளைந்து நெளிந்து தரையில் ஊர்ந்து கொண்டிருந்தது. அதைப் பார்த்த ஒரு குட்டிக் குரங்குக்கு வேடிக்கையாக இருந்தது.
.
🌼மெதுவாகப் போய் அந்தப் பாம்பைக் கையில் பிடித்து விட்டது. பாம்புகுரங்கின் கையை இறுக்கமாகச் சுற்றிக் கொண்டது. விஷப் பல்லைக் காட்டி சீறியது . குரங்குக்குக் கொஞ்சம் பயம் வந்து விட்டது.கொஞ்ச நேரத்திலேயே அதன் கூட்டமெல்லாம் கூடி வந்து விட்டன.



🌼ஆனாலும் யாருமே குட்டிக் குரங்குக்கு உதவ முன்வரவில்லை.



🌼"ஐயய்யோ. இது பயங்கரமான விஷமுள்ள பாம்பு . இது கொத்துனா உடனே மரணந்தான். இவன் பிடியை விட்டதுமே பாம்பு இவனப் போட்டுடும். இவன் தப்பிக்கவே முடியாது " என்று குட்டிக் குரங்கின் காதுபடவே பேசிவிட்டு ஒவ்வொன்றாகக் கலைந்து சென்று விட்டன .

🌼தன்னுடைய கூட்டமே தன்னைக் கைவிட்டு விட்ட சூழ்நிலையின் வேதனை , எந்த நேரமும் கொத்திக் குதறத் தயாராக இருக்கும் நச்சுப் பாம்பு , மரண பயம் எல்லாம் சேர்ந்து குரங்கை வாட்டி வதைத்தன."ஐயோ. புத்தி கெட்டுப் போய் நானே வலிய வந்து இந்த மரண வலைக்குள் மாட்டிக் கிட்டேனே".குரங்கு பெரிதாய்க் குரலெழுப்பி ஓலமிட்டது.நேரம் ஓடிக் கொண்டே இருந்தது . உணவும் , நீரும் இல்லாமல் உடல் சோர்ந்து போய்விட்டது. கிட்டத்தட்ட மயங்கி சரியும் நிலைக்கு வந்து விட்டது. கண் இருளத் தொடங்கியது.

🌼அந்த நேரத்தில் ஞானி ஒருவர் அந்த வழியே வந்தார். குரங்கு இருந்த நிலைமையைப் பார்த்ததும் நடந்ததை உணர்ந்து கொண்டார். குரங்கை நெருங்கி வந்தார்.

🌼சொந்தங்களெல்லாம் கைவிட்டுவிட்ட நிலையில் , தன்னை நோக்கி மனிதர் ஒருவர் வருவதைக் கண்ட குட்டிக் குரங்கிற்கு கொஞ்சம் நம்பிக்கை வந்தது. அவர் நெருங்கி வந்து சொன்னார் ," எவ்வளவு நேரந்தான் பாம்பைக் கையிலேயே பிடிச்சிக்கிட்டு கஷ்டப்படப் போற? அதைக் கீழே போடு" என்றார்.



🌼குரங்கோ ,"ஐயய்யோ , பாம்பை நான் விட்டுட்டா அது என்னக் கொன்னுடும் " என்றது. அவர் மீண்டும் சொன்னார் ," பாம்பு செத்து ரொம்ப நேரமாச்சு. அதைக் கீழே வீசு ".அவர் வார்த்தயைக் கேட்ட குரங்கு பயத்துடனே பிடியைத் தளர்த்திப் பாம்பைக் கீழே போட்டது.அட . நிஜமாகவே பாம்பு ஏற்கனவே குரங்குப் பிடியில் செத்துதான் போயிருந்தது. அப்பாடா .

🌼குரங்குக்கு உயிர் வந்தது . அவரை நன்றியுடன் பார்த்தது ."இனிமே இந்த முட்டாள் தனம் பண்ணாதே " என்றபடி ஞானி கடந்து போனார்.

🌼நம்மில் எத்தனையோ பேர் மனக்கவலை என்ற செத்த பாம்பைக் கையில் பிடித்துக் கொண்டு விட முடியாமல் கதறிக் கொண்டிருக்கிறோம்.

🌼கவலைகளை விட்டொழியுங்கள்.
🌼மகிழ்ச்சியாய் இருங்கள், , ,
🌼ஒவ்வொரு கெட்ட குணங்களும் ஒவ்வொரு நோயை உருவாக்கும்
🌼பெருமையும் கர்வமும் இதய நோய்களை உருவாக்கும்
🌼கவலையும் துயரமும் வயிற்று நோய்களை உருவாக்கும்
🌼துக்கமும் அழுகையும் சுவாச நோய்களை உருவாக்கும்
🌼பயமும் சந்தேகமும் சிறுநீரக நோய்களை உருவாக்கும்
🌼எரிச்சலும் கோபமும் கல்லீரல் நோய்களை உருவாக்கும்
🌼அமைதியை விரும்புவதே அனைத்தையும் குணமாக்கும்.

🌼ஆரோக்கியமான உடலிலிருந்தே ஆரோக்கியமான சிந்தனைகள் பிறக்கும். உடலின், மனதின் தேவைகளுக்கு மதிப்பளியுங்கள்.

🌼பசிக்கும் போது உணவருந்துங்கள். பசியை நீங்கள் புறக்கணித்தால் பசி உங்களைப் புறக்கணிக்கும். எப்போதும் உடலின் அழைப்பை புறக்கணிக்காதீர்கள்.

மக்கள் நல்லுறவு

Tuesday, June 21, 2016

Automobile technical word

மக்கள் நல்லுறவு பகிர்கிறது

Automobile technical word
Technical_words_in_automobile_engineering_and_their_full_from :-
CRDi - (Common Rail Direct Injection)
TDi - (Turbocharged Direct Injection)
DTS-i - (Digital Twin Spark Ignition)
VTVT - (Variable Timing Valve Train)
MPFI - (Multi point fuel injection)
ABS - (Anti Lock Braking)
SOHC - ( Single OverHead Camshaft)
DOHC - (Double Overhead Camshaft)
SUV - (Sport Utility Vehicle)
MUV - (Multi Utility Vehicle)
SAE - (Society of Automotive Engineers)
HCV - (Heavy Commercial Vehicle)
LCV - (Light Commercial Vehicle)
CVTi - (Charged motion Variable Time Ignition)
CCVTI - (Controlled Combustion Variable Timing Ignition)
CRDi - (Common Rail Direct Injection)
TDi - (Turbocharged Direct Injection)
DTS-i - (Digital Twin Spark Ignition)
VTVT - (Variable Timing Valve Train)
MPFI - (Multi point fuel injection)
ABS - (Anti Lock Braking)
SOHC - ( Single OverHead Camshaft)
DOHC - (Double Overhead Camshaft)
SUV - (Sport Utility Vehicle)
MUV - (Multi Utility Vehicle)
SAE - (Society of Automotive Engineers)
HCV - (Heavy Commercial Vehicle)
LCV - (Light Commercial Vehicle)
CVTi - (Charged motion Variable Time Ignition)
CCVTI - (Controlled Combustion Variable Timing Ignition)
EBD - (Electronic Brakeforce Distribution)
BHP - ( Brake Horse Power)
BMEP - (Brake Mean Effective Pressure)
BSFC - (Brake Specific Fuel Consumption
CC - (Cubic Capacity)
CDI - (Capacitor Discharge Ignition)
C.I ENGINE - (Compression Ignition
Engine)
CNG - (Compressed Natural Gas)
DFI - (Digital Fuel Injection)
DI ENGINE - (Direct Injection Engine)
EC ENGINE - (External Combustion
Engine)
FHP - (Frictional Horse Power)
GVW - (Gross Vehicle Weight)
HVAC - (Heating ventilating and Air
Conditioning)
IC ENGINE - (Internal Combustion
Engine)
IHP - (Indicated Horse Power)
IMEP - (Indicated Mean Effective
Pressure)
ISFC - (Indicated Specific Fuel
Consumption)
Kph - (Kilometer Per Hour)
Kpl - (Kilometer Per Liter)
OHV - (Over Head Valve)
SFC - (Specific Fuel Consumption)
SI ENGINE - (Spark Ignition Engine)
VDB - (Ventilated Disc Brake)
VVTi - (Variable Valve Timing intelligence)
4WD - (Four Wheel Drive(FWD))
2WD - (Two Wheel Drive)
TC - (Traction Control)
ESC -(Electronic Stability Control)
ARAI -(Automotive Research Association of India)
EGR -(Exhaust Gas Recirculation)
EVRV -(Electronic Vacuum Regulator
Valve)
WGT -(Waste Gas Turbocharger)
VGT - (Variable Geometry Turbocharger)
GDI-(gasoline direct injection)
CDI-(capacitor discharge ignition)
APDV- (advance pro series digital variable) induction
ATFT- (advnce thumble flow technology)
ASFS-(Advance swirl flow induction
system)
DDiS: (Diesel direct ignition system)
CRDE- (Common Rail Diesel engine)
TDCI- (Turbo Diesel Common rail Injection)
VTEC- (variable valve timing and electric lift control)
DSG-(direct shift gearbox)
TDCI -(Turbo direct common rail injection)
APDV-(air pump diverter valve)
GDI - (Gasoline direct injection)
SHVS- (swift hybrid vehicle by suzuki)
ECM / TCM-(electronic control moudel) :(transmisan control mooudel)
TI- VCT-(twin indicate variable cam timing)
VDB - (Ventilated Disc Brake)
VVTi - (Variable Valve Timing)
4WD - (Four Wheel Drive(FWD))
2WD - (Two Wheel Drive)
TC - (Traction Control)
ESC - (Electronic Stability Control)
ARAI - (Automotive Research
Association of India
EGR - (Exhaust Gas Recirculation)
EVRV - (Electronic Vacuum Regulator
Valve)
WGT - (Waste Gas Turbocharger)
VGT - (Variable Geometry Turbocharger)
SRS Airbag - (Supplemental Restraint
System)
LSPV - (Load Sensing Proportioning
valve)
OBD -(On Board Diagnose)

மக்கள் நல்லுறவு

பணம்

மக்கள் நல்லுறவு பகிர்கிறது

பணம் படுத்தற பாடு இருக்கே.!!💸 நான் உன்னுடன் இருந்தால் நீ செல்வந்தன்! நான் உன்னை விட்டு பிரிந்தால் நீ ஏழை!! 💵
என்னை மற்றவரிடம் கொடுத்தால் நீ கொடையாளி! என்னை மற்றவரிடமிருந்து பெற்றால் நீ கடனாளி!!
💴 என்னை செலவு செய்தால் நீ ஊதாரி! என்னை சேமித்து வைத்தால் நீ கஞ்சன்!! 💶
என்மேல் பற்றுடன் வாழ்ந்தால் நீ பேராசைக்காரன்! என்மேல் பற்றற்று வாழ்ந்தால் நீ சன்யாசி!!
💷 உன் தேவைக்கு நீ என்னை படைத்தாய்;இன்று உனது தேவை நானாக மட்டும் தான் இருக்கிறேன் ..
💰 உன் நடத்தையை விட நான் இருக்கும் இடத்தை வைத்துதான் உன் மதிப்பு நிர்ணயிக்கப்படுகிறது.!!இப்படிக்கு ...- நான் தான் "பணம்"

மக்கள் நல்லுறவு