Thursday, April 28, 2016

பத்திரம் பதிவு செய்யும் வழிமுறை

மக்கள் நல்லுறவு பகிர்கிறது

நாம் நிலத்தையோ அல்லது வீட்டையோ வாங்க வேண்டும் என்று முடிவு செய்தால், முதலில் அந்த நிலம் அல்லது வீட்டின் மூலப்பத்திரம், பட்டா, சிட்டா போன்றவற்றை நன்றாக படித்து பார்க்க வேண்டும்.

பத்திரம் பதிவு செய்வதில் கவனிக்க வேண்டியவை என்ன் ?
“”””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””


முத்திரைதாள்களில் கிரயப்பத்திர விவரங்களை டைப் செய்து, ஒவ்வொரு பக்கத்திலும் கீழ்ப்பகுதியில் ஒருபுறம் சொத்து வாங்குபவரும், மறுபுறம் சொத்து விற்பவரும் கையெழுத்து இட வேண்டும்.

சார்பதிவாளரிடம் இந்த கிரயப்பத்திரத்தை பதிவு செய்வதற்காக தாக்கல் செய்ய வேண்டும். அவர், சொத்து வாங்குபவர் மற்றும் விற்பவரின் புகைபடம், அடையாள அட்டை ஆகியவற்றையும் மற்ற விவரங்களையும் சரிபார்த்து, பதிவு இலக்கம் அளிப்பார்.

பதிவுக்கட்டணம் செலுத்திய பின், முதல் முத்திரைத்தாளின் பின்புறம் நிலம் விற்பவர் மற்றும் வாங்குபவரின் புகைப்படங்கள் ஒட்டப்பட்டு, அவர்களுடைய கையொப்பம், முகவரி, கைரேகை ஆகியவை பெறப்படும்.

புகைப்படங்களின் மேல் சார்பதிவாளர் கையொப்பம் இடுவார். சாட்சிகள் கையொப்பமிடுவர்.

(தற்பொழுது நகரங்களில் பதிவு அலுவலகத்தில் கணினி முலம் புகைப்படம் எடுக்கப்பட்டு கைரேகை எடுக்கப்பட்டு Cdயும் வழங்கப்படுகிறது) இத்துடன் பதிவு நிறைவு பெறும்.

பதிவுக்கட்டணம் செலுத்திய ரசீதில், சார் பதிவாளரும், சொத்து வாங்குபவரும் கையொப்பம் இட வேண்டும். பதிவு செய்யப்பட்ட பத்திரத்தை குறிப்பிட்ட சில நாட்களுக்கு பிறகு, ரசீது காட்டி, சொத்து வாங்குபவர் பெற்றுக் கொள்ளலாம்.

வேறு யாரேனும் வாங்க வேண்டியிருப்பின், அந்த நபரும் ரசீதில் கையொப்பமிடவேண்டும்.நாம் வாங்கும் இடம் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட புல எண்களில்(சர்வே எண்) அமைந்திருக்கலாம்.

பத்திரம் எவ்வளவு ரூபாய்க்கு வாங்குவது?
“”””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””
ஒவ்வொரு சர்வே எண்ணுக்கும் அது அமைந்திருக்கும் இடத்தை பொறுத்து மதிப்பீடு செய்யப்பட்டு அரசு விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதற்கு வழிகாட்டி மதிப்பு (கைடு லைன் வேல்யூ) என்று பெயர். பத்திரப்பதிவின் போது இந்த மதிப்பீட்டில் 8 சதவீதத்துக்கு முத்திரைத்தாள் வாங்க வேண்டும்.


சொத்து மதிப்பை நாம் நிர்ணயம் செய்யலாமா?
“”””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””
47-ஏ பிரிவு என்றால் என்ன?
“”””””””””””””””””””””””””””””””””””””””””
அரசு நிர்ணயித்துள்ள வழிகாட்டி மதிப்பு அதிகம். என எண்ணும் பட்சத்தில் நாமே சொத்து மதிப்பு நிர்ணயம் செய்து, அதில் 8 சதவீதத்துக்கு முத்திரைத்தாள் வாங்கலாம்.


சார்பதிவாளர் இப்பத்திரத்தை பதிவு செய்து விட்டு (pending Document) பெண்டிங் டாக்குமென்ட்�)) என முத்திரை இட்டுவிடுவார்.

மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் இதற்கென ஒரு பிரிவு இருக்கிறது. அங்குள்ள அலுவலர் குறிப்பிட்ட இடத்தை பார்வையிட்டு, அதைச் சுற்றியுள்ள சர்வே எண்களின் மதிப்பை வைத்து, வழிகாட்டி மதிப்பு சரியானதா என்பதை முடிவு செய்வார்.

அல்லது அவரே ஒரு மதிப்பை நிர்ணயம் செய்வார். வழிகாட்டி மதிப்பு சரியாகவே உள்ளது என்று அவர் முடிவு செய்யும் பட்சத்தில், அதற்கு நாம் நிர்ணயித்த மதிப்புக்கும் உள்ள வித்தியாசத் தொகையில் 8 சதவீதத்தை செலுத்த வேண்டும். 

அல்லது அவர் நிர்ணயித்த மதிப்புக்கும் நாம் நிர்ணயித்த மதிப்புக்கும் உள்ள வித்தியாசத்தில் 8 சதவீதத்தை செலுத்த வேண்டும். அதன் பிறகே பதிவு செய்த பத்திரம் நம்மிடம் ஒப்படைக்கப்படும். இம்முறைக்கு 47 ஏ பிரிவு என்று பெயர்.

குறிப்பிட்ட காலத்துக்குள் மீதித்தொகையை சார்பதிவாளர் அலுவலகத்தில் செலுத்தி பத்திரத்தை பெற வேண்டும். இல்லையெனில், அது மாவட்டத்தின் கலெக்டர் அலுவலகத்துக்கு அனுப்பப்படும். அதன் பிறகு அங்கு சென்று வித்தியாசத் தொகையைச் செலுத்தி பெற்றுக் கொள்ள கொஞ்சம் அலைய வேண்டியிருக்கும்.

41 படிவம் பற்றி தெரியுமா?
“”””””””””””””””””””””’””””””””””””””””””
வழிகாட்டி மதிப்பின் 8 சதவீத அளவுக்கும் முத்திரைத்தாள்கள் வாங்க முடியாத நிலை, அல்லது கிடைக்க வில்லை எனில் அதற்கும் வழி உண்டு.

குறிப்பிட்ட அளவுக்கு முத்திரைத்தாள் வாங்கி, மீதித்தொகையை சார்பதிவாளர் அலுவலகத்தில் செலுத்தலாம். இதற்கு 41 என்ற படிவம் உள்ளது.


வாங்க வேண்டிய முத்திரைத்தாள்களின் மதிப்பு, மீதி செலுத்த வேண்டிய தொகை ஆகிய விவரங்களை பூர்த்தி செய்து கிரயப்பத்திரத்துடன் தாக்கல் செய்ய வேண்டும்.

சார் பதிவாளர் அலுவலகத்தில் நாம் செலுத்த வேண்டியது ஆயிரம் ரூபாய் வரை எனில் பணமாகவே செலுத்தலாம்.

அதற்கு மேல் இருந்தால் வரைவேலையாக (டிமாண்ட் டிராப்ட்) செலுத்தவேண்டும்.

எந்த பெயரில் டி.டி எடுக்க வேண்டும் என்ற விவரம் அந்தந்த அலுவலக தகவல் பலகையில் குறிக்கப்பட்டிருக்கும். வழிகாட்டி மதிப்பில் ஒரு சதவீதத்தை பதிவுக்கட்டணமாகவும், ரூ. 100யை கணினி கட்டணமாகவும் செலுத்த வேண்டும். இதையும் ரூ. 1000 வரை பணமாகவும், அதற்கு மேல் எனில் காசோலையாகவும் அளிக்க வேண்டும்(தற்போழுது On line money transfer முறை நகர்ப்புறம் பின்பற்றப்படுகிறது)

மக்கள் நல்லுறவு

Plastic குடிநீர் பாட்டில் பற்றி தெரிந்து கொள்வோம்

மக்கள் நல்லுறவு

குடிநீர் பாட்டில்களில் ''மெல்லக் கொல்லும் விஷமாகி'' நரம்பு மண்டலம் துவங்கி உடலின் அனைத்து பாகங்களையும் பாதிக்கும்''

குடிநீர் தயாரிக்கும் கம்பெனி பெயர் பார்த்து விலை கொடுத்து வாங்குபவர்கள், பாட்டிலுக்கு அடியில் முக்கோணக் குறிக்குள் இருக்கும் எண்ணை கவனிப்பதில்லை.

குடிநீர் பாட்டில்களில் 1 முதல் 7க்குள் ஏதேனும் ஒரு எண் இருக்கும். இந்த எண் மூலம் அந்த பாட்டில் எவ்வகை வேதிப்பொருளால் ஆனது, இது எந்த பொருள் வைக்க தகுதி கொண்டது என்பதை அறியலாம்.


அடிப்புற முக்கோணத்திற்குள் எண்:

 எண் ''1'' இருந்தால் அந்த பாட்டில் பிஇடி (பாலி எத்திலின் டெர்ப்தலேட்) வேதிப்பொருளில் ஆனது. இதில் பானம், குளிரூட்டிய உடனடி உணவு இருக்கும்.


எண் ''2'' இருப்பின், ஹெச்டிபிஇ (ஹை டென்சிட்டி பாலிஎத்தனால்) வேதிப்பொருளால் ஆனது. இதில் பால் உள்ளிட்ட பொருட்கள் விற்கப்படும்.

எண் ''3'' என இருந்தால், பிவிசி (பாலிவினைல் குளோரைடு) என்ற வேதி பொருளால் தயாரிக்கப்பட்டவை. இதில் உணவுப்பொருட்கள், பழரசம் இருக்கும்.

எண் ''4'' எனில், எல்டிபிஇ (லோ டென்சிட்டி பாலி எத்திலின்) என்ற வேதி பொருளால் உருவாகி, பொருட்களை அடைப்பதற்கான பாக்கெட்டுகளாக இருக்கும்.

எண் ''5'' பிபி (பாலி புரோபைலின்) வேதிப்பொருளால் ஆகி, மைக்ரோவேவ் போன்ற உணவு பாத்திர பயன்பாட்டிலும்.

எண் ''6'' இருப்பின், பிஎஸ் (பாலிஸ்டிரின்) வேதிப்பொருளில் உருவாகி முட்டைகளுக்கான கூடு, பொம்மை, எலக்ட்ரானிக் பொருட்களுக்கான பிளாஸ்டிக்காக இருக்கும். 

எண் ''7'' இடப்பட்டிருந்தால் மற்ற வகை பிளாஸ்டிக்காக குவளைகள், தட்டுகள் உள்ளிட்ட பாத்திரங்களாக மட்டுமே பயன்படுத்தலாம் என்ற இந்த 7 பிளாஸ்டிக் வகைகளில் அடிப்புறம் 1, 3, 6 எண்களிட்ட பாட்டில்கள் தரும் பாதிப்பு அதிகமிருக்கும். பள்ளி செல்லும் குழந்தைகள், பயணம் செய்வோர் என பலரும் ஏற்கனவே உபயோகப்படுத்திய பழைய பாட்டில்களில் தண்ணீர் நிரப்பி எடுத்துச் செல்வது அதிகரித்துள்ளது. புதிய மினரல் வாட்டர் பாட்டிலை வெயிலில் வைத்தாலே வேதிவினைகள் நடந்து நீரில் எளிதில் வேதிப்பொருட்கள் கலந்து விஷமாகுமென சமீபத்திய ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

இதைவிட மோசமாக, பழைய பாட்டிலில் குடிநீரை சுட வைத்து நிரப்புவது, ஆண்டுக்கணக்காக இந்த ஓற்றை பாட்டிலில் நீர் நிரப்பி பயன்படுத்துவதென மக்கள் அறியாமையில் உள்ளனர். இனிமேல் குடிநீரோ, உணவுப் பொருட்களோ வாங்கும் பாட்டில்கள், பேக்கிங்குகளில் அடிப்புறத்து எண்ணை பார்ப்பது அவசியம்தமிழக அரசு டாக்டர்கள் சங்க தலைவர் செந்தில் கூறுகையில், ''மறு சுழற்சிக்கு தகுதியற்ற சாதாரண குடிநீர் பாட்டில்களை பல நாட்களுக்கு அடுத்தடுத்து தொடர்ந்து பயன்படுத்தக்கூடாது.

உணவுத் தரம் மிக்க பிளாஸ்டிக்கில் செய்த பாட்டில்கள் விலை அதிகமிருப்பினும், அதில் தண்ணீர் வைத்து குடிப்பதே உகந்தது.

'ஒன்ஸ் யூஸ்'' பாட்டில்களை ஒருமுறை பயன்படுத்தியதும் உடைத்தெறிய வேண்டும்.

இதில் அந்த பாட்டிலின் வேதிப்பொருள் அந்த நீர், உணவுடன் வினையாகி ''மெல்லக் கொல்லும் விஷமாகி'' நரம்பு மண்டலம் துவங்கி உடலின் அனைத்து பாகங்களையும் பாதிக்கும்'' என்றார்.

வாழ்க வளமுடன்

படித்ததை பகிர்கிறது
மக்கள் நல்லுறவு

Monday, April 25, 2016

மதுவுக்கு நாம் அடிமை

மக்கள் நல்லுறவு
தேவை விழிப்புணர்வு

இதை பொறுமையாக பாருங்கள், படியிங்கள்
பகிருங்கள்

மதுவால் உங்கள் சந்ததிகளின் எதிர்காலத்தை இருண்டகாலம் ஆக்கிவிடாதீர்கள்,
உருவாக்கியவர்களுக்கு ஆபத்து தெரியும் இதை அருந்தமாட்டான், foreign சரக்கை குடித்து ஜாக்கிரதையாய் வாழ்வான்,
அவன் புத்திசாலி, ஆனால் அவன் தயாரிப்பு போலி மெல்ல மெல்ல உன்னை கொல்லும்,உன் சந்ததியை கெடுக்கும், அடிமையாக்கி, சிந்திக்கும் திறனை குறைக்கும், ஆளைக் கொல்லும், மொத்தத்தில் குடும்பத்தை அளிக்கும்.

உண்மையாய் இருந்தால் உணர்ந்து திருந்து அல்லது திருத்து இருண்ட குடும்பம் பிரகசமாக இருக்க தேவையான விளக்கு (மதுவிலக்கு) அது தான் இன்றைய குடும்பவிளக்கு.

மக்களின் நலன் கருதி

Sunday, April 24, 2016

மரம் வளர்ப்போம்

மக்களின் சிந்தனைக்கு

🏻காற்றோட்டம் பெற 
மரங்களுக்கிடையில் 
நடந்துசென்றேன் !

மரங்கள் என்னோடு 
பேசத்தொடங்கின!

வேப்பமரம்!
ஏய் இனியவரே 
எனக்கு கீழ் ஒரு அம்மன் 
உருவத்தை வைத்துவிட்டு
செல் என்றது!

திகைத்தேன்!
நான் என்ன ஞானியா?
மந்திர வாதியா ?
சிலையை உடன் வரவழைக்க !

அரசமரம்!
ஏய் இனியவரே 
எனக்கு கீழ் ஒரு பிள்ளையார்
சிலையொன்றை வைத்துவிட்டு
செல் என்றது!

புன்னகைத்துவிட்டு 
மேலும் சென்றேன்!

ஆலமரம்!
ஏய் இனியவரே
எனக்கு கீழ் ஒரு பைரவர் .
சூலத்தை வைத்துவிட்டு
செல் என்றது!

ஒரு பெரு மூச்சை 
ஆழமாக எடுத்துவிட்டு சென்றேன்!

அடுத்த மரம் என்னிடம் 
எதையும் கேட்கவில்லை ..
வியப்படைந்தேன்!

ஏய் மரமே!
உனக்கு கடவுள் நம்பிக்கை 
இல்லையா?
ஏன் எதையும்
கேட்கவில்லை என்று நான்கேட்டேன்!


போங்க இனியவரே !
அவைகளெல்லாம் ஞானத்தால் 
சிலைகளை கேட்கவில்லை!
தம்மை வெட்டி விட கூடாது
என்ற பயத்தால் கேட்கிறார்கள்!

அப்படியென்றாலும் தம்மை 
வெட்டும் அளவு குறையுமே என்ற 
அற்ப ஆசை தான் இனியவரே!

அப்போ உன் நிலை?

என்னை விலைபேசி விட்டார்கள்!
இன்று நான் இறக்கபோகிறேன்!
எதையும் நான் கேட்டு பயனில்லை!
முடிந்தால் இனியவரே! 
அவர்களை காப்பாற்றுங்கள்!

நான் இருந்த இடத்தில் செடியை வையுங்கள்,
அவர்கள் விரும்பியதை செய்யுங்கள்!
வேடிக்கையை மட்டும் பார்த்து செல்லாதீர்கள்

இப்போதுதான் புரிந்தது!
மூதாதையர் மூடநம்பிக்கையால் 
சிலைகளை வைக்கவில்லை !

மனிதர்களுக்கு பயனளிக்கும் மரங்கள் மாசுகளை குறைத்து, மழைகளை பெற்று தந்து, நிழலை தந்துசுவாசக் காற்றை நமக்கு  தந்து உயிர்களை வாழவைக்கும்
மரங்களை சேர்த்து வணங்கவும் அதனை
பாதுகாக்கவே சிலைகளை மரங்கள் முன்
வைத்தார்கள்!

அன்றைய கருவி, செயல்
அன்றைய விழிப்புணர்வு இவைகளே! எதிர்காலம்
அதற்க்காக  முதலில்  மரத்திற்க்கு மரம்  சிலைவைக்க சொல்லவில்லை, மரத்தை முதலில் வைப்போம், மரியாதை கொடுப்போம்,
எதிர்காலத்தை காப்போம்,

மரம் வளர்ப்போம்! மனிதம் காப்போம்!

சிந்தித்துப்பார் அக்கறையிருந்தால்

மக்கள் நல்லுறவு, 

தேவை விழிப்புணர்வு 
சிந்தித்துப்பார் அக்கறையிருந்தால்

அரசியலில் ஈடுபடுபவர்கள்,
உண்மையில் நாட்டின் மிது, 

நாட்டு மக்கள் மிது, நாட்டு மண்ணின் மிது அல்லது மனிதன் மிது அக்கறையிருந்தால் செய்யபட வேண்டிய கடமைகளில்  குறிப்பாக தன்னை நம்பி வாக்களித்த மக்களுக்கு கட்சிகள் செய்ய வேண்டிய கடமைகளில் ஒன்று,


அதிக மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு  வெற்றி பெற்ற கட்சிகள் ஆட்சியில் அமர்ந்தவுடன் செய்யும் செயல்களில் தவறு, மக்களுக்கு பாதிப்பு, நாட்டுக்கு கேடு எனத் தெரிந்தால் ஒன்று அதனை அப்போதே தடுக்கவேண்டும், வரும் ஆபத்தை ஆரம்பத்திலேயே எடுத்து சொல்ல வேண்டும், அல்லது எதிர்க்கவேண்டும், முடியவிட்டால்  மக்களோடு இனைந்து போராட வேண்டும் இது தான் வாக்களித்த மக்களுக்கு செய்த கைம்மாறு, இது தான் கடமை,


இதை செய்யாமல்
இதையெல்லாம் மறுத்து
இதையெல்லாம் மறந்து எல்லா தப்பான செயல்களை வளரவிட்டு  குற்றம் கூறி அதில் தனது ஆதாயம், சுயநலனை கருதி தப்புக்களை விளம்பரமாக மாற்றி  ஆயுதமாக பயன்படுத்தி  தான் வளர ஆட்சியை பிடிக்க மறுபடியும் மக்களை பயன்படுத்திக் கொள்கிறார்கள், முயற்சி செய்கிறார்கள், தன்னை நம்பி வாக்களித்த மக்களை மறந்து, எதிர் கட்சியாக வாய்ப்பு பெற்று இருந்தாலும் மக்களை மறந்து ஏதோ காரணத்தை சொல்லி சபையிலிருந்து வெளியே வந்து விடும் அமைச்சர்கள் இங்கே இருப்பதனால்  தப்புகள் தாராளமாக அரங்கேற்றமாகிறது, நாடு முன்னேற்றம் அடைவதில்லை,  நாட்டின் வளர்ச்சி பாதித்து  ஒரு தனி மனிதர்கள் மட்டும் அதிகார அந்தஸ்த்து பெற்று, பணபலத்துடன் முன்னேற்றமடைகிறான், போட்ட ஓட்டும் நமக்கு  விணாகிறது.


இதனை அறியாத மக்கள் தப்புக்களை தடுக்கமால் இருந்தவர்களையும்,  இருப்பவர்களையும், தப்பு செய்தவர்களையும் மறந்து இதை பற்றி அறியாமல் தமக்கு ஏற்பட்ட இழப்புகளை பாதிப்பையும்
மறந்து விடுகிறார்கள்.


அடுத்த புது விளம்பரத்துக்கும், அறிவிப்புக்கும் பணத்துக்கும் மயங்கிவிடுகின்றனர், உண்மையில் நாட்டு நலன், மக்கள் சேவை என்பதை  கருத்தில் கொண்டு யாரும் அரசியலுக்கு வருவதில்லை

சம்பாதிக்கும் தொழிலாக மாறிவருகிறது, மாறிவிட்டது.


கூட்டு சேர்ந்து ஏலம் ஏடுத்தவன் ஐந்து வருசம் நல்ல சம்பாதிக்கிறான், ஆயுசு முழுக்க நல்லா வாழ்கிறான், நாம்  ஏமாற்றத்தை சந்தித்து மீண்டும் மாற்றம் ஏற்படாதா என ஏங்கி தடுமாற்றத்தில் இருக்கும் தமிழ்நாட்டு வாக்களார்கள் நாம்!

ஆனால்  
நாங்கள் கடமையை மறக்க மாட்டோம்.
ஆம் நாம் தான் சிந்திக்க வேண்டும்.

சிந்தித்து செயல்படவேண்டும்.


மக்கள் நல்லுறவு

தேர்தல் ஆணையம்

மக்கள் நல்லுறவு

பொது மக்களின் சார்பாக -
100% ஓட்டுப்போட நாங்க ரெடி
வெற்றி பெற்றவுடன்  100% மக்களுக்கு சேவை செய்ய நீங்க ரெடியா?


100%  உத்திரவாதம் பணம் சாம்பாதிக்க மாட்டேன், ஊழல் செய்யாமாட்டேன் என உத்திரவாதம் அளிப்பவர்கள் யார்? 

நல்லாட்சிக்கு உத்திரவாதம் வாங்கி தர முடியுமா?


100% எங்களை வாக்களிக்க வேண்டும் என விளம்பரப்படுத்தி, அதன் மூலம் ஆட்சியை ஏற்படுத்தி யாரையோ பதவியில் அமர்த்தி விட்டு,  அவர்கள்  சொகுசாக வாழ வழி செய்து கொடுத்து, ஆட்சிக்கு வந்த பின் எங்களை மறந்து  ஐந்து ஆண்டுகள் கண்டுக்காமல் இருக்கும் இந்த நாட்டின் அரசு அரசியல் கட்சிகள் மற்றும்  தேர்தல் ஆணையம். 

அதிகாரம் கொண்ட சட்ட வள்ளூனர்கள் கவனத்திற்க்கு!
கொஞ்சம் மக்கள் மிது  சிந்தனை வைக்க இந்த வேண்டுகோள்!


தேர்தல் ஆணையம் தேர்தல் விதி என்று சொல்லுவதில் குறிப்பாக இந்த கட்சிகள் கொடுக்கும் தேர்தல்  வாக்குறுதி, விளம்பரங்களை  பதிவு செய்து வைத்துக் கொள்ள வேண்டும், அவற்றை ஆட்சி அமைக்கும் கட்சிகள் அதை நிறைவேற்றவில்லை, கடமையை செய்யவில்லை என்றால் அடுத்த முறை தேர்தலில் போட்டியிட தகுதியிழந்து விடுவார்கள்,  நீக்கப்படுவார்கள், மேலும் மக்களை நம்ப வைத்து ஏமாற்றுதல்  மோசடி பிரிவுகளில் வழக்கு தொடரப்படும்  என விளம்பரம் செய்து பாருங்கள், சட்டத்தை அமுல்படுத்துங்கள்.


அப்புறம் கட்சிகள் 
செய்வதைத் தான் சொல்லும்
சொல்லுவதைத் தான் செய்யும்,


இப்படிக்கு 

தேர்தல் ஆணையத்தை நம்பி வாக்களிக்க போகும் மக்கள்


மக்கள் நல்லுறவு

Friday, April 22, 2016

TNEB கட்டணம் நியாயமான முறையில் வசூலித்தால்

மக்கள் நல்லுறவு பகிர்கிறது      
சிந்தனைக்கு

TNEB

இது போல பல நூதன வழிகளில் மக்களின் உழைப்பை சுரண்டுகிறது, மின்சார வாரியத்திடம் ஒன்று பட்டு விபரம் யாரும் கேட்பதில்லை காரணம் ஒன்று படுவது இல்லை, மண்டையை குழப்பும் கணக்கும், TARIFF, புதுப்புது விதிமுறைசட்டம் என சொல்லி மக்களை மிரட்டுவதும் வாடிக்கை யாகிவிட்டது,

கட்டணம் நியாயமான முறையில் வசூலித்தால் மின் துறையில் மட்டும் அல்ல ஏன் எந்த துறையிலுமே நஷ்டம் வராது, மக்கள் மன வருத்தத்தோடு தான் இரண்டு மாதம் ஒருமுறை பணம் கட்டுகின்றனர், எப்படி லாபம் கிடைக்கும்லாபம் இல்லை சாபம்

மின் ஊழியர்களின் பற்றாக்குறைநலனை காட்டி மக்களிடம் நூதனமாக இப்படி  கட்டணம் வசூலிக்கப்படுகிறது,

சரியான தேதிகளில் கணக்கிடுவதில்லை, இரண்டு நாள் தள்ளி வந்து கணக்கிட்டாலும் பாதிப்பு மக்களுக்கே!

சீரான கட்டணம் வசூலிக்கவேண்டும்  என்பதை வலியுறுத்துவோம்

நமக்கு எதற்கு வம்பு, எல்லோருக்கும் போல நமக்கு   என சொல்லி இடத்தை விட்டு  கிளம்பியாச்சு ....


மக்கள் நல்லுறவு

மோட்டார் வாகனச் சட்டம்

மக்கள் நல்லுறவு பகிர்கிறது      
1.உரிமம் இல்லதவர்களை வண்டி ஓட்ட அனுமதிப்பது/section 180. Rs.50 fine

2. ஓட்டுநர் உரிமம் இல்லாமல் 18 வயதிற்க்கு கீழ் உள்ளவர் வண்டி ஓட்டுதல் section 181. Rs.500 fine

3.உரிமம் சார்ந்த குற்றங்கள் , ஓட்டுநர் தகுதி இழ்ந்தவர்கள் வண்டி ஓட்டுதல் section 182(1). Rs.500 fine

4.அதிவேகத்தில் வண்டி ஓட்டுதல் section 183(1) Rs.400 fine

5.மிகுதியான வேகத்தில் வண்டி ஓட்டுதல் .முதலானவை (ஓட்டுவதற்க்கான காரணம் வேகத்தின் அளவை தாண்டுதல் ) section 183 (2). Rs.300 fine

6.அபாயகரமாக ஓட்டுதல் section 184. Rs.1000 fine

மற்றும் சென்போன் பேசிக் கொண்டு ஓட்டுதல் CMV R21(25) section 177.RS.100 fine

7.குடிப் போதையில் வண்டி ஓட்டுதல் section 185 .Rs.court

8. மன நிலை ,உடல் நிலை சரியில்லாத் நிலையில் வண்டி ஓட்டுதல் .section 186. Rs.200 fine

9.போட்டி போட்டுக் கொண்டு வண்டி ஓட்டுதல்..வாகன சோதனை மேற்க் கொள்ளுதல் section 189. Rs 500 fine

10.அதிகமான அளவில் கரும்புகை வெளியிடுவது section 190(2) .Rs.50 fine

11.அனுமதியில்லாத மாற்றத்துடன் கூடிய சைலன்சர் section 190(2).Rs.50 fine .

12.காற்று ஓலிப்பான் .பல்லிசை ஓலிப்பான் section 190 (2) .Rs.50 fine

13.பதிவு செய்யப்படாத வாகனத்தை ஓட்டுதல் section 192. Rs.500 fine

14.அனுமதிக்கப்பட்ட எடைக்குக் கூடுதல் எடைய்யுடன் ஓட்டுதல் section 194.Rs.100 fine

15.காப்பீடு செய்யப்படாத வாகனத்தை ஓட்டுதல்( uninsured ) section 196 .Rs.1000 fine

16.வண்டியில் அனுமதியின்றி மாறுதல் செய்தல் section 198 .Rs.100 fine

17.போக்குவரத்திற்க்கு இடையூர் செய்தல் section 201 .Rs.50 fine


மக்கள் நல்லுறவு

Wednesday, April 20, 2016

நல்லதை யோசி

மக்கள் நல்லுறவு
உன் சொத்து மதிப்பை பார்க்காதே!
செத்த பின் வரும் மதிப்பை பற்றி யோசி!

நல்லதை யோசி
யோசித்து நேசித்து வாழ
கற்றுக்கொள்
வாழும் காலங்களில்

உன் பெற்றோறை நேசி
வாழ்கையை நேசி
மனைவியை நேசி
மக்களை நேசி
மனிதனை நேசி

நீ வாழ பிறறை கெடுக்காதே
இவர் போல யார் என்ற சொல்
தானாய் அமையும்

வாழ்க வளமுடன்!
நல்லுறவுடன் மக்கள் நல்லுறவு

தவறான வழி சம்பாதிப்பது


மக்கள் நல்லுறவு பகிர்கிறது

தவறான வழியில் பணம் சம்பாதிப்பவர்களுக்கு என்ன நடக்கிறது? -

ஏன் ஒருவர் தவறான வழியில் பணம் தேடுகிறார்? ‘பிறர் தவறான வழியில் பணம் சம்பாதித்து மகிழ்ச்சியாக வாழ்வதைப் பார்க்கும் போது’, ‘சரி அவ்வாறு சம்பாதித்து பார்க்கலாமே என்று ஒரு முறையோ, சில முறைகளோ செய்த போது வந்த நல்ல விளைவுகளால்’ என இரண்டு காரணங்களை சொல்ல முடியும்.

உண்மையில் தவறான வழியில் பணம் சம்பாதிப்பவர்கள் மகிழ்ச்சியாக இல்லை ஆனால் அவர்களுக்குள் “தவறான வழியில் வரும் பணம் அவருக்கு மகிழ்ச்சி அளிக்கிறது” என்ற மாயை ஏற்படுகிறது. உழைக்காமல் கிடைக்கும் பணம் அவரது மனசாட்சியில் ஆரம்பத்தில் சில உறுத்தல்கள் ஏற்படுத்தும்போது “எல்லோரும்தான் இப்படி பணம் சம்பாதிக்கிறார்கள். நான் நேர்மையாக இருந்தால் வாழ்வில் முன்னேற முடியாது” என திரும்ப திரும்ப தனக்குத்தானே சொல்லிக்கொள்கிறார்கள்.

“லஞசம் வாங்கிய அதிகாரி கைது” என்று தொலைக்காட்சிகளில் செய்தி வரும்போதும், தங்களுக்கு தெரிந்தவர்கள் தவறான வழியில் சொத்து சேர்த்து பிடிபடும் போதும், “இதெல்லாம் எனக்கு நடக்காது”, “அவன் கவனக்குறைவாக, பேராசைப்பட்டு லஞ்சம் வாங்கியிருக்கிறான், அதனால்தான் மாட்டிக்கொண்டான்” என்று பலவாறு தங்களுக்கு சமாதானம் சொல்லிக்கொள்வார்கள். தவறான வழியில் பணம் சம்பாதித்து இப்போது மாட்டிக்கொண்ட அனைவருமே ஒரு காலத்தில் இப்படித்தான் சொல்லிக்கொண்டிருந்தார்கள் என்று இவர்களுக்கு தெரியாது.

பணம் இருந்தால் எதையும் வாங்கிவிடலாம், நினைப்பதெல்லாம் நடந்துவிடும் என்று கிடையவே கிடையாது. பணத்திற்கு மயங்காத மக்களும், விஷயங்களும் இன்றும் உலகில் இருக்கத்தான் செய்கின்றன. உலகம் என்றும் போல் இன்றும் ஒரு நியதியுடன்தான் இயங்கி கொண்டிருக்கிறது. அதுதான் “தீதும் நன்றும் பிறர்தர வாரா!”

தவறான வழியில் பணம் சேர்ப்பவர்களுக்கு எதிரிகள் வளர்ந்து கொண்டே போகிறார்கள். ஏனெனில் உரியவர்களுக்கு சென்று சேர வேண்டிய பணத்தை ஒருவரே எடுத்துக்கொள்கிறார் என்றால் அந்த உரியவர்கள் எதிரிகளாய் ஆகிறார்கள். அந்த எதிரிகளுக்கு ஒரு காலம் வரும்போதோ அல்லது உலக நியதியின்படி மனசாட்சி திரும்பத்திரும்ப தவறு எனச் சொல்லச் சொல்ல விடாமல் செய்த தவறுகளுக்கான தண்டனையை தங்கள் வாழ்நாளின் குறிப்பிட்ட காலத்தில் அவர்கள் அனுபவிக்கிறார்கள். அந்த தண்டனைகள் ஒரு தனிமனித/அந்தரங்கமான/ அக உள்ளுணர்வு சார்ந்த தண்டனையாய் கூட இருக்கலாம். எடுத்துக்காட்டாக ‘வலி’ என்பதை கூறலாம். வலி என்பது அனுவிப்பவரால் மட்டுமே உணரக்கூடியது. அதனை மற்றவர்கள் அளந்து அறிய முடியாது. அது போலவே வெளியிலிருந்து பார்ப்பவர்களுக்கு “இப்படி தவறான வழியில் சொத்து சேர்த்த இவர் இன்னும் நன்றாகத்தானே இருக்கிறார்” என்று கூட தோன்றலாம். ஆனால் உண்மை நிலை அனுபவிப்பவர்களுக்கு மட்டுமே தெரியும்.

உளவியல் பூர்வமாக பார்த்தால், இவ்வாறு தங்கள் மனசாட்சிக்கு எதிராக நடந்து கொள்பவர்களின் வாழ்க்கையில்; “பணம் இல்லாமல் மிகவும் கஷ்டப்பட்டேன்” என்ற வகையிலான சில மோசமான நிகழ்வுகள் நடந்திருக்கும் அல்லது “பணம் மட்டும் இருந்திருந்தால் என் குழந்தைகளை நான் பெரிய பள்ளியில் சேர்த்திருப்பேன்” என்ற வகையில் அவர்கள் வாழ்க்கையில் நடந்தவைகளை மோசமான நிகழ்வுகளாக அவர்கள் தவறாக புரிந்து கொண்டிருப்பார்கள்.

தொடந்து தவறான வழியில் பணம் சேர்க்க சேர்க்க, அவர்களுக்கு எதிரிகள் கூடிக் கொண்டே போகிறார்கள். எதிரிகள் அதிகரிக்க அதிகரிக்க சம்பந்தப்பட்ட நபருக்கு பயம் தொற்றிக்கொண்டு விடும். தான் பயப்படுகிறோம் என்று தெரிந்தால், இது வரை சேர்த்தெல்லாம் போய் விடும் என்று உணர்ந்து, பொய்யாய் தைரியமாக இருப்பது போல் நடிக்கத்தொடங்குகிறார்கள். எந்த அசம்பாவிதமும் தங்களைச் சுற்றி நடக்காவிடில், கொஞ்ச நாட்களுக்கு பின் மீண்டும் தைரியம் கொள்கிறார்கள். ஏதாவது நடந்துவிட்டால், மீண்டும் நடிக்கத்தொடங்கி விடுகிறார்கள்.

இது தெரியாத பலர் அவர்களைப் பார்த்து தவறான வழியில் பணம் சேர்க்கத் தொடங்குகிறார்கள். இந்தப் பலருக்கு தெரியாது ஒரு நாள் இல்லை ஒரு நாள் அவர்களைப் போல் இவர்களும் மனசாட்சியின் சுழலில் சிக்கி நிம்மதி இழக்கப் போகிறார்க்ள் என்று!

தண்டனைகள் என்பவை நீதித்துறையால் தரப்படவில்லையென்றாலும், உலக நியதிப்படி தரப்படுகிறது. தண்டனை என்பது வாழ்க்கை முறை சார்ந்த நோயாகவும், விபத்துக்களாகவும், இயற்கை சீற்றங்களாகவும், சொத்து சேர்த்து மகிழ்ச்சியாய் வாழ வைக்க ஆசைப்பட்ட குடும்பத்தினருக்கும், குழந்தைகளுக்கும் நேரும் எதிர்பாராத நிகழ்வுகளாகவும் இருக்க முடியும்.
எடுத்துக்காட்டாக நடந்தோ அல்லது சைக்கிளிலோ போய்கொண்டிருந்த ஒருவர் லஞ்சம் வாங்கி பைக் வாங்குகிறார் என்று வைத்துக்கொள்வோம். அவர் இப்போது தெருமுனைக்கு செல்வதானால் கூட அந்த பைக்கில்தான் செல்வார். முன்பெல்லாம் நடந்துகொண்டிருந்ததால் வராத சர்க்கரை வியாதி இப்போது திடீரென அவரை தாக்கி விட்டது.

பிடித்த உணவு வகைகளை உண்டு களிக்க லஞ்சம் வாங்கிய அவர் இப்போது கோதுமை, கேழ்வரகு என்று சில குறிப்பிட்ட உணவுகளை மட்டுமே சாப்பிட முடியும். லஞ்சம் வாங்கி அதிக பணம் சேர்த்திருக்கும் அவர் சிறிய மருத்துவமனைக்கோ அல்லது அரசு மருத்துவமனைக்கோவா போகப்போகிறார்? நிச்சயம் ஒரு கார்ப்பரேட் மருத்துவமனைக்குத்தான் போவார். அப்படிப்போகும் போது மருத்துவத்திற்கு நிறைய பணம் செலவழிக்க வேண்டி வரும். உண்மையில் உட்கார்ந்து யோசித்துப்பார்த்தால் லஞ்சம் வாங்கியதால் ஏற்பட்ட நன்மை என்று எதுவுமே இல்லையென்று அவருக்கு புரிந்துவிடும். ஆனால் அவ்வாறு உட்கார்ந்து அவர் யோசிக்கப்போவதில்லை, அப்படியே யோசித்தாலும் அந்த ஞானம் அவர்களுக்கு வராது. ஒரு வேளை ஞானம் வந்து விட்டால், உடனேயே லஞ்சப்பணத்தில் வாங்கிய அந்த பைக்கை விற்று, தன்னால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஏதாவது செய்து விட்டு மீண்டும் சைக்கிளிலோ அல்லது நடந்தோ செல்லத் தொடங்கியிருப்பார்.

ஆனால் இப்படிப்பட்டவர்கள் மாறாக ஜாதகம் பார்க்க போவது, மருத்துவத்திற்கு வேண்டி இன்னும் அதிக லஞ்சம் வாங்குவது போன்றவற்றையும், அதிக பட்சம் கோயிலுக்கு போய் உண்டியலில் பணம் போடுவது என்று சம்பந்தம் இல்லாதவற்றையே செய்து கொண்டிருப்பார்கள்.



மக்கள் நல்லுறவு

Tuesday, April 19, 2016

நுகர்வோர் பாதுகாப்பு சட்டம் 1986

மக்கள் நல்லுறவு பகிர்கிறது

நுகர்வோர் பாதுகாப்பு சட்டம் மற்றும் நுகர்வோர் நீதிமன்றகளில் வழக்கு தொடர தேவையான தகுதிகள்:

நுகர்வோர் பாதுகாப்பு சட்டம் 1986 ம் ஆண்டு டிசம்பர் மாதம் 24 ம் தேதியன்று அமலுக்கு வந்தது.

ஏற்கனவே அமுலில் உள்ள சட்டத்தின் மூலம் நிவாரணம் பெற வாய்ப்பு இருந்தும் தனியாக ஒரு சட்டம் கொண்டு வரப்பட்டதின் அடிப்படை நோக்கமே எளிய முறையில், குறுகிய காலத்தில், செலவி ல்லாமல் நிவாரணம் பெற வேண்டும் என்பதே.

சாதாரணமாக, நுகர்வோர் வழக்குகள் பதிவு செய்யப்படும் பொழுது அது சிவில் வழக்காக மாறிவிடும். இதனால் வழக்கு, நீதிமன்ற நடை முறைப்படியே நடை பெறுவதால் காலதாமதம் ஏற்படுவதுடன், பெரும் செலவும் ஏற்படும்.

பெரும் தொகை சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் உள்ளவர்கள் ஒரு சிலர் தவிர மற்றவர்கள் நீதி மன்றத்தை அணுகுவது இல்லை. இச்சட்டத்தின் மூலம் இந்த குறைபாடுகள் அனைத்தும் நீக்கப்பட்டுள்ளது.

இனி நுகர்வோர் நீதிமன்றங்கள் பற்றி இங்கு காண்போமா :
நுகர்வோர் நீதிமன்றங்களின் அமைப்பும், செயல்பாடும்:

நுகர்வோர் நீதிமன்றங்கள் மாவட்ட அளவில் மாவட்ட நுகர்வோர் குறை தீர் மன்றங்கள்”, மாநில அளவில் மாநில ஆணையம்", தேசிய அளவில் தேசிய ஆணையம்என்ற அமைப்பில் செயல்பட்டு வருகிறது.

மாவட்ட நுகர்வோர் குறை தீர் மன்றம்:

20 லட்சம் ரூபாய் வரை நஷ்ட ஈடு கோரும் வழக்குகளை, மாவட்ட நுகர்வோர் குறைதீர் மன்றத்தில் தான் பதிவு செய்ய வேண்டும். நீதிமன்ற கட்டணம் எதுவும் செலுத்தவேண்டியது கிடையாது. இதனால் வழக்கு தொடருவதற்கு தகுதியே இல்லாத பிரச்சனைக்கெல்லாம் வழக்கு தொடர ஆரம்பித்தனர். இதில் எதிர் தரப்பினரை பிளாக் மெயில் செய்பவர்களும் அடங்கும். இது போன்ற வழக்குகளுக்கு அவர்கள் ஆஜராவது கிடையாது.
இதனால் வழக்கு தள்ளுபடியாகும் நிலை ஏற்பட்டது. இதனால் தவறே செய்யாத எதிர் தரப்பினர்களுக்கு கால விரயம் மற்றும் செலவு ஏற்படுவதையும், நீதி மன்றத்தின் நேரம் வீணாவதையும் கருத்தில் கொண்டு 2006 ம் ஆண்டில் கீழ் கண்டவாறு கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

1 லட்சம் ரூபாய் வரை நஷ்ட ஈடு கோரும் வழக்குகளுக்கு = 100 /-
1 லட்சத்திற்கு மேல் 5 லட்சம் வரை = 200 /-
5 லட்சத்திற்கு மேல் 10 லட்சம் வரை = 400 /-
10 லட்சத்திற்கு மேல் 20 லட்சம் வரை = 500 /-

வழக்கு தொடர தேவையான தகுதிகள்:

1. வழக்கு தொடருபவர் நுகர்வோராக இருக்கவேண்டும். வழக்கு அவர் சம்பந்தப் பட்டதாக இருக்கவேண்டும்.

2. நுகர்வோர், எந்த நுகர்வோர் குறை தீர்மன்றத்தின் அதிகார வரம்பிற்கு உட்பட்ட எல்லைக்குள் இருக்கிறாரோ அதில் தான் வழக்கு தொடரவேண்டும்.

3. புகாருக்கான ஆதாரங்கள் இருக்க வேண்டும்.

4. பிரச்சனை ஏற்பட்டதிலிருந்து 2 வருடங்களுக்குள் வழக்கு தொடர வேண்டும்.

யார் மீது வழக்கு தொடர முடியும்?

1. நமக்கு பொருட்களை விற்பனை செய்பவர்கள் அனைவரும். இதில் தனியார், அரசு நிறுவனம் என்ற பாகுபாடு கிடையாது. அனைவருமே இதில் உட்படுவர்.
உதாரணம்: மளிகை கடை, டிபார்ட்மெண்டல் ஸ்டோர், பேக்கரி, சைக்கிள் விற்பனையாளர், மெடிகல் ஷாப், ரேஷன் கடை போன்றவை.

2. பணம் வாங்கிக்கொண்டு வழங்கப்படும் சேவைகள், தனியார் மற்றும் அரசு துறை நிறுவனங்கள் அனைத்துமே இதில் அடங்கும்.
உதாரணம் : மின்சார வாரியம், குடிதண்ணீர் சப்ளை, இன்ஸூரன்ஸ் கம்பெனி, வங்கிகள், மருத்துவ மனைகள், கியாஸ் கம்பெனிகள், சப் -ரிஜிஸ்டிரார் அலுவலகம், போன்றவைகள்.

எந்தெந்த துறைகள் எல்லாம் இதில் அடங்கும் என சட்டத்தில் பட்டியலிடப்படவில்லை. காரணம். சேவை என்ற வார்த்தைக்கு முழுமையான விளக்கம் கொடுக்க முடியாது. வார்த்தைக்கான விளக்கம், வழக்குக்கு வழக்கு விரிவடையும் என்பதே உண்மை.

உதாரணத்திற்கு சப்-ரிஜி ஸ்டிரார் ஆபீஸை எடுத்துக்கொள்ளலாம்.

இந்த சட்டம் வந்த பின்பு, பலர் இந்த அலுவலகத்தில் அவஸ்தை பட்டு வந்தாலும், இது அரசு அலுவலகம் என நினைத்து விட்டு விட்டனர். பல வருடங்கள் இப்படியே கழிந்தது. ஒரு சில வருடங்களுக்கு முன்பு ஒருவர் ஒரு சொத்து வாங்க முடிவு செய்து, அதற்கு சம்பந்தப் பட்ட சப்- ரிஜிஸ்டிரார் அலுவலகத்தில் வில்லங்க சான்றுக்குரிய கட்டணத்தை செலுத்தி விண்ணப்பம் செய்தார்.

எந்த வில்லங்கமும் இல்லை என சர்டிபிகேட் கொடுத்து விட்டனர். அதை நம்பி, அவர் அந்த சொத்தை வாங்கி விட்டார். அதன் பின்பு தான் அதில் வில்லங்கம் இருப்பது தெரிய வந்தது.

அதனால் அவருக்கு நஷ்டம் ஏற்பட்டது. தவறான வில்லங்க சர்டிபிகேட் டிப்பார்ட்மெண்ட் கொடுத்ததினால் தான் நஷ்டம் என்றும், வில்லங்க சர்டிபிகேட் வழங்குவது என்பது பணத்தை பெற்றுக்கொண்டு வழங்கப்படும் சேவை என்பதால், நுகர்வோர் பாதுகாப்பு சட்டப்படி குறை பாடான சேவை என்பது அவர் முடிவு. அவர் நுகர்வோர் குறைதீர் மன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

அரசு தரப்பில், நுகர்வோர் பாதுகாப்பு சட்டப்படி தங்கள் மீது வழக்கு தொடர முடியாது என்றும், சர்டிபிகேட்டில் தவறுகள் இருந்தால் இலாகா பொறுப்பு அல்லஎன குறிப்பிட்டே வழங்கட்டுள்ளதால் தாங்கள் பொறுப்பல்ல என வாதம் செய்தனர். ஆனால் அவர்களின் ஆட்சே பனையை நிராகரித்த நீதிமன்றம் மனுதாரருக்கு நஷ்ட ஈடு வழங்க உத்தரவிட்டது.

இது சட்டம் பற்றிய விளக்கம் விரிவடையக் கூடியது என்பதற்கு ஒரு உதாரணம்.

வழக்கு தொடர தேவையான முன் நடவடிக்கைகள்:

உதாரணத்திற்கு நாம் ஒரு கடைக்குப்போய் ஒரு பொருள் வாங்குகிறோம் என்று வைத்துக் கொள்வோம். அதன் பாக்கிங்கில் போடப்பட்ட விலைக்கு அதிகமாக பணம் வாங்கினாலோ, எடை மற்றும் அளவு குறைவாக இருந்தாலோ அல்லது தரம் குறைவாக இருந்தாலோ உடனடியாக அதைப் பற்றி கடைக்காரரிடம் சுட்டிக்காட்டுங்கள். அவர் தவறை சரி செய்ய மறுத்தால், அவருக்கு நீங்களே குறைபாடுகளை சுட்டிக்காட்டி அதை சரி செய்யாவிட்டால் நுகர்வோர் வழக்கு தொட ரப்படும்என அத்தாட்சியுடன் கூடிய பதிவு தபாலில் நோட்டீஸ் அனுப்புங்கள். அவருக்கு நோட்டீஸ் பட்டு வாடா செய்யப்பட்டுள்ளது என்பதற்கான ஆதாரத்தை நோட்டீஸ் காப்பியுடன் வைத்துக் கொள்ளுங்கள்.

அதைப் போலவே பொருள் வாங்கியதற்கான ரசீதும் பத்திரமாக வைத்துக் கொள்ள வேண்டும்.

விலை சம்பந்தப்பட்ட பிரச்சனை என்றால், விலை அச்சடிக்கப்பட்ட பாக்கிங் கவரை பத்திரமாக வைத்திருங்கள்.

தரம் சம்பந்த பிரச்சனை என்றால், அதே பாக்கிங் கவருடன் பொருளை பாக்கிங் செய்து வைத்துக் கொள்ளுங்கள்.

எடை சம்பந்தப்பட்ட பிரச்சனை என்றால், நீங்கள் பாக்கிங்கை பிரிப்பதற்கு முன்பே எடை குறைவு என்பதை ஊர்ஜிதம் செய்து விட்டு பாக்கிங்கை பிரிக்காமல் இருக்க வேண்டும். ஒரு வேளை பிரித்து விட்ட பின்பு தான் எடை குறைவை கண்டு பிடித்தீர்கள் என்றால், பிரிக்கப்பட்ட பாக்கிங்கை ஆதாரமாக வைத்து வழக்கு தொடர முடியாது. எனவே மற்படியும் அதே கடைக்கு போய், அதே பொருளை, பில் போட்டு வாங்கிக்கொளுங்கள்.

இப்பொழுது சேவை சம்பந்தப்பட்ட பிரச்சனை என்றால், சேவைக்கான ரசீது இருக்கவேண்டும்.

முன்பு குறிப்பிட்ட படியே சம்பந்தப்பட்டவர்களுக்கு நோட்டீஸ் அனுப்புங்கள்.

எல்லா அத்தாட்சிகளையும் பத்திரமாக வைத்துக்கொள்ளுங்கள்.
தேவையான அனைத்து ஆவணங்களையும் திரட்டிய பிறகு நுகர்வோர் நீதிமன்றத்தில் வழக்கு தொடருங்கள்.

மக்கள் நல்லுறவு