Tuesday, June 21, 2016

பணம்

மக்கள் நல்லுறவு பகிர்கிறது

பணம் படுத்தற பாடு இருக்கே.!!💸 நான் உன்னுடன் இருந்தால் நீ செல்வந்தன்! நான் உன்னை விட்டு பிரிந்தால் நீ ஏழை!! 💵
என்னை மற்றவரிடம் கொடுத்தால் நீ கொடையாளி! என்னை மற்றவரிடமிருந்து பெற்றால் நீ கடனாளி!!
💴 என்னை செலவு செய்தால் நீ ஊதாரி! என்னை சேமித்து வைத்தால் நீ கஞ்சன்!! 💶
என்மேல் பற்றுடன் வாழ்ந்தால் நீ பேராசைக்காரன்! என்மேல் பற்றற்று வாழ்ந்தால் நீ சன்யாசி!!
💷 உன் தேவைக்கு நீ என்னை படைத்தாய்;இன்று உனது தேவை நானாக மட்டும் தான் இருக்கிறேன் ..
💰 உன் நடத்தையை விட நான் இருக்கும் இடத்தை வைத்துதான் உன் மதிப்பு நிர்ணயிக்கப்படுகிறது.!!இப்படிக்கு ...- நான் தான் "பணம்"

மக்கள் நல்லுறவு

No comments:

Post a Comment