மக்கள் நல்லுறவு
பகிர்கிறது
இந்த மூன்று
சமயங்களில் எந்த முடிவும் எடுக்க கூடாது.
*1. பசி வயிற்றை கிள்ளும் போது.*
*2. தூக்கம் நம் கண்களை சுழற்றும் போது.*
*3. போதையில் இருக்கும் போது.*
இந்த மூன்று
சமயங்களில் யாருக்கும் வாக்குறுதி தரக்கூடாது.
*1.மிகவும் மகிழ்ச்சியாக இருக்கும் போது*
*2. மிகவும் துக்கத்தில் இருக்கும் போது.*
*3. மிகவும் கோபத்தில் இருக்கும் போது.*
இந்த மூன்று
விதமானவர்களின் நட்பை ஒதுக்க வேண்டும்.
*1. நம்மைப் பற்றி உணராதவர்கள்.*
*2. நம்மைக் கண்டு பொறாமை கொள்பவர்கள்.*
*3.நமக்கு ஈடாக செயல்பட முடியாதவர்கள்*
இந்த மூன்று பேரை
எப்போதும் மறக்கக் கூடாது.
*1. ஆபத்தில் நமக்கு உதவி செய்தவர்கள்.*
*2. நம் குறைகளை பெரிது படுத்தாதவர்கள்.*
*3. நம்முடைய நலத்தை நாடுபவர்கள்*
விரோதியை
நம்பலாம். ஆனால் துரோகியை ஒரு போதும் நம்பவும் கூடாது. மன்னிக்கவும் கூடாது.
ஒருவருடைய குணம்
சரியில்லை என்று அறிந்த பின் அவர்களை விட்டு ஒதுங்கி போவதே நல்லது.
மக்கள் நல்லுறவு
பகிர்கிறது
No comments:
Post a Comment