Tuesday, September 13, 2016

காவிரி

கர்நாடகத்தில் காவிரி பிரச்சனையில் அப்பாவித் தமிழ் மக்கள் தாக்கப்படுவதை கண்டிக்கவேண்டும்
யார் கண்டிப்பது யாரை கண்டிப்பது

சிந்தித்து பார்!
கலவரத்தை தூண்டுவது யார்?
அதிகமாக இதன் பயனாளிகள் யார்?
கலவரத்தால் யாருக்கு நன்மை?

அரசியல் விளையாட்டால் தான் அப்பாவிகளுக்கு இந்த பாதிப்பா?
தண்ணிர் திறந்து விடுவதை துறைரீதியாக செயல்படுத்தும் செயலை பல ஆண்டுகளுக்கு முன் அரசியாலாக்கி பயன் பெறுபவர்கள், அதை வைத்து பேர் பெற்றவர்கள் யார் என சிந்தித்து பாருங்கள்,
அப்பாவி மக்களை அடிப்பதனால் வாகனத்தை எரித்தால் எல்லாம் சரியாகிவிடுமா?
தண்ணிர் நமக்கு இயற்கை தந்தது அது கர்நாடகம், கேரளம், ஆந்திரத்தின் மாநிலங்களின் சொந்தத் தயாரிப்புகளா? நாம் அதை பறிப்பதற்க்கும் அவர்கள்
உரிமை கொண்டாடுவதற்க்கும் அது யாருடைய சொந்த தயாரிப்பு அல்ல, இயற்கை தந்தது.

இயற்கையை இயற்கையாய் விட இவ்வளவு அரசியலா?
தமிழ்நாட்டில் கட்சி சார்பில்லாமால் பொதுமக்களை பற்றி மனிதநேயம் கொண்டு சிந்தித்து பாருங்கள்,
எந்த கட்சியாய் இருந்தாலும் சரி
ஆளும் கட்சி,  எதிர்கட்சியாக இருந்தாலும் சரி
மக்களுக்கு பாதிப்பு என்றால் ஒருமித்த குரல் ஏன் எழுப்புவதில்லை,

தான் பதவிக்கு வரமட்டும் பகைடைகாயாக மக்களை பயன்படுத்திக்கொண்டு பாதிப்பு வரும் போது மட்டும் தலைமையின் ஆணைக்கு காப்பது போல நடிப்பது ஏன்?
அமைதி காத்து ஓய்வெடுப்பது ஏன்?
எந்த காலத்திலும் மக்கள் தனக்கு
தனிப்பட்ட முறையில்  பாதிப்பு வரும்வரை குரல் கொடுக்கமாட்டான், இணைந்து போராடமாட்டான் தமிழன்  என்ற அசைக்க முடியாத நம்பிக்கை,

நதி நீர் இணைப்பை கிடப்பில் போட்டது யாரு?
மாட்டின் மிதும், பாட்டின் மீதும் பசுவின் மீதும் காட்டும் அக்கறை நாட்டீன் மீதும் நாட்டு மக்கள்  (மனிதன்) மீதும் இல்லாமல் போனது ஏன்?
எல்லாம் அரசியல் விளையாட்டு
அக்கறை கொண்டு யாரும்  போராடுவதில்லை, விளம்பரம், ஆதாயம்,

காங்கிரஸ் ஆட்சி என
கலவரத்தை ஒடுக்க மத்திய மாநில அரசுக்கு விருப்பமில்லை மேலும்  தொடரத்தான் விரும்புகிறது, இங்கு
கடிதம் எழுதி காத்திருக்கும் தமிழக அரசு,

ஆம் முழுக்க முழுக்க சட்டத்தின் படி நடந்து கொள்ளும், சட்டத்தை மிறாத  அம்மா அரசு, சட்டத்தை மதிக்கிறது,
சட்டத்தை காப்பது போல அமைதிகாக்க வேண்டும் மக்களே!
பஸ்கள் எரிகிறது, மக்கள் மீது நடக்கும் வன்முறை மீது தடுப்பு  நடவடிக்கை தான் என்ன?
பாதிப்பு அடைபவனுக்கு ஆறுதல் மட்டும்  போதுமா?
வலியும் வேதனையும் அனுபவிப்பவர்களுக்கு தெரியும்
நிரந்தர தீர்வு என்ன? அல்லது இதுவும் வருடவருடம் வரும் 
நாலுநாள் செய்தியா?

!என்ன செய்யப் போகிறாய்?

No comments:

Post a Comment