மக்கள் நல்லுறவு
நாம் தற்போது சிம், இருசக்கர வாகனம்,
கடன் என எதுவாங்கும்
போதும் , இன்னும் எந்த
வேலையாக இருந்தாலும் நம்முடைய ஆதார், ரேஷன் கார்டு, ஓட்டுநர் உரிமம்,
வாக்காளர் அடையாள அட்டை
என இன்னபிற ஆவணங்களில், (Self Attest) - கையெழுத்து இட்டு ஆதாரமாக தருகிறோம்.
நம்முடைய இந்த ஆவணங்களை, தெருவில் நின்று
கொண்டு சிம் விற்கக் கூடியவர்களிடம் கூட சுய கையெழுத்து இட்டு கொடுத்து
விடுகிறோம்.
அந்த ஆவணங்களை பெறக்கூடியவர்கள் அ
அவர்கள் நம்மிடம் நம் புகைப்படம் கேட்டால் அதனையும் கொடுத்து விடுகிறோம்.
நம்மிடமிருந்து பெற்றுக் கொண்ட ஆவணங்களைக்கொண்டு, வேண்டுமானால் பல சிம்களை வாங்கலாம். அதனை
எதற்கும் பயன்படுத்தலாம்.
சற்று முயற்சி செய்தால் நம் பெயரில் ஒரு வாகனத்தைக் கூட வாங்கி பதிவு செய்து
விடலாம்.
இவ்வாறு நம் பெயரில்
வாங்கப்பட்டவைகள் ஒரு வேளை தீவிரவாத செயல்களுக்கு பயன்படுத்தப்பட்டால், நாம்தான் முதல் குற்றவாளியாக இந்திய குற்றவியல்
சட்ட நடவடிக்கைகளுக்கு உள்ளாக்கப்படுவோம்.
இதிலிருந்து நம்மைக் காத்துக் கொள்வதற்கு என்ன வழி?
இதற்குப் பிறகு நாம் கையெழுத்துப் போடும் போது கீழ்காணும் நடைமுறைகளை
பின்பற்றுவதன் மூலம் இந்த பிரச்சனைகளை தவிர்த்துக் கொள்ள முடியும்.
1. கையெழுத்து
2. தேதி
3. கையெழுத்து இடுவதற்கான காரணம்.
4. இதனைத் தவிர்த்து வேறு எதற்கும் இது
செல்லத்தக்கது அல்ல.
இப்படி நாம் கொடுக்கும் ஒவ்வொரு ஆவணத்திலும் அதனை கொடுப்பதற்கான காரணத்தையும்
தேதியையும் எழுதி கையெழுத்து இட்டு கொடுக்க வேண்டும்.
இதனை பிறருக்கு கூறுவது அவர்களை இத்தகைய ஆபத்திலிருந்து காப்பாற்ற
வழிவகுக்கும்.
மக்கள் நல்லுறவு
No comments:
Post a Comment