Sunday, September 18, 2016

நதிகள் இணைப்பை கிடப்பில் போட்டது யாரு?

நதிகள் இணைப்பை கிடப்பில் போட்டது யாரு?

நம் நாட்டு பிரச்சனைகளை அனைத்து மாநில முதல்வர்களை அழைத்து பேசி நதிகள் இணைப்பை துவக்காமல் நாடு நாடாய் சுற்றி நாட்டு மக்களுக்கு என்ன  பயன்?

இந்திய சரித்திரத்தில் இடம் பிடிக்க, நாட்டின் எதிர்காலத்தை வளமாக்க, மக்கள், விவசாயிகள் மனதில் இடம் பிடிக்க இந்த முயற்சியை ஏன் முதலில்  செய்யவில்லை?

இந்தியா வளமான நாடாக மாறிவிடும் என்ற அச்சமா?

வளமான பாரதம் உருவக இதை விட வேறு எதேனும் முயற்சி  உண்டா?

இம் முயற்சிகளை செய்யாத மத்திய மாநில அரசு!
அத்தியாவசிய தேவைகளை, பிரச்சனைகளை வரும் முன் காப்பதில் அக்கறை காட்டுவதில்லை,

திட்டங்கள் போட்டாதாக காகிதத்தில் மட்டும் போடுவது எதற்கு?

இலவசங்களை அள்ளி வீசி மக்களை கவனம் திருப்புவதும், மதுவை தினம்
குடிக்க கொடுத்து மடையர்களாக்கி, சிந்திக்க தெரியாமால் செய்வதும், மெல்ல மெல்ல அழிக்க போடுது திட்டம்!

போடும் திட்டத்தால் மக்கள் மனதை கொள்ளை கொள்ளாமல்  பணத்தை மட்டும் கொள்ளை அடிப்பவர்களுக்கு ஆதரவு கொடுப்பதும் இலவசத்திற்க்கு கையேந்துவதும் சுய நினைவுடன் செய்யும் செயல்களா?

அத்தைகைய அரசுகளுக்கு மக்கள் வரவேற்பளிப்பார்கள், நமக்காக குரல் கொடுப்பதை காதில் வாங்கமாட்டார்கள், நமக்காக போராடுபவர்களை கண்ணால் காணமாட்டார்கள், எதிர்ப்பை காட்ட தெரியாதவர்கள்

இதையெல்லாம்
நீ உணரமாட்டாய்  போதையில் வாழ்கிறாய்!
நீ இறக்கும் காலத்தை நோக்கி செல்கிறாய்,
நான் எதிர் காலத்தை காண்பிக்கிறேன்,
நல்லதை யார் சொன்னாலும் செய்தாலும்  நாடும்நாட்டு மக்களும் ஏற்க்க மாட்டார்கள்!

காரணம்

விளம்பரம், இலவசம், மது, லஞ்சம்சுயநலம்கண்ணை மறக்கிறது.

No comments:

Post a Comment