மக்கள் நல்லுறவு
பகிர்கிறது
உங்க குழந்தைகள் மீது
உங்களுக்கு கொள்ளைப்பிரியமா
தயவு செய்து, வேர்க்கடலை, பேரீச்சம்பழம் தினமும் ஸ்நாக்சாக கொடுங்கள்!
கீரை வாரம் 3 முறை பருப்புக்கூட்டாகவும், ராகியை சேமியாவாக, கொழுக்கைட்டையாக, ரொட்டியாக வாரம் இருமுறை
கொடுக்கவும்!
ஆப்பிள், ஆரஞ்சை விட பப்பாளி,
கொய்யாவில்
சத்துக்கள் அதிகம்! தினமும் சாப்பிடக்கொடுங்கள்!
உங்கள் மனைவியின்
ஆரோக்கியத்தின் மீது அதிக அக்கறை கொண்டவரா நீங்கள்?
தயவு செய்து மண்
சட்டியும், இரும்புக்கடாயும், மரச்செக்கு எண்ணெய்யும் வாங்கிக்கொடுக்கவும்!
தினமும் 5பேரிச்சம்பழம் குறைந்த பட்சம் சாப்பிடக்கட்டாயப்படுத்துங்கள்!
கருப்பு அரிசி, கருப்பு எள், கருப்பட்டி, கருப்பு உளுந்து, மண் பானை தண்ணீர் சாப்பிட
வலியுறுத்துங்கள்!
உங்கள் கணவர் மீது அதிக
அக்கறை கொண்ட மனைவியா நீங்கள்?
தயவு செய்து பிரிட்ஜில்
வைத்த குழம்பு வகை, மாவு வகைகளை
கொடுக்காதீர்கள்! ஃப்ரஷ்ஷான காய்கறிகளை,இறைச்சியை சமைக்கவும்
சீரகத்தண்ணீர், சோம்புத்தண்ணீர்
குடிக்கக்கொடுக்கவும்!
நம் முன்னோர்கள்
பயன்படுத்திய உணவுப்பழக்கங்களை எப்பொழுது கைவிட்டோமோ! அன்றே நாம் நோய்யின்
பிடியில் சிக்கிக்கொண்டோம். இழந்த ஆரோக்கியத்தை முழுமையாக மீட்டெடுக்க முடியாது என்றாலும்
50%
ஆரோக்கியத்தை மீட்டெடுக்க நாம் நம் முன்னோர்களின் பயன்பாட்டில் இருந்த
உணவுப் பழக்கத்தை நாம் நம் நடைமுறை வாழ் கையில் பயன்படுத்துவன் மூலம்
சாத்தியமாகும்.
இன்றே! மீட்டெடுப்போம்!
வாருங்கள்!
சாதம் எப்படி
சாப்பிடவேண்டும்...???
சாதத்தை எப்படி சாப்பிடுகிறோம்
என்பதில்தான் நல்ல உடல் நலத்துக்கான சூட்சமம் இருக்கிறதாம்.
தமிழ் நாட்டில் அதிக
அளவில் சர்க்கரை நோய் இருப்பதற்கு காரணம் தினமும் அரிசி சாதம் சாப்பிடுவது என்று
பலரும் சொல்கிறார்கள். அது தவறு.
அதை எப்படி
சாப்பிடுகிறோம் என்பது தான் முக்கியம்.
பலரும் இன்று குக்கரில்
வேகவைத்த சாதம் சாப்பிடுகிறார்கள்.
கஞ்சியை வடிக்காமல் சாதம்
சாப்பிடுவதால் தான் நீரிழிவு ஏற்படுகிறது.
சாதம் வடித்த கஞ்சி சூடாக
இருக்கும்போது சிறிது உப்பைப்போட்டு பருகினால் கண் எரிச்சல், பித்தம் ஆகியவை அகலும். அதுவே கஞ்சி ஆறிப்போய் குடித்தால்
வாயுவை ஏற்படுத்தும்.
சாதம் உலையில் கொதிக்கும்
போதே கஞ்சியை எடுத்துப்பருகினால் நீர்க்கடுப்பை நீக்கும். கொதிக்கக்கொதிக்க சோறு
சாப்பிடக்கூடாது. மிதமான சூட்டிலேயே சாப்பிட வேண்டும். அதே நேரம் சில்லென்று
ஆறிப்போய் சாப்பிட்டால் கீல் வாதம், மூட்டு வாதத்தை ஏற்படுத்தும்.
பழையமுது
சாப்பிட்டுத்தான் நம் முன்னோர் நல்லதெம்புடனும் ஆரோக்கியத்துடனும் வாழ்ந்தார்கள்.
முதல் நாள் தண்ணீர்
சாதத்தில் ஊற்றி, மறு நாள் காலையில் பழைய
சோற்றை சாப்பிடுவது உடலுக்கு குளிர்ச்சி, வலிமை தருவதுடன்
வயிற்றுக்கோளாறு, அல்சர், மூட்டு வலி, தோல் நோய்கள் எதுவும்
பாதிக்காமல் பாதுகாக்கிறது.
பழைய சோற்றில் தயிர்
ஊற்றி சாப்பிடக்கூடாது. மோரைக்கடைந்து ஊற்றி சாப்பிட வேண்டும்.
சோறு வெதுவெதுப்பாக
இருக்கையில் பசும்பால் ஊற்றி சாப்பிட்டால் தண்ணீர்த்தாகம் ஏற்படுவதும் பித்தம்
உண்டாவதும் நீங்கும்.
பச்சரிசி சோற்றில் பால்
சேர்த்துச்சாப்பிட வாதம், பித்தம் நீங்கும்.
சிலர் சாம்பார், ரசம், வற்றல்குழம்பு என்று சாதத்தில்
பிசைந்து சாப்பிட்டு மோர் போட்டு சாப்பிடாமல் எழுந்து விடுவார்கள். இது உடம்புக்கு
மிகவும் கெடுதல். மோர் சாதம் செரிமானக் கோளாறுகளை நீக்கி, வாதம், பித்ததை தணிக்கிறது.
மாதாந்திர பிரச்சினை உள்ள
பெண்களுக்கு சிவப்பரிசி சாதம் மிகவும் நல்லது.
சம்பா சோறு வயிற்றுப்பொருமலுக்கு
மிகவும் நல்லது.
வாழையிலையில்
சாப்பிடுவதால் அதிலுள்ள துவர்ப்பு சத்து உடலில் சேர்ந்து நன்மை செய்கிறது.
வாழ்வில் நாம்
ஆரோக்கியமாக இருக்க கடைபிடிக்க வேண்டியவை
1. 4 மணி நேரத்திற்கு ஒருமுறை கட்டாயம் சிறுநீர் கழியுங்கள்.
கோடை காலத்திலும் கட்டாயம் நான்கு மணி நேரத்திற்கு ஒருமுறை கழித்தாக வேண்டும்.
2. காலையிலும், இரவு உணவுக்கு முன்பும்
கட்டாயம். மலம் கழிக்க வேண்டும். கண்ட நேரத்தில் கழிப்பது மலச்சிக்கலுக்கு
வழிவகுக்கும். காலை, மாலை இருவேளை
குளிக்கவும். மழைக்காலங்களில் காலையில் குளித்தால் போதும்.
3. உள்ளாடைகள் கிழியாவிட்டாலும் 6 மாதத்திற்கு ஒருமுறை மாற்றுங்கள். ஒருநாள்
பயன்படுத்தியபிறகு கட்டாயம் துவைத்துக் காயப்போடுங்கள்.
4. சிறுவர்கள் 1 ஸ்பூன், பெரியவர்கள் 2 ஸ்பூன் ஊறவைத்த
வெந்தயத்தை, வெறும் வயிற்றில் மென்று
விழுங்க வேண்டும், சர்க்கரையும், இரத்தக் கொதிப்பு வராமல் தடுக்கப்படும். வந்தால்
கட்டுக்குள் இருக்கும்.
5. காலை உணவுக்கு அரை மணி நேரத்திற்கு முன் தோல் நீக்கிய
இஞ்சித் துண்டைச் சாப்பிடுங்கள். கொழுப்பைக் குறைக்கும். தொப்பையைக் கரைக்கும்.
உணவை நன்றாக மென்று, பொறுமையாக உண்ணுங்கள்.
6. சுட்ட எண்ணெயை மீண்டும் பயன்படுத்திச் செய்யப்பட்ட
பண்டங்களைச் சாப்பிடக் கூடாது. அதனால் கெட்ட கொழுப்பு அதிகரிக்கும்; புற்றுநோயை உருவாக்கும்.
7. மைதா பரோட்டா வேண்டவே வேண்டாம், வாழ்நாளைக் குறைக்கும்.
குளிர்பானம், பாக்கெட் தீனிகள்
வேண்டாம்.
8. பிராய்லர் கோழிக்கறி வேண்டாம். மீன் அல்லது ஆட்டுக்கறி, நாட்டுக் கோழி மட்டும் சாப்பிடுங்கள். மது, புகை கூடவே கூடாது.
9. மதியம் சாப்பாட்டுக்கு ஒரு மணி நேரம் முன்பு சுக்குக் காபி
சாப்பிடுவது மிகவும் நல்லது. உண்ட உணவு முழுமையாகச்
செரிக்கும் முன்பு அடுத்த திட உணவு கூடாது.
10. பாதாம், முந்திரி, உலர்பழம், பழங்கள், கீரைகள், டார்க் சாக்லட், கிரின் டீ, கடலை மிட்டாய், எள் உருண்டை, பனைவெல்லம், சோற்றுக்கற்றாழை (ஏழு முறை சுத்தம் செய்து தேன் கலந்து)
நாள்தோறும் சாப்பிடவும்.
11. பயோட்டின் (எச் வைட்டமின்) என்ற வைட்டமின் குறைவால், தலைமுடி உதிர்தல், நகங்கள் உடைதல், தோல் நோய், எடை குறைவு, தசைவலி, கொழுப்பு அடைப்பு, மன அழுத்தம் ஏற்படும். இவற்றைத் தவிர்க்க, வேர்க்கடலை, முந்திரி, மீன், முட்டை, வாழைப்பழம், பப்பாளி, தக்காளி, காலிபிளவர், காளான், மோர் சாப்பிடவேண்டும்.
12. காலை அல்லது மாலை 1 மணி நேரம் உடற்பயிற்சி, இரவு 11 மணி முதல் காலை 5 மணி வரை கட்டாயம் உறங்க வேண்டும்.
வாழ்க நலமுடன்...
No comments:
Post a Comment