Sunday, August 7, 2016

மக்கள் நல்லுறவு கடந்து வந்த பாதை சில துளிகள்.

மக்கள் நல்லுறவு
கோவை மக்கள் நல்லுறவு நலசங்கம்
மொத்த உறுப்பினர்கள் 1680
களப்பணியாளர்கள் :150

மக்கள் சேவையில் கடந்த 15 மாதமாக செயல்பாடுகளின்  சில துளிகள் :

மேட்டுப்பாளைய ரோடு சாய்பாபகாலனி முதல் கவுண்டர்மில் வரை மின்விளக்கு அமைத்து தரவேண்டி முதல் மனு, Corporation commissioner, district collecter, cm cell.

44 ம் வார்டு பகுதி சண்முகா நகர் மக்களுக்கு 40 ஆண்டுகால கோரிக்கை சாலை வசதி வேண்டி, (இடம் ரோடு பெற்றுத்தந்து சிமெண்ட் ரோடு, தார்ரோடு, குடிநீர், மின்விளக்கு சம்பந்தப்பட்ட துறைமுலம் பெற்றுதந்தது.

சிறுநிரகச் சிகிச்சை உதவித்தொகை 25,000/- மருத்துவ உதவி, கல்வி உதவித்தொகை மக்கள் நல்லுறவு முலம் செய்யப்பட்டது.

47வார்டில் இலவச மருத்துவமுகாம், முலிகை கண்காட்சி, சித்த மருத்துவம்" அக்குபிரசர், அங்குபன்சர் பயிற்சி வகுப்புகள் வார்டில் நடத்தப்பட்டது.

44 45 வார்டில் எங்களை நாடி வந்த உள்ளங்களுக்குத் தேவையான அரசு மருத்துவமனை உதவிகள், இறப்பு சம்மந்தமான பிரேதபரிசோதனை, மற்றும் இதர உதவிகள் சங்கம் முலம் செய்யப்பட்டது.

44 ம் வார்டு நண்பர் மற்றும் அதிமுக கட்சி உறுப்பினர்ருக்கு மக்கள் நல்லுறவு குழு முலம்  சுமார் 60,000 வரை மருத்துவ உதவி செய்தது.

ஆதரவற்றவர்கள் இறந்தால் நல்லடக்கம் செய்யும் பணியில்இருக்கும் ஜிவசாந்தி அறக்கட்டளையிடம் நட்பு கொண்டு நல்லடக்கப்பணியில் காவல் துறையிடம் இணைந்து செயல்பட்டது.

பொதுமக்கள் குறைகளை பெற்று (சுமார் 60 புகார் மனு குறைகளை)  பல மனுக்கள் நேரிடையாக மாவட்ட ஆட்சியர், மாநகராட்சி ஆணையர், சம்மந்தப்பட்ட பகுதி மாமன்ற உறுப்பினர்களுக்கு புகார் மனு அளித்து நிவர்த்தி செய்து கொடுக்கப்பட்டது.

கல்வி கடன் பெற்றுத்தரப்பட்டது.

இலவச இருதய பரிசோதனை முகாம் கணபதி பகுதியில் கோவை Heart foundation முலம் நடத்தப்பட்டது.

44ம் வார்டு நேதாஜி நகர் குறை குப்பை கிடங்கு, கட்டிட கழிவு அகற்றி பாதை அமைத்து தர நடவடிக்கை எடுக்கப்பட்டது, சாலையில் வேகத்தடை அமைத்து தர ஏற்பாடு செய்யப்பட்டது.

44, 45, 47-வார்டுகளில் மக்கள் பணியில் எங்களுடன் இணைந்து செயலாற்றிய நல் உள்ளங்களுக்கு பாராட்டு விழா சான்றிதழ் வழங்கியது.

கண்கள் தானம், ரத்ததானம், உடல் உறுப்பு தானம் நிகழ்ச்சியில் பங்கேற்றது.

சென்னை கடலுர் மழை வெள்ள நிவாரணம் 1,00,000/-பொருட்கள் மக்கள் நல்லுறவு குழு முலம் அனுப்பபட்டது.

இலவச அரிசி 44 வார்டு  கருணையில்லத்திற்க்கு வழங்கியது.

மக்களுக்கு தேவையான விழிப்புணர்வுகளை பத்திரிக்கை முலமாக விடு விடாக விநியோகம் செய்தது.

இப்படி பல நன்மைகள் மக்கள் சேவையில் ஈடுபாட்டுடன் செய்து வருகிறது இதில் இன்று வரை வசூல் இல்லை மக்கள் நல்லுறவு குழு மனமுகந்து செய்யும் செயலாகும்.

எங்களது பணி மக்களின் சேவை பணியாகும், எங்களால் முடிந்த அளவு நிர்வாகிகள்  முலம்  பொருள் உதவியும், உடல் உழைப்பையும் நிச்சயமாக மக்களுக்கு தொடர்ந்து செய்து வருகிறோம், செய்வோம்.

Publicity க்காக இது இல்லை City public க்காக செயல்படும் சங்கம், தவறை  தட்டிக்கேட்பது ஒரு வகை, தட்டிக்கொடுத்து வேலை வாங்குவது ஒரு வகை இந்த இரண்டையும் செய்வது நமது வகை.

பணம் சம்பாதிப்பது நோக்கமல்ல மக்களின் மனம் சாம்பாதிப்பது எங்களின் நோக்கம், எனவே தொடர்ந்து எங்களுக்கு ஆதரவு கொடுங்கள், ஊக்கப்படுத்துங்கள்.

என்றும் மக்கள் சேவையில் மக்கள் நல்லுறவு

இ.சுக்குர்லா பாபு

No comments:

Post a Comment