Monday, March 28, 2016

வழிமுறை

படித்ததை, பிடித்ததை பகிர்கிறது மக்கள் நல்லுறவு
வாழ்க வளமுடன்


வழிமுறைகள் பிரச்சினைகள் தீர.


*பேசி தீருங்கள். பேசியே வளர்க்காதீர்கள்.
*உரியவர்களிடம் சொல்லுங்கள். ஊரெல்லாம் சொல்லாதீர்கள்.
*நடப்பதைப் பாருங்கள். நடந்ததைக் கிளறாதீர்கள்.
*உறுதி காட்டுங்கள். பிடிவாதம் காட்டாதீர்கள்.
*விவரங்கள் சொல்லுங்கள். வீண்வார்த்தை சொல்லாதீர்கள்.
*தீர்வை விரும்புங்கள். தர்க்கம் விரும்பாதீர்கள்.
*விவாதம் செய்யுங்கள். விவகாரம் செய்யாதீர்கள்.
*விளக்கம் பெறுங்கள். விரோதம் பெறாதீர்கள்.
*பரிசீலனை செய்யுங்கள். பணிந்து போகாதீர்கள்.
*சங்கடமாய் இருந்தாலும் சத்தியமே பேசுங்கள்.
*செல்வாக்கு இருந்தாலும் சரியானதைச் செய்யுங்கள்.
*எதிர் தரப்பும் பேசட்டும். என்னவென்று கேளுங்கள்.


எவ்வளவு சீக்கிரம் தீர்வு வரும் பாருங்கள்.
*நேரம் வீணாகாமல் விரைவாக முடியுங்கள்.
*தானாய்த்தான் முடியுமென்றால் வேறு வேலை பாருங்கள்.
*யாரோடும் பகையில்லை என்பது போல் வாழுங்கள். யார் இல்லையென்றால் என்ன?
எண்ணியதை அடையுங்கள். பிடித்தால் அப்படியிருக்க முயற்சி செய்யவும்

முடிந்தால் பகிரவும்
மக்கள் நல்லுறவு

No comments:

Post a Comment