Wednesday, March 30, 2016

நமக்கு நாமே

மக்கள் நல்லுறவு
பெரியார் "அண்ணா, காமராஜர், தமிழகத்தில் செய்த நல்ல காரியங்களையும் அவர்களின் பெயரை வைத்து அடுத்து வந்தவர்கள் ஆட்சி செய்து கட்சி நடத்துகின்றனர், இவர்கள்  சுயமாக செய்த செயல்கள் பற்றி  இவர்களுக்கே நம்பிக்கை இல்லையா?

மக்களுக்கே புரியாத?

மக்கள் மனதில் இலவசத்தை தவிர. இவர்கள்  செய்த செயல்,  நாட்டு நலன்கள், திட்டங்கள் நம் கண் முன்னே தோன்றுவதில்லை ஏன்?

ஊழல், லஞ்சம், விலைவாசி உயர்வு, மது, மக்களை கஷ்டப்படுத்தும் விதமான சட்டங்கள், திட்டங்கள், செயல்பாடுகள், கண் முன்னே தோன்றுகிறேதே  இது ஏன்?

உண்மையில் யாரோ ஐந்து ஆண்டுகள் சந்தோஷமாக வாழ நாம் கஷ்டப்படுகிறோம், ஒட்டு போடுவது நம் உரிமை, கடமை அதை நாங்கள் மறுப்பதில்லை மறப்பதில்லை, ஒவ்வொரு முறையும் கடமையை செய்கிறோம், கடமையை சரிவர  செய்யாத நபர்களுக்காக, எங்களுக்கு
மறதியில்லை மாற்றம் வரும் என்ற நம்பிக்கையில் காத்திருக்கும்  சாதாரண குடிமகன்கள்.


தேர்தல் வரும் ஒவ்வொரு முறையும் நமக்கு நாமே ஆறுதல், 
உண்மையில் இது தான் நமக்கு நாமே
"இதுவும் கடந்து போகும்"


மக்கள் நல்லுறவு

No comments:

Post a Comment