Sunday, March 13, 2016

கெய்ல் எரிவாயு திட்டம்

மக்கள் நல்லுறவு பகிர்கிறது 

தமிழகத்தில் கெய்ல் எரிவாயு திட்டத்தை நிறைவேற்ற சுப்ரீம் கோர்ட் அனுமதி....

பாரம்பரிய நெல் வகைகள்
1. அன்னமழகி
2. அறுபதாங்குறுவை
3. பூங்கார்
4. கேரளா ரகம்
5. குழியடிச்சான் (குழி வெடிச்சான்)
6. குள்ளங்கார்
7. மைசூர்மல்லி
8. குடவாழை
9. காட்டுயானம்
10. காட்டுப்பொன்னி
11. வெள்ளைக்கார்
12. மஞ்சள் பொன்னி
13. கருப்புச் சீரகச்சம்பா
14. கட்டிச்சம்பா
15. குருவிக்கார்
16. வரப்புக் குடைஞ்சான்
17. குறுவைக் களஞ்சியம்
18. கம்பஞ்சம்பா
19. பொம்மி
20. காலா நமக்
21. திருப்பதிசாரம்
22. அனந்தனூர் சன்னம்
23. பிசினி
24. வெள்ளைக் குருவிக்கார்
25. விஷ்ணுபோகம் [19]
26. மொழிக்கருப்புச் சம்பா
27. காட்டுச் சம்பா
28. கருங்குறுவை
29. தேங்காய்ப்பூச்சம்பா
30. காட்டுக் குத்தாளம்
31. சேலம் சம்பா
32. பாசுமதி
33. புழுதிச் சம்பா
34. பால் குடவாழை
35. வாசனை சீரகச்சம்பா
36. கொசுவக் குத்தாளை
37. இலுப்பைப்பூச்சம்பா
38. துளசிவாச சீரகச்சம்பா
39. சின்னப்பொன்னி
40. வெள்ளைப்பொன்னி
41. சிகப்புக் கவுனி
42. கொட்டாரச் சம்பா
43. சீரகச்சம்பா
44. கைவிரச்சம்பா
45. கந்தசாலா
46. பனங்காட்டுக் குடவாழை
47. சன்னச் சம்பா
48. இறவைப் பாண்டி
49. செம்பிளிச் சம்பா
50. நவரா
51. கருத்தக்கார்
52. கிச்சிலிச் சம்பா
53. கைவரச் சம்பா
54. சேலம் சன்னா
55. தூயமல்லி
56. வாழைப்பூச் சம்பா
57. ஆற்காடு கிச்சலி
58. தங்கச்சம்பா
59. நீலச்சம்பா
60. மணல்வாரி
61. கருடன் சம்பா
62. கட்டைச் சம்பா
63. ஆத்தூர் கிச்சிலி
64. குந்தாவி
65. சிகப்புக் குருவிக்கார்
66. கூம்பாளை
67. வல்லரகன்
68. கௌனி
69. பூவன் சம்பா
70. முற்றின சன்னம்
71. சண்டிக்கார் (சண்டிகார்)
72. கருப்புக் கவுனி
73. மாப்பிள்ளைச் சம்பா
74. மடுமுழுங்கி
75. ஒட்டடம்
76. வாடன் சம்பா
77. சம்பா மோசனம்
78. கண்டவாரிச் சம்பா
79. வெள்ளை மிளகுச் சம்பா
80. காடைக் கழுத்தான்
81. நீலஞ்சம்பா
82. ஜவ்வாதுமலை நெல்
83. வைகுண்டா
84. கப்பக்கார்
85. கலியன் சம்பா
86. அடுக்கு நெல்
87. செங்கார்
88. ராஜமன்னார்
89. முருகன் கார்
90. சொர்ணவாரி
91. சூரக்குறுவை
92. வெள்ளைக் குடவாழை
93. சூலக்குணுவை
94. நொறுங்கன்
95. பெருங்கார்
96. பூம்பாளை
97. வாலான்
98. கொத்தமல்லிச் சம்பா
99. சொர்ணமசூரி
100. பயகுண்டா
101. பச்சைப் பெருமாள்
102. வசரமுண்டான்
103. கோணக்குறுவை
104. புழுதிக்கார்
105. கருப்புப் பாசுமதி
106. வீதிவடங்கான்
107. கண்டசாலி
108. அம்யோ மோகர்
109. கொள்ளிக்கார்
110. ராஜபோகம்
111. செம்பினிப் பொன்னி
112. பெரும் கூம்பாழை
113. டெல்லி போகலு
114. கச்சக் கூம்பாழை
115. மதிமுனி
116. கல்லுருண்டையான் (கல்லுருண்டை)
117. ரசகடம்
118. கம்பம் சம்பா
119. கொச்சின் சம்பா
120. செம்பாளை
121. வெளியான்
122. ராஜமுடி
123. அறுபதாம் சம்பா
124. காட்டு வாணிபம்
125. சடைக்கார்
126. சம்யா
127. மரநெல்
128. கல்லுண்டை
129. செம்பினிப் பிரியன்
130. காஷ்மீர் டால்
131. கார் நெல்
132. மொட்டக்கூர்
133. ராமகல்லி
134. ஜீரா
135. சுடர்ஹால்
136. பதரியா
137. சுதர்
138. திமாரி கமோடு
139. ஜல்ஜிரா
140. மல் காமோடு
141. ரட்னசுடி
142. ஹாலு உப்பலு
143. சித்த சன்னா
144. வரேடப்பன சேன்
145. சிட்டிகா நெல்
146. கரிகஜவலி
147. கரிஜாடி
148. சன்னக்கி நெல்
149. கட்கா
150. சிங்கினிகார்
151. செம்பாலை.
152. மிளகி
153. வால் சிவப்பு.


கர்நாடகா மாநிலத்தின் வழியாக இந்த எரிவாயு பைப்கள் செல்லாமல்,  தமிழ்நாட்டுக்குள் ஏன் வருது ?.

இத்தனைக்கும் கர்நாடகா வழியே சென்றால் தூரமும் குறைவு,  பின் ஏன் தமிழ் நாட்டிற்குள் அனுமதி வழங்கப்பட்டுள்ளது?


ஏன் தெரியுமா இந்த பைப் லைன் போற வழி எல்லாம் விவசாய நிலங்கள் பாழ்பட்டு போகும், 
வீடு  ,தோட்டம் வயல் எது இருந்தாலும் அழிக்கப்படும். 

இதை கர்நாடகாவில் செய்ய முடியுமா?. 
முடியாது, மீறி செய்தால் இந்திய அரச அடிப்பான் கருநாடகக்காரன்.


பின்பு என்னதான் வழி.

இருக்கவே இருக்கு நம்ம இழிச்சவாய நாடு, திறந்த வீடு, நாடு  நம்ம அடிமை  தமிழ்நாடு.

ஏற்கனவே பிற வெளிமாநிலங்களிலிருந்து அடித்து விரட்டப்பட்ட ஆபத்தான அணுஉலையை கூடங்குளத்தில் நிறுவி தென்தமிழகத்தை சுடுகாடாக மாற்றியாச்சு.

நியூட்ரினோ அணுஉலையை தேனியில் தொடங்கி தென்மேற்கு தமிழகத்தை அழிக்க அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் உள்ளது.

பெரும் மக்கள்   போராட்டத்தையும் மீறி  அழிவுத்திட்டமான மீத்தேன் திட்டத்தை பெயரை மட்டும் மாற்றி "செல் எரிவாயு "என்ற பெயரில் தஞ்சாவூர், நாகை  பகுதிகளில் மீத்தேன் திட்டத்தை தொடங்கி வடகிழக்கு தமிழகத்தை சுடுகாடாக்க அனைத்தும் தயார்.

கல்பாக்கம் அணுஉலை வடதமிழகத்தை ஒட்டுமொத்தமாக அழிப்பதற்க்காக காத்துக்கொண்டிருக்கிறது.

பெயர் மட்டும் தான் தமிழ்நாட்டின் தலைநகரம்,  ஆனால் அங்கு வாழ்வதும், வணிகம் செய்வதும் தமிழர் அல்ல அனனத்தும் அயலார். இவ்வாறு அயலார் ஆக்கிரமிப்பால் நாளும் அல்லல்படுகிறது   தமிழகம்.

உலகில் முதன் முதலில் கடல் வணிகம் செய்த தமிழரின் கடற்பரப்பு இன்று தமிழருக்கானது இல்லை. அதில் மீன் பிடிக்கும் உரிமை தமிழருக்கு இல்லை. மீறினால் துப்பாக்கிச் சூடு.

தமிழ்நாட்டின்  வாழ்வாதாரம் ஆக விளங்கும் காவேரி, முல்லைப்பெரியாறு ஆற்று உரிமை வெள்ளையர் கால அடிமை இந்தியாவில் கூட   தமிழ் நாட்டிற்க்கு இருந்தது. ஆனால் சுதந்திர இந்தியாவாக கருதப்படும் இன்று தமிழ் நாட்டின் உரிமை மறுக்கப்படுகிறது.


வெள்ளைக்காரன் காலம் வரை எந்தச் சிக்கலுமின்றி நடைபெற்று வந்த தமிழரின் பண்பாட்டு அடையாளமான ஏறுதழுவுதல் இன்று இந்திய கொள்ளையர் ஆட்சியில் தடைசெய்யப்பட்டுள்ளது.

உலகில் முதலில் தோன்றி இன்றுவரை அழியாமல் இருக்கும் ஒரே மொழியான நம் தாய்மொழியான தமிழ் மொழியை தமிழ் நாட்டு பள்ளிகளில் தமிழ் வழியில் படிக்கத் தடை,   பேசத் தடை, கோவில்களில் வழிபடத்தடை, நீதிமன்றங்களில் வழக்காடத் தடை, தமிழ்வழியில் படித்தோர்க்கு வேலைக்குத் தடை.

இவ்வாறு  தமிழ் மொழி, பண்பாடு, கலைகள் அனைத்தும் தினந்தோறும் இந்திய அரசால் அழிக்கப்பட்டு வருகிறது.

அட தமிழா! 
இன்னுமா நீ அடிமை என்பதை அறியாமல் வாழுகிறாய்!


தமிழகத்தில் கொஞ்சம் கொஞ்சமாக மண்வளங்களும்,  நீர்நிலைகளும், ஆறுகளும், கண்மாய்களும் சுகாதாரம் கெட்டும், அழிந்தும் வருகிறது. இந்த திராவிட அரசாங்கங்கள் இதை கண்டு கொள்வதில்லை. இந்த மண் கெட்ட பிறகு  எங்கு போய் வாழப்போகிறீர்கள்...??? வான் உலகத்திலா; செவ்வாய் கிரகத்திலா...???

அனைவருக்கும் பகிருங்கள்...
மக்கள் விழிப்புணர்வு பெறட்டும்...
தலைமுறைகள் வாழட்டும்...

மக்கள் நல்லுறவு

No comments:

Post a Comment