Wednesday, April 18, 2018

அரசியல் பாடம்


இன்றைய இளைஞர்களுக்கு  அரசியல் பற்றி மூத்த உறுப்பினர் ஒருவர்  சொன்ன அரசியல் பாடம் :

நாடக மேடை : இன்றைய அரசியலில் நீ இருந்தால்  அருகில் இருப்பவனை கூட நம்பாதே!

உன்னை ஏணிப்படியாக்கி ஏறி போவார்கள், நீ ஏமாந்து போவாய் குறிப்பாக அன்றைய தேவைக்கு பயன்படுத்துவார்கள்.

உள்ளுக்குள் சுயநலம் தான் அதிகமாக இருக்கும்! நல்ல வழியை காட்டமாட்டார்கள், காசு, பதவி இருக்கும் வரை கூட்டம் உன்னிடம் இருக்கும், இரண்டும் போனால் அனைவரும் காணாமல் போய்விடுவார்கள்.

பொதுநலம் குறைவாக தெரியும், ஆசை, வேசம், அதிகம், பணத்திற்க்கு முன்னுரிமை, குறிப்பாக உனக்கு ஆசையை காட்டி அவங்க படி ஏறி போயிடுவாங்க!

பதவி மோகம் உண்டாகும், விளம்பரம் தான் இன்றைய அரசியல், அணிகள் பல இருக்கும் களப்பணி இருக்காது.

மதுவுக்கும், பணத்திற்க்கும் கூடும் கூட்டம், கொள்கை, லட்சியம், உரிமைக்கு கூடாது, உண்மையான அர்பணிப்பு இருக்காது.

ஜாதிக்கு முன்னுரிமை கொடுக்கும், சாதிப்பவனுக்கு கொடுக்காது, உன் உழைப்பு, நேரம், வீணாகும், அவன் அவன் பதவியை காக்க எந்த சூழ்நிலையிலும் எப்படி வேண்டுமானலும் மாறுவார்கள்!

இன்றைய எதிரி நாளைய நண்பன், இன்றைய நண்பன் நாளைய எதிரி.

யாரையும் நம்பி ஏமாறாதே! பொருளை இழக்காதே! பொறுமை இழக்காதே! போதை கொள்ளாதே! போட்டி பொறாமை அதிகமாய் இருக்கும், அன்பு குறையும்.

நல்லவர்கள், நல்லதை செய்ய நினைப்பவர்கள் இன்றைய அரசியலில் முன்னேற முடியாது, முட்டுக்கல் அதிகமாக இருக்கும், முட்கள் இருக்கும், அதை மக்களும் உணரமாட்டார்கள்.

உங்கள் பாஷையில் சொன்னால் கட்டப்பாவும் இருப்பான், எட்டப்பாவும் இருப்பார்கள்.

பாதி பேருக்கு கட்சி, கொள்கை, லட்சியம், கடமை,  செயல்பாடு, மக்கள் பணி, களப்பணி, அரசியல்பணி, தொண்டு, சேவை, தேர்தல் பணி, இன்றைய விஞ்ஞான வளர்ச்சி பற்றி அறிவு, பேச்சு திறன் அடிப்படையான விசயங்கள் இப்படி எதுவுமே  தெரியாது, ஆனால் பொறுப்பில்  பதவியில்  இருப்பது ஆச்சரியம்.

அரசியல் கடல் என்பது மறைந்து, குறைந்து சாக்கடையாக மாறிவிடும் சூழ்நிலையாகி வருகிறது.

எங்கள் காலத்தில் இருந்தது போல தலைவர்களும் இல்லை, தொண்டர்களும் இப்போழுது இல்லை.

நாகரிகமற்ற மேடை பேச்சுகள், விமர்சனம், ஜாதி மத மோதல் பேச்சுக்கள், விளம்பரம், துணையாகும் ஊடகங்கள்.

அரசியலில் ஒவ்வொரு அடியும் கண்ணில்லாத குருடர்கள் போல யோசித்து, தடியை தட்டிக்கொண்டு, காதை தீட்டிக்கொண்டு, புத்தியை கத்திபோல பதப்படுத்தி கொண்டு எச்சரிக்கையாய் எடுத்து வைத்தால் எளிதில் கடந்து போகலாம்.

எனக்கு கண் இருக்கு என ஆட்டம் போட்டால் பள்ளத்தில் வீழ்ந்து விடுவாய், அல்லது தள்ளி விட்டு விடுவார்கள்! கவனம்!

No comments:

Post a Comment