மனிதனை மனிதன் அழிக்கும் மது!
மதுவோடு ஈடுபடுவர்கள் அனைவரும் இறைவனால் சபிக்கப்பட்டவர்களே!
மதுபானம் தயாரிக்க அனுமதி கொடுத்தவன்,
அதற்க்கு தேவையான மூலப்பொருட்களை
கொண்டு மது பானத்தை தயாரிப்பவன்,
மதுபானங்களை விற்பனை கேந்திரங்களுக்கு கொண்டு செல்பவன்,
மது பானம் விற்க இடத்தை அளித்து ஏற்பாடு செய்தவன்,
யாருக்காக மதுபானங்கள் கொண்டு செல்லப்பட்டதோ அதை வாங்கி ஊரெல்லாம் விற்பனை செய்பவன்,
மதுபானங்களை பரிமாறுபவன்
மதுபானங்களை குடிப்பவன்,
மதுபானக் கடையின் முலம் ,விற்பனை முலம் நேரிடையாக, மறைமுகமாக பயனடைந்தவன்,
மதுபானங்கள் விற்று வரும் பணத்தை பயன்படுத்துபவன்
மதுபானங்களை வாங்குபவன்
மதுபானங்கள் யாருக்காக வாங்கப்பட்டதோ அவன்
மீதும் இறைவனின் சாபம் மெல்ல மெல்ல இறங்குகிறது.'
மதுவின் மூலம் கிடைக்கும் வருமானம் இன்று இப்போழுது மகிழ்ச்சியாய் இன்பமாய் தெரியும், இறுதியில் துன்பத்தில் முடியும்!
மதுவின் மூலம் சேர்த்த செல்வம் மெல்ல மெல்ல உன் செல்வங்களை பாதிக்கும்,
மதுவின் மூலம், மதுவை கொண்டு பயனடைந்தவனின் வெற்றி இறுதியில் தோல்வியில் முடியும்,
மதுவால் விரைவாக தேடி வரும் மரணம்! தேடிவரும் துன்பம்!
தேவையா உனக்கு?
No comments:
Post a Comment