Wednesday, April 25, 2018

மாத்தியோசி

எப்படி ஆங்கிலேயன் இந்தியாவை கைப்பற்றினான்?

அதுபோல தமிழ்நாட்டில் மெல்ல மெல்ல வட மாநிலத்தார்கள் தொழில் முலம் கால் பதிப்பார்கள் ஒவ்வொரு துறையிலும் ஆதிக்கம் இருக்கும், கூலி வேலையில் தொடங்கி, பான்மசாலா, வட்டிதொழில் , பேல்பூரி,இஞ்சி டீ கடை,  கட்டிட வேலை, அரசு துறை அதிகாரப் பதவி  என நாளுக்கு நாள் மெல்ல ஆக்கிரமிப்பு செய்வார்கள், தொழில் விரிவாக்கம் ஆகும்.

முன்னே என்ன தான் சம்பாதித்தாலும்  வாடகைக்கு வீடு வாங்கி தான் இருப்பார்கள், ஊருக்கு போய் தான் சொத்து சேர்ப்பார்கள் ஆனால்  இப்போ சொந்தமாக இங்கேயே வீடு நிலம் வாங்கி செட்டிலாகி விடுகிறார்கள், தமிழ் நாடு பாதுகாப்பு, என பதில் வரும், ஆதார் வாக்காளர் அட்டை வாங்கப்படும்.

மெல்ல மக்களை தன் கட்டுப்பாடுக்குள் கொண்டு வந்து விடுவார்கள், பலத்தை கூட்டுவார்கள், ஆட்களை மெல்ல மெல்ல மறைமுக கட்சிகளில் இணைப்பார்கள், தேர்தல் செலவுக்கு அள்ளி அள்ளி பணம் தருவார்கள், ஆக தமிழ் நாட்டில் திராவிடம் மறைய  பூக்கள்  மலர இதுவும் ஒரு  வழியா?  கொஞ்சம் மாத்தியேசி! எச்சரிக்கையாய் இரு!

No comments:

Post a Comment