Wednesday, April 18, 2018

அடையாளம்


தன் நாட்டுக்காரானாக இருக்கட்டும், தன் ஊர் காரனாக இருக்கட்டும், தன் கட்சிக்காரனாக இருக்கட்டும், தன் ஜாதிக்காரனாக இருக்கட்டும், தன் குடும்பத்தை சேர்ந்தவனாக கூட இருக்கட்டும், ஏன் தன் மகனாக கூட இருக்கட்டும், தெரிந்து அறிந்து தப்பு செய்தால், பெண்களிடம், குழந்தைகளிடம், அப்பாவி மனிதர்களிடம் அத்துமிறி பலத்காரம் செய்தால் தானக முன் வந்து தண்டனை அளிக்க பரிந்துரை செய்யும் அளவிற்க்கு மாற்றம் வேண்டும்நாட்டில் சட்டம் வேண்டும்,அந்த மனம், எண்ணம் எல்லோரிடமும்  வர வேண்டும்.

எல்லாத்திற்க்கும் ஆதரவு, பணம், அரசியல் பலம், அதிகாரிகள் பலம்,  ஆள்பலம், எந்த தவறு செய்தாலும் இவைகள் மூலம் சரிகட்டி விடலாம் என்ற எண்ணம் தான் அனைவரையும் வளர்த்துக் கொண்டு இருக்கிறது.

மாறவேண்டும், சட்டம் முதல் சாமனியன் வரை மாறவேண்டும்!

எத்தனை அவலங்கள் வன்முறைகள் நாட்டில் நடந்தாலும்  மவுனம் காப்பது ஆதரவின் அடையாளமாகிவிடுகிறது!

உலகம் தன்னை தானே மெல்ல மெல்ல அழித்துக் கொண்டு இருக்கிறது, அழிவு நிச்சயம்!

No comments:

Post a Comment