Wednesday, April 25, 2018

நாடு எங்கே செல்கிறது

நாடு எங்கே செல்கிறது?

ஒவ்வொரு செயலுக்கும் என்ன லாபம் என்பதை கணக்கிட தொடங்கி மெல்ல நகருகிறது, 

உதாரணம்:
நீரை சேமிக்க வழியில்லை, நிலத்தடி நீரை பாதுகாக்க வழியில்லை, கடல் ஏரி, குளம் நீர்களை மறு சுழற்சி, சுத்தகரிப்பு  செய்ய நல்ல திட்டமில்லை, தொலை நோக்கு பார்வையில்லை, நல்ல திட்டங்கள் இல்லை, இவையனைத்தும் செய்யாமல் இருக்க என்ன வழி? எதன் மூலம் பணம் வரும்.

ஒரு  திட்டங்களின் அறிவிப்பின் மூலம் எவ்வளவு வரும், தொடங்கும் போது எவ்வளவு வரும், முடியும் போது எவ்வளவு வரும் என முன்பே திட்டமிடத் தெரிந்தவர்கள் இப்போழுது இந்த நாட்டை வழிநடத்திக் கொண்டு இருக்கிறார்கள்.

ஒரு திட்டத்தை எதிர்பதின் முலம் எவ்வளவு லாபம் கிடைக்கும் என ஒரு கூட்டம், பெயருக்கு எதிர்த்து பதுங்கும் கூட்டம், பாய ஒரு கூட்டம், ஆக எந்த வித பிரதிபலன் பாராமல் உண்மையாய் மக்களுக்காக குரல் கொடுத்து போராடுபவர்களுக்கு இறுதியில்  கிடைப்பது அடி,கைது, சிறைதண்டனை, இழப்பு, ஏமாற்றம், இது தான் இன்றைய அரசியல்.

நாடு பணம், சுயலாபத்தை நோக்கி வேகமாக  செல்கிறது!

No comments:

Post a Comment