Wednesday, April 25, 2018

வாசகர் கேட்ட கேள்வி

ஒரு வாசகர் கேட்ட கேள்வி :

கோவை மக்கள் நல்லுறவு நலசங்கம்  எப்படி உருவானது?

அன்றாடம் காணும் மக்கள் பிரச்சனைகள், பதவி வாங்கி வேலை செய்யாமல் இருப்பவர்கள், மக்கள் குறைகளை தெரிவிக்க, நிவர்த்தி செய்ய சிறந்த வழி சங்கம், தனி மனிதன் குரல் கேட்காது, தனி மரம் தோப்பாகது, அதற்க்காக இருக்கும் சில நண்பர்கள், நல்ல உள்ளங்களை இணைத்து உருவானது கோவை மக்கள் நல்லுறவு நலசங்கம், இதில் சந்தா இல்லை, குறிப்பாக ஜாதி, மதம், கட்சி, பார்பதில்லை," ஒன்று பட்டால் உண்டு தீர்வு" .

இந்த சங்கத்தின் மூலம் பல நல்ல விசயங்களை, செய்கிறோம் ,மக்கள் குறைகளை சம்மந்தப்பட்ட துறைகளுக்கு கடிதம் மூலம் தெரியப்படுத்தி முடிந்தவரையில் அவர்களுடன் இணைந்து செய்து தருகிறோம்,மருத்துவ முகாம், விழிப்புணர்வு நோய் தடுப்பு செய்திகள், சாலை வசதி, குப்பைகளை அகற்ற நடவடிக்கை, மாநகராட்சி பிரச்சனைகள், தீர்க்க நடவடிக்கை எடுக்கப்படுகிறது,  இப்படிபட்ட  மக்கள் பணிகளுக்கு எங்களுக்கு,ஆதரவு,  ஒத்துழைப்பு கொடுத்த அனைத்து அரசு துறைகளுக்கும் நன்றி. 

உங்களை பற்றி :

நான் ஒரு சாதாரண குடும்பத்தில் பிறந்தவன், அனைத்து கஷ்டத்தையும் உணர்ந்தவன், என் தந்தை தான் எனக்கு வழிகாட்டி, அடுத்தவர்களுக்கு உதவுவது,  பணத்தின் மீது ஆசைப்படாதே, அன்பு செலுத்துதல், தான தர்மம் செய்வது, உழைப்பு நேர்மை  போன்ற விசயங்களை எனக்கு உணர்த்தியவர், அவர் தான் எனக்கு ரோல்மாடல், என் ஹீரோ, அவருக்கு மகனாக படைத்த ஆண்டவனுக்கு நன்றி, மேலும்  நல்ல நண்பர்கள் அமைந்தது எனக்கு கிடைத்த வரம்! 

நீங்கள் எப்படி இந்த பத்திரிக்கை துறைக்கு வந்தீர்கள்?

நான் தினமும் தினத்தந்தி, தினமலர் போன்ற நாளேடுகளை  வாசித்து  வந்தேன்.

நம் கண் முன்னே நடக்கும் சம்பவங்கள், மக்கள் பிரச்சனைகளை எடுத்து கூற சிறந்த வழி பத்திரிகை தான் என நம்பினேன்! அதனால்  என் கண் முன்னே நடைபெறும் சம்பவங்கள் பிரச்சனைகளை பத்திரிகை அலுவலகங்களுக்கு அவ்வோப்போது அனுப்பி வந்தேன்! அனுப்பிய பிறகு ஒரு மனத்திருப்தி இருந்தது, ஆனால் ஒருநாளும் நாளேடுகளில் வந்ததில்லை! 

ஒரு நாள் பத்திரிக்கையில் ஒரு விளம்பரம் நீங்களும் ரிப்போர்டர் ஆகலாம்! என்ற தலைப்பு, அழைப்பு,  நேர்காணல் தேதியும் இருந்தது, விண்ணப்பித்தேன், அழைப்பு வந்தது, நேரில் சென்றேன், இருபதைந்து பேர் இருந்தார்கள், அதில் இருபது பேர் கல்லுரியை முடித்த இளைஞர்கள், ஒரே அறையில் உட்கார வைத்து நான்கு கேள்வி கேட்டார்கள் நான்கு கேள்விகளுக்கும் பதிலளித்தேன், பாராட்டினார்கள், அப்புறம் தனி அறையில் சுய சரிதையை கேட்டார்கள், கட்சியில் இருக்கீர்களா? சுய தொழில் செய்து கொண்டு நேரம் கிடைக்குமா? வாகனம் வைத்துள்ளீர்களா? போன்ற கேள்விக்கு பிறகு என் பெயரின் அர்த்தத்தையும் முழு உச்சரிப்பையும் கேட்டு, சரி உங்களுக்கு கடிதம் வரும் அப்புறம் வந்து பாருங்கள் என அனுப்பி விட்டனர்.

அந்த கடிதம் ஆறுமாதம் வரை வரவில்லை, ஏன் என நண்பர்களிடம் விசாரித்த பொழுது ஒருவர் சொன்னார் நீங்கள் என்ன தான் சிறப்பாக செய்தாலும், ஜாதி, மதமும் சிறப்பு தகுதியாக வேண்டும், அதை அங்கு அதிகமாக எதிர்பார்பார்கள் என்றார், ஒரு வேளை அதுவும் காரணமாய் இருக்குமோ? என்ற சந்தேகம் வந்தது.

மூன்று வருடம் கழித்து கோவை மக்கள் நல்லுறவு நலசங்கம் ஆரம்பித்த பிறகு நாம் செய்யும் செயல்கள், மக்கள் பிரச்சனைகள் யாருக்கும் தெரிவதில்லை, மக்களிடம் சென்றடைய சிறந்த வழி செய்தி தாள், அதை தொடங்க முடிவு செய்யப்பட்டது, அதன்படி  நண்பன் வீர மோகன் துணையோடு இந்த மக்கள் நல்லுறவு மாதப் பத்திரிகை தொடங்கப்பட்டது.

இது இன்று வரை இலவச பிரதி இரண்டாயிரம், முன்றாயிரம் பிரதி நம்மை சுற்றியுள்ள வார்டுகளில் நேரிடையாக வீடு வீடாக நண்பர்கள் மூலமாக கொண்டு சேர்கிறோம்.

இதில் பணத்துக்காக விளம்பரம் இல்லை, அதிக அரசியல் இல்லை, விழீப்புணர்வு, மருத்துவம், சட்டம், கதை, நற்பண்பு, நல்லுறவு, நல்லவிசயம் மட்டும் இருக்கும், ஜாதி மத மோதல் விசயங்கள் இருக்காது,  நல்ல விசயங்கள் யார் தந்தாலும் எங்களது பத்திரிக்கையில் வரும், குறிப்பாக கோவை மக்கள் நல்லுறவு நலசங்கம் செய்த மக்கள் பணி, களப்பணி  வரும், எங்களது பத்திரிக்கை பெண்கள் அதிகம் விரும்புகிறார்கள், ஒரு சிலர் கோப்புகளாக வைத்துள்ளார்கள், ஒரு சிலர்  தொலைபேசியில் அழைத்தும், நேரிலும் பாராட்டு தெரிவிக்கின்றனர், அதன் மகிழ்ச்சி வார்தைகளில் அடங்காது, உணர்ச்சியாக உணரும் போது  தெரிகிறது!

அனைத்து நல்உள்ளங்களுக்கும் மக்கள் நல்லுறவு குழு சார்பாக நன்றி! 

என்றும் அன்புடன்
இ.சுக்குருல்லா பாபு,
மக்கள் நல்லுறவு

No comments:

Post a Comment