Wednesday, April 25, 2018

நாடு வளம் பெற

நாடு வளம் பெற வேண்டும் என்றால் 
நல்ல அரசன் நாட்டுக்கு அமையவேண்டும்!

அரசன் எப்படி இருக்க வேண்டும்?

அரசன் என்பவனுக்கு நல்ல புத்தி திறமை, பொறுமை,கொண்டவனாகவும்,

எதிரிக்குஅடிபணிந்து செல்லாத வீரம், நிர்வாகத் திறமை, மக்களிடம், அன்பு, கருணை, நீதி, நியாயம், நேர்மை,கொண்டவராக,  பாதுகாவலனாக   இருக்க வேண்டும், குறிப்பாக  மக்களால் தேர்தெடுக்கப்பட்டவனாக இருக்க வேண்டும்,

அப்படி நாட்டுக்கு ஒரு அரசன் அமைந்தால், நாடு செழிக்கும், மழை பொழியும், மண் வளமாகும், செல்வ செழிப்புடன், குழப்பம் இல்லாமால், சண்டை சச்சரவு இல்லாமல் நாட்டு மக்களும் நலமுடன், வளமுடன் இருப்பார்கள், இது தான் வரலாறு!  

சரி இன்றைய அரசர்கள் எப்படி? மந்திரிகள் எப்படி?


நீதி

என்று இந்த நாடு ஜாதி, மதத்திற்க்கு  முக்கியத்துவம் அளிக்காதோ அன்று நாடு வளர்ச்சி அடைய ஆரம்பிக்கும்!

கல்விக்கு ஜாதி, வாய்ப்புக்கு ஜாதி, வாக்குக்கு ஜாதி, வாழ்க்கைக்கு ஜாதி, அப்புறம் கிடைக்குமா நீதி!

No comments:

Post a Comment