Sunday, July 17, 2016

மின் கட்டண தள்ளுபடி கண் துடைப்பா?

மக்கள் நல்லுறவு

வணக்கம்!

100 யுனிட் மின்சாரம் இலவசம் என்பது ஏமாத்து வேலை:

மாதக் கணக்கீடு ஏன் ஏடுப்பதில்லை?
இதை யாரும் தட்டி கேட்பாதில்லை.

முதலில் அவரவர் மின் அட்டையை சரிபாருங்கள், குழப்பம் தான் வரும்,

முதல்ல கணக்க கேட்டா சரியா சொல்வதில்லை, மின்சார ஊழியர்களுக்கே குழப்பம்,கோபம்,   'சில பேர் முழிக்கிறார்கள், பதில் தெரியாமல் மொபைல், கம்பியுட்டர் பார்த்துக்கொண்டு இருக்கிறார்கள்,

அல்லது Chartல் உள்ளது பாருங்கள் என சொல்லி நகர்ந்து விடுகிறார்கள், Chartல் பார்த்தால் அதிர்ச்சி பழைய 2014 Tariff

மக்கள் ரொம்ப பேசினா, கேள்வி கேட்டா, அதை மனதில் வைத்து பீஸ் போன கூப்பிட்ட உடனே  வரமாட்டான் என்கிற பயம், வீட்டுக்கு வந்து சோதனை என்ற பெயரில்  தேவையில்லாத குற்றம் குறை  சொல்லுவாங்க "Fine போடுவாங்க, எதுக்கு "தேவையில்லாத பிரச்சனை,

அரசை தனியாளக எதிர்த்து கேட்க முடியாதுலஞ்சம் வேறு, (லைன் வேண்டுமென்றாலும் வேண்டாம் என்றாலும்)  எதுங்கு வம்பு நினைத்து மக்கள் ஒதுங்கி போகிறார்கள் இது தான் உண்மை,

பாதிப்பு தனக்கு வரும் வரை இதை உணரமாட்டார்கள், அடுத்தவர் பிரச்சனைகளில் தலையிடமாட்டார்கள்.

ஒன்று பட்டு கேள்வி கேட்கும் தைரியம் இல்லாத புத்திசாலிகள் தான்  நம் தமிழ்நாட்டு மக்கள்.

ஆசைப் பட்ட எல்லாத்தையும் காசு இருந்தால் வாங்கலாம் அம்மாவை வாங்கமுடியுமா?
முடியும். அம்மாவால் இலவசமாக தாய்பால் வழங்கப்படும் என்று சொன்னால் கூட நம்பி வாக்களிக்கும் உலகம், ஆக மொத்தம் ஏமாந்த தமிழக மக்கள்!

மக்கள் நல்லுறவு

No comments:

Post a Comment