Monday, July 18, 2016

மது வருமானம்


மக்கள் நல்லுறவு

தெரிந்தே தப்பு செய்கின்றவர்களுக்கு மன்னிப்பு கிடையாது, இதற்க்கு  தண்டனை நிச்சயம் உண்டு (கண்ணேதிரே).

ஒரு சில உதாரணம் :

நோய் வரும் என்று தெரிந்து மதுவை  தொடர்ந்தது  குடித்து கொண்டு இருப்பவர்கள், நோய் வரும் என்று அறிந்து விலைமாது விடம் செல்பவர்களுக்கும் மன்னிப்பு கிடையாது.

நோய்க்கு
மருந்து உள்ளது என நினைத்து தொடர்ந்து தவறு செய்தால் அந்த மருந்தே உன்னை உலகிற்க்கு எடுத்து காட்டி கேவலப்படுத்தும்.

துன்பம் வரும் என தெரிந்து எச்சரிக்கையாய் இல்லாமல் சுய இன்பத்தை தேடி தன்னை நம்பினவர்களையும்நம்பி உள்ளவர்களையும், தமது குடும்பத்தையும் ஏமாற்றுகிறார்கள்.

இது மதுவையும், விலை மாதுவையும் ஆதரிக்கும் அரசுகளுக்கும் பொருந்தும்.

மக்கள் பணத்தில்
மதுவை தொடங்கி மெல்ல மெல்ல மனிதனின் ஆசையை தூண்டி, அடிமையாக்கிநோய்களை பரப்பி அழிவை உண்டாக்கி குடும்பங்களை நடுத்தெருவில் கொண்டு நிறுத்தும் செயல், உண்மையில்  நம்பிக்கை துரோகம்இந்த செயலை செய்யும் அரசு, தலைவன், தலைவிநிம்மதி இல்லாமல் நோய்களை தான் பெறுவார்கள், நிம்மதியின்றி தவிப்பார்கள்,
விற்று சம்பாதிப்பவனுக்கும் அதே நிலமைதான்.

தீயதினால் வரும் வருமானத்தால் நாடு வளர்ச்சி அடையாமல்,   நாட்டை கடனுக்கு கொண்டு சென்று தவிக்கவைப்பார்கள், உண்மை  வரலாறு இது  நமக்கு உணர்த்துகிறது (கண்ணேதிரே).

எனவே சிந்தித்து பாருங்கள்

நமது மறைமுக அழிவிற்க்கு
யார் காரணம்? யார் பொறுப்பு? யாருக்கு இழப்பு? தேவையா இந்த பொழப்பு?

தீய பழக்க வழக்கங்களை விட்டு விடுங்கள் நீங்களாகவே மெல்ல மெல்ல இது போன்ற தீய பழக்கங்களில் இருந்து  மீண்டுவாருங்கள்!

குடும்பத்துடன் மகிழ்ச்சியாக வாழுங்கள்!

வாழ்க வளமுடன்!

அன்புடன் மக்கள்நல்லுறவு!

No comments:

Post a Comment