Sunday, July 24, 2016

ஓட்டு நோட்டு

மக்கள் நல்லுறவு

தேவை விழிப்புணர்வு.

கண்ணா! சினிமாவில் நடப்பது போல ஒரே ஒரு பாட்டில் பணக்காரன் ஆகிவிடமுடியாது.

அதே போல ஓட்டுக்கு தரும் ஒரு நோட்டில் நீ பணக்காரனாக முடியாது.

உண்மையில் உனக்கு கொடுத்தவன் ஆடும் சூதாட்டம், உனது ஓட்டு ஒன்று அவனை பணக்காரன் ஆக்கும், அல்லது கடன்காரனாக்கும்.

நோட்டு கொடுக்கவருபவனிடம் வாங்க மறுத்துப்பார், வற்புறுத்தினால்  கொடுக்க வருபவனிடம் வாங்கிக் கொள்கிறேன் ஆனால் என் விருப்பப்படி, மனசாட்சிப் படிதான் நான் வாக்களிப்பேன் இதற்க்கு சம்மதமா! என கேட்டுப்பாருங்கள்.

உங்கள் மனசாட்சி,  நேர்மையை, விரலில் வைக்கும் மை க்கு 200, 500க்கு அடமானம் வைக்காதீர்கள்,நீங்கள் அடிமைகள் ஆகிவிடாதீர்கள்.

உண்மையில் நேர்மையினால் வந்த பணம் என்றும்  நிலைக்கும், தவறான வழியில் வரும் பணம் வீண் விரயம், மருத்துவசெலவில் தான் முடியும்.

உள்ளாட்ச்சி தேர்தல் வருகிறது ஆளும் கட்சியினர் ஆட்சியை பிடிக்க கோடிக்கணக்கில் பணத்தை முதலிடு செய்யும்.

நோட்டை நம்பி நீங்கள் ஏமாறவேண்டாம், ஏமாற்றவேண்டாம்.

போட்டியிடும் வேட்பாளர்களில்  நல்ல மனிதர்களை, நேர்மையானவர்களை, சேவை உள்ளம் கொண்டவர்களை தேர்தெடுத்து வாக்களிக்கவும்,
உங்கள் பகுதியைப் பற்றி அறிந்த மனிதராக, தேர்ந்தெடுங்கள்.

கட்சி, ஜாதி,  மதம், பணம், போட்டி, பொறாமை, பார்க்கவேண்டாம், ஐந்து வருட எதிர்காலத்தையும், மக்களின் நன்மையை கருத்தில் கொண்டு வாக்களிக்கவும்.

இந்த நாடும் நாட்டு மக்களூம், நகராட்சி, மாநகராட்சி மக்களும் நலம் பெற்று வாழ்க வளமுடன்.

மக்கள் நல்லுறவு.

No comments:

Post a Comment