கோவை மக்கள் நல்லுறவு
தேவை விழிப்புணர்வு
நம்மிடம் வாக்குறுதி கொடுத்து வாக்கு கேட்டு வாங்கி நாட்டை ஆண்டு கொண்டு இருப்பவர்களை கேள்வி கேட்க மறந்தோம்.
நமக்கும் நம் பகுதிக்கும் நல்லதை செய்வார் என எண்ணி நாம் யாரை ஓட்டு போட்டு தேர்ந்தேடுத்தோமோ அவர் திரும்ப செய்யாமல் சுகபோகத்தை அனுபவித்துக்கொண்டு வெளியே வரமால் வீட்டில் தூங்கிக்கொண்டு இருந்தாலும் நாம் கண்டுகொள்வதில்லை.
நாம் இவர் வெற்றி பெறுவார் நம்பி வாக்களித்த ஆளும் கட்சி அரசியல்வாதி மற்றும் எதிர்கட்சி அரசியல்வாதி இருவருமே இதை செய்வதால் மக்கள் உண்மையில் ஏமாற்றப்படுகிறார்கள்.
தேர்தலில் தோற்றவர்கள் தோற்றதை காரணமாக கூறி சென்றுவிடுகின்றனர்.
இவர்கள் மக்களுக்காக ஆளும் கட்சியில் முறையிட்டு, போராடி ஏன் மக்களீன் கோரிக்கையை நிறைவேற்றித் தருவதில்லை,?
தேர்தலுக்குப் பிறகு மக்களின் தொடர்பில் இருப்பதில்லை?
அந்த எண்ணம் வருவதில்லை?
பதவி இருந்தால் தான் மக்களுக்காக செயல்படுவார்களா?
பணம் வருமானம் இருந்தால் தான் செய்வார்களா?
தோல்வி என சொல்லி அடுத்த தேர்தல் வரூம் வரை அமைதியாக இருந்து விட்டு தேர்தலின் போது மிண்டும் மக்களை சந்திக்க வருவது சரியா?
மக்களே கொஞ்சம் சிந்தியுங்கள்!
நாம் நம்பி வாக்களித்தவரிடம் கேள்வி கேட்காதாதல் தான் முதலில் நாடு வளர்ச்சியடைவதில்லை, அரசியல்வாதிகள் மட்டும் ஒவ்வொரு முறையும் வளர்ச்சியடைகிறார்கள்,நமது உரிமையை உரியவனிடம் கேட்காமல் சும்மா இருப்பது நமக்கு பழக்கமாகிவிட்டது.
நமக்கு கொடுக்கவேண்டியவர்கள், நமக்கு செய்துதர கடமைப்பட்டவர்களை நாம் கண்டுகொள்வதில்லை, கேள்வி கேட்பதில்லை சும்மா இருக்கிறோம்.
தவறுகளை, தேவைகளை தட்டிக்கேட்காத மக்கள், தனது தொழில் காசுக்காக உழைத்து நடிக்கும் நடிகனிடம் நீ மக்களுக்கு அதை செய்யவில்லை, இதை கொடுக்கவில்லை என்ற குறைகூறுவது மட்டும் சரியா?
ரசிகன் என்ற உரிமையைத் தவிர வேறு எந்த உரிமையும் நமக்கு கிடையாது, உனக்கு பிடித்தால் படத்தை பாரு, இல்லை சும்மா இரு, இன்று காற்று உள்ள போது துற்றிக்கொள் என்ற பழமொழியின் பேரில் தான் வியாபாரம் நடக்கிறது, மார்கெட் இருக்கும் வரை சம்பாதித்து கொள்வது அதாவது பொங்கல் வந்தால் கரும்பு, வாழை விலை ஏறுவதும், ஆயூதபூஜை வந்தால் பழம் பொறி, பூ, சுண்டல் விலை ஏறுவதையும், மூகூர்த்தநாள் வந்தால் பூ விலை ஏறுவதை ஏற்றுக்கொண்டமக்கள் நாம், அதுபோல நடிகனின் படத்திற்க்கும் விலையேற்றம் வந்தால் ஏற்றுக்கொள் " விருப்பம் இருந்தால் படத்தைப்பார், கட்டாயமில்லை.
தக்காளி, வெங்காயம் விலைபோல இந்த விலையேற்றம் இது வியாபார உலகம், எனவே நடிகர்களுக்கு மனமிருந்தால் மக்களுக்கு நல்லதை திரும்பச்செய்வார்கள், அது கட்டாயமில்லை, தனி மனித சம்பாத்தியத்தில் தலையிட income taxக்கு மட்டும் தான் உரிமை, அடுத்தவன் சம்பாதித்ததில் நீ மக்களுக்கு, உனக்கும் உரிமை கோராதே!
எனவே நீ உழைத்து சாம்பாதி, நாலு பேருக்கு கொடுத்து பார், முதலில் கொடுத்து பழகு, நம்பி வாக்களித்தவர்களிடம் குறைகளை கேளுங்கள் அல்லது ஒன்றுகூடி கேளுங்கள்,
ஓன்றுபட்டால் தீர்வு
நாடு வளம் பெற இதுவும் ஒரு வழி
சிந்தித்துப் பார்
மக்கள் நல்லுறவு
No comments:
Post a Comment