மக்கள் நல்லுறவு பகிர்கிறது
வாழ்க்கை
வாழ்வதற்க்கே :
( மகிழ்ச்சி +
ஒழுக்கம் = வாழ்க்கை )
[ஒரு கிராமத்தில்
வசித்து வந்த ஒரு மனிதன் திடீரென இறந்து
போனான்., அவன் அதை உணரும்
போது, கையில் ஒரு
பெட்டியுடன்கடவுள் அவன்
அருகில் வந்தார்..]
கடவுள் : "வா மகனே.... நாம்
கிளம்புவதற்கான நேரம் வந்து விட்டது.."
மனிதன் : "இப்பவேவா? இவ்வளவு
சீக்கிரமாகவா? என்னுடைய
திட்டங்கள் என்ன ஆவது?"
கடவுள் : "மன்னித்துவிடு மகனே.... உன்னைக் கொண்டு செல்வதற்கான நேரம் இது.."
மனிதன் : "அந்தப் பெட்டியில் என்ன உள்ளது?"
கடவுள் : "உன்னுடைய உடைமைகள்....."
மனிதன்: "என்னுடைய உடைமைகளா!!! என்னுடைய பொருட்கள், உடைகள், பணம்,....எல்லாமே இதில் தான் இருக்கின்றனவா?"
கடவுள் : "நீ கூறியவை அனைத்தும் உன்னுடையது அல்ல.. அவைகள் பூமியில் நீ
வாழ்வதற்கு தேவையானது.."
மனிதன் : அப்படியானால், "என்னுடைய
நினைவுகளா?"
கடவுள் : "அவை காலத்தின் கோலம்...."
மனிதன் :"என்னுடைய திறமைகளா?"
கடவுள் : "அவை உன் சூழ்நிலைகளுடன் சம்பந்தப்பட்டது...."
மனிதன் : "அப்படியென்றால் என்னுடைய குடும்பமும்
நண்பர்களுமா?"
கடவுள் : "மன்னிக்கவும்....... குடும்பமும் நண்பர்களும் நீ வாழ்வதற்கான
வழிகள்...."
மனிதன் : "அப்படி என்றால் என் மனைவி மற்றும் மக்களா?"
கடவுள் : "உன் மனைவியும் மக்களும் உனக்கு சொந்தமானவர்கள்
அல்ல,
அவர்கள் உன்
இதயத்துடன் சம்பந்தப்பட்டவர்கள்...."
மனிதன் : "என் உடலா?"
கடவுள் : "அதுவும் உனக்கு சொந்தமானதல்ல.... உடலும் குப்பையும் ஒன்று...."
மனிதன் : "என் ஆன்மா?"
கடவுள் : "அதுவும் உன்னுடையது அல்ல..., அது என்னுடையது......."
மிகுந்த
பயத்துடன் கடவுளிடமிருந்து அந்தப் பெட்டியை வாங்கி திறந்தவன், காலி பெட்டியைக் கண்டு அதிர்ச்சியடைகிறான்..
கண்ணில் நீர்
வழிய கடவுளிடம், "என்னுடையது என்று எதுவும் இல்லையா?"
எனக் கேட்க,
கடவுள்
சொல்கிறார்: "அதுதான் உண்மை.. நீ
வாழும் ஒவ்வொரு நொடி மட்டுமே உன்னுடையது..
வாழ்க்கை என்பது நீ
கடக்கும் ஒரு நொடிதான்..
ஒவ்வொரு
நொடியையும் சந்தோஷமாக வாழ்வதுடன் நல்ல செயல்களை மட்டும் செய்..
எல்லாமே
உன்னுடையது என்று நினைக்காதே........"
-- ஒவ்வொரு நொடியும் வாழ்
-- உன்னுடைய வாழ்க்கையை வாழ்
-- மகிழ்ச்சியாக வாழ்
அது மட்டுமே
நிரந்தரம்..
-- உன் இறுதிக் காலத்தில் நீ எதையும் உன்னுடன் கொண்டு போக முடியாது
வாழுகின்ற ஒவ்வொரு நொடியையும் சந்தோஷமாக வாழ்வோம்., அதே நேரம் ஒழுக்கத்துடன்
வாழ்வோம்..
மக்கள் நல்லுறவு
No comments:
Post a Comment