Saturday, July 2, 2016

எதுவும் இல்லை

மக்கள் நல்லுறவு பகிர்கிறது
வாழ்க்கை வாழ்வதற்க்கே :
( மகிழ்ச்சி + ஒழுக்கம் = வாழ்க்கை )

[ஒரு கிராமத்தில் வசித்து வந்த ஒரு மனிதன் திடீரென இறந்து போனான்.,  அவன் அதை உணரும் போதுகையில் ஒரு பெட்டியுடன்கடவுள் அவன் அருகில் வந்தார்..]

கடவுள் : "வா மகனே....  நாம் கிளம்புவதற்கான நேரம் வந்து விட்டது.."

மனிதன் : "இப்பவேவா?  இவ்வளவு சீக்கிரமாகவா? என்னுடைய திட்டங்கள் என்ன ஆவது?"

கடவுள் : "மன்னித்துவிடு மகனே.... உன்னைக் கொண்டு செல்வதற்கான நேரம் இது.."

மனிதன் : "அந்தப் பெட்டியில் என்ன உள்ளது?"

கடவுள் : "உன்னுடைய உடைமைகள்....."

மனிதன்: "என்னுடைய உடைமைகளா!!! என்னுடைய பொருட்கள்உடைகள், பணம்,....எல்லாமே இதில் தான் இருக்கின்றனவா?"

கடவுள் : "நீ கூறியவை அனைத்தும் உன்னுடையது அல்ல.. அவைகள் பூமியில் நீ வாழ்வதற்கு தேவையானது.."

மனிதன் : அப்படியானால்,  "என்னுடைய நினைவுகளா?"

கடவுள் : "அவை காலத்தின் கோலம்...."

மனிதன் :"என்னுடைய திறமைகளா?"

கடவுள் : "அவை உன் சூழ்நிலைகளுடன் சம்பந்தப்பட்டது...."

மனிதன் : "அப்படியென்றால் என்னுடைய குடும்பமும் நண்பர்களுமா?"

கடவுள் : "மன்னிக்கவும்....... குடும்பமும் நண்பர்களும்  நீ வாழ்வதற்கான வழிகள்...."

மனிதன் : "அப்படி என்றால் என் மனைவி மற்றும் மக்களா?"

கடவுள் : "உன் மனைவியும் மக்களும் உனக்கு சொந்தமானவர்கள் அல்ல,
அவர்கள் உன் இதயத்துடன் சம்பந்தப்பட்டவர்கள்...."

மனிதன் : "என் உடலா?"

கடவுள் : "அதுவும் உனக்கு  சொந்தமானதல்ல.... உடலும் குப்பையும் ஒன்று...."

மனிதன் : "என் ஆன்மா?"

கடவுள் : "அதுவும் உன்னுடையது அல்ல..., அது என்னுடையது......."

மிகுந்த பயத்துடன் கடவுளிடமிருந்து அந்தப் பெட்டியை வாங்கி திறந்தவன், காலி பெட்டியைக் கண்டு அதிர்ச்சியடைகிறான்..

கண்ணில் நீர் வழிய கடவுளிடம், "என்னுடையது என்று எதுவும் இல்லையா?"  எனக் கேட்க,

கடவுள் சொல்கிறார்: "அதுதான் உண்மை.. நீ வாழும் ஒவ்வொரு நொடி மட்டுமே உன்னுடையது..

வாழ்க்கை என்பது நீ கடக்கும் ஒரு நொடிதான்..

ஒவ்வொரு நொடியையும் சந்தோஷமாக வாழ்வதுடன் நல்ல செயல்களை மட்டும் செய்..

எல்லாமே உன்னுடையது என்று நினைக்காதே........"

-- ஒவ்வொரு நொடியும் வாழ்

-- உன்னுடைய வாழ்க்கையை வாழ்

-- மகிழ்ச்சியாக வாழ்

அது மட்டுமே நிரந்தரம்..

-- உன் இறுதிக் காலத்தில் நீ எதையும் உன்னுடன் கொண்டு போக முடியாது


வாழுகின்ற ஒவ்வொரு நொடியையும் சந்தோஷமாக வாழ்வோம்., அதே நேரம் ஒழுக்கத்துடன் வாழ்வோம்..

மக்கள் நல்லுறவு

No comments:

Post a Comment