சட்டமன்ற சட்டசபைக் கூட்டத்தொடர் அனுபவம்
மக்கள் நல்லுறவு பகிர்கிறது.
அசெம்ளிக் கூட்டம் சென்னை தலைமை செயலகம்
வளாகத்தில்
நடைபெற்று வருகிறது. இதனை பொதுமக்கள் பார்வையிடமுதலில் நுழைவு வரிசை அதில் அடையாள அட்டை பரிசோதனை, முகவரி விலாசம், போன் எண், கையெப்பம் பெற்று உள்ளே செல்லும் காரணத்தை கூறி
நூழைவுவாயிலில் நுழைய அனுமதிக்கப்படுகிறது.
அதன் பிறகு உள்ளே ஆட்கள் தனித் தனி சோதனை செய்த பிறகு மீண்டும் அடையாள அட்டை காண்பித்து
சம்மந்தப்பட்ட இலாகவுக்கு செல்ல அனுமதி சீட்டு தரப்படுகிறது.
நமக்கு தெரிந்த அமைச்சர், சட்டமன்ற உறுப்பினர், அல்லது அதிகரிகள் முலம் சட்டசபை கூட்டத்தொடரை
காணச்செல்ல ஒரு பாஸ் (அனுமதிசீட்டு)
வழங்க கேட்டுக்கொண்ட பிறகு அரைமணி
நேரத்திற்க்குப் பின் அரைமணி
நேரம் மட்டும் பார்க்க அனுமதி தருகிறார்கள்.
இதற்க்கு சில நிபந்தனைகள்:
பணம் தவிர பாக்கெட்டில் எதுவும் இருக்கக்கூடாது,
(மொபைல், பெல்ட், காசு (நாணயம்) கர்சீப், விசிட்டீங் கார்டு, இதர அட்டைகள் பேனா பென்சில் கொண்டு செல்லத்தடை
இத்தனை கெடுபிடி பொருட்கள் கொண்டு வந்ததை வைக்க அலைமோதும் மக்கள்.
இதற்க்கு முன்று கட்ட சோதனைகள், இறுதியில் அனுமதி சீட்டை பெற்றுக்கொண்டு
அரைமணி நேரம் அனுமதி தரப்படுகிறது மீன்டும் பல நிபந்தனைகளுடன், கை மற்றும் விரல் நீட்டக்கூடாது, பேசக்கூடாது, இருமக்கூடாது, சிரிக்ககூடாது, நிக்கக்கூடாது இதனை கவனிக்க பத்து பேர்கள்.
அடுத்து
சட்டசபை கூட்டத்தில் ஆளும் கட்சி பேச அதிகம்
வாய்ப்பு வழங்கப்படுகிறது, பெஞ்ச் தட்ட சட்டசபை அதிர்கிறது, எதிர் கட்சிக்கு வாய்ப்பு குறைவு, எதிர்கட்சி கோபம் எரிச்சல் அடையும்மாறு பேசி
கூச்சல் நிலவுகிறது.
இறுதியில் சட்டசபையிலிருந்து எதிர்கட்சி
வெளிநடப்பு, இது ஒட்டு போட்ட
மக்கள் நலனுக்கா? என்பது மக்கள்
தான் முடிவு செய்யவேண்டும்.
இதனை வேடிக்கை பார்க்க பொதுமக்கள் (வலைக்கு பின் நின்று பார்க்க) இத்தனை கெடுபிடிதேவையா? பாதுகாப்புத்
தேவையா? இந்த பாதுகாப்பிற்க்கு பல அதிகாரிகள், அரசு ஊழியர்கள் பணியாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.
உண்மையில் ஓட்டு போட்டு தேர்ந்தெடுத்த மக்கள் மிது உள்ள
பயத்தைக் தான் காட்டுகிறது.
சட்டமன்ற உறுப்பினர்கள் தேர்தலுக்கு பின் ஆளும்
கட்சி "எதிர்கட்சி இரண்டு
உறுப்பினர்களும் தொடர்ந்து தொகுதியில் மக்கள் தொடர்பில் இருந்தால் பிரச்சனைகள் அவ்வோப்போது குறையும்,
மக்களும் சட்டமன்ற உறுப்பினர்களை காண கூட்டம் போடமாட்டார்கள்.
அரசியல் சட்டமன்ற உறுப்பினர்கள், மக்களே!
கேரளாவை கொஞ்சம் பாருங்கள்.
அங்கு பெரும்பாலும் சட்ட மன்ற உறுப்பினர்கள்
அமைச்சர்கள் இருப்பது எளிமை, அனுகுமுறை எளிமை, மக்களோடு மக்களாக கலந்து வாழ்கின்றனர்.
இது எங்களது
பார்வையில்
இது ஒரு அனுபவம் :
அன்புடன் மக்கள் நல்லுறவு
No comments:
Post a Comment