மக்கள் நல்லுறவு
பகிர்கிறது
நுகர்வோர்
பாதுகாப்பு சட்டம் மற்றும் நுகர்வோர் நீதிமன்றகளில் வழக்கு தொடர தேவையான தகுதிகள்:
நுகர்வோர்
பாதுகாப்பு சட்டம் 1986 ம் ஆண்டு டிசம்பர்
மாதம் 24 ம் தேதியன்று
அமலுக்கு வந்தது.
ஏற்கனவே அமுலில்
உள்ள சட்டத்தின் மூலம் நிவாரணம் பெற வாய்ப்பு இருந்தும் தனியாக ஒரு சட்டம் கொண்டு
வரப்பட்டதின் அடிப்படை நோக்கமே – எளிய முறையில்,
குறுகிய காலத்தில்,
செலவி ல்லாமல் நிவாரணம்
பெற வேண்டும் என்பதே.
சாதாரணமாக,
நுகர்வோர் வழக்குகள்
பதிவு செய்யப்படும் பொழுது அது சிவில் வழக்காக மாறிவிடும். இதனால் வழக்கு, நீதிமன்ற நடை முறைப்படியே நடை பெறுவதால்
காலதாமதம் ஏற்படுவதுடன், பெரும் செலவும்
ஏற்படும்.
பெரும் தொகை
சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் உள்ளவர்கள் ஒரு சிலர் தவிர மற்றவர்கள் நீதி மன்றத்தை
அணுகுவது இல்லை. இச்சட்டத்தின் மூலம் இந்த குறைபாடுகள் அனைத்தும்
நீக்கப்பட்டுள்ளது.
இனி நுகர்வோர்
நீதிமன்றங்கள் பற்றி இங்கு காண்போமா :
நுகர்வோர்
நீதிமன்றங்களின் அமைப்பும், செயல்பாடும்:
நுகர்வோர்
நீதிமன்றங்கள் மாவட்ட அளவில் ”மாவட்ட நுகர்வோர்
குறை தீர் மன்றங்கள்”, மாநில அளவில் “மாநில ஆணையம்", தேசிய அளவில் ”தேசிய ஆணையம்” என்ற அமைப்பில் செயல்பட்டு வருகிறது.
மாவட்ட நுகர்வோர்
குறை தீர் மன்றம்:
20 லட்சம் ரூபாய்
வரை நஷ்ட ஈடு கோரும் வழக்குகளை, மாவட்ட நுகர்வோர்
குறைதீர் மன்றத்தில் தான் பதிவு செய்ய வேண்டும். நீதிமன்ற கட்டணம் எதுவும்
செலுத்தவேண்டியது கிடையாது. இதனால் வழக்கு தொடருவதற்கு தகுதியே இல்லாத
பிரச்சனைக்கெல்லாம் வழக்கு தொடர ஆரம்பித்தனர். இதில் எதிர் தரப்பினரை பிளாக்
மெயில் செய்பவர்களும் அடங்கும். இது போன்ற வழக்குகளுக்கு அவர்கள் ஆஜராவது
கிடையாது.
இதனால் வழக்கு
தள்ளுபடியாகும் நிலை ஏற்பட்டது. இதனால் தவறே செய்யாத எதிர் தரப்பினர்களுக்கு கால
விரயம் மற்றும் செலவு ஏற்படுவதையும், நீதி மன்றத்தின் நேரம் வீணாவதையும் கருத்தில் கொண்டு 2006 ம் ஆண்டில் கீழ் கண்டவாறு கட்டணம் நிர்ணயம்
செய்யப்பட்டுள்ளது.
1 லட்சம் ரூபாய்
வரை நஷ்ட ஈடு கோரும் வழக்குகளுக்கு = 100 /-
1 லட்சத்திற்கு
மேல் 5 லட்சம் வரை = 200
/-
5 லட்சத்திற்கு
மேல் 10 லட்சம் வரை = 400
/-
10 லட்சத்திற்கு
மேல் 20 லட்சம் வரை = 500
/-
வழக்கு தொடர
தேவையான தகுதிகள்:
1. வழக்கு தொடருபவர் நுகர்வோராக இருக்கவேண்டும். வழக்கு அவர் சம்பந்தப் பட்டதாக
இருக்கவேண்டும்.
2. நுகர்வோர், எந்த நுகர்வோர்
குறை தீர்மன்றத்தின் அதிகார வரம்பிற்கு உட்பட்ட எல்லைக்குள் இருக்கிறாரோ அதில்
தான் வழக்கு தொடரவேண்டும்.
3. புகாருக்கான ஆதாரங்கள் இருக்க வேண்டும்.
4. பிரச்சனை ஏற்பட்டதிலிருந்து 2 வருடங்களுக்குள்
வழக்கு தொடர வேண்டும்.
யார் மீது வழக்கு
தொடர முடியும்?
1. நமக்கு பொருட்களை விற்பனை செய்பவர்கள் அனைவரும். இதில் தனியார், அரசு நிறுவனம் என்ற பாகுபாடு கிடையாது.
அனைவருமே இதில் உட்படுவர்.
உதாரணம்: மளிகை
கடை, டிபார்ட்மெண்டல் ஸ்டோர்,
பேக்கரி, சைக்கிள் விற்பனையாளர், மெடிகல் ஷாப், ரேஷன் கடை போன்றவை.
2. பணம் வாங்கிக்கொண்டு வழங்கப்படும் சேவைகள், தனியார் மற்றும் அரசு துறை நிறுவனங்கள்
அனைத்துமே இதில் அடங்கும்.
உதாரணம் :
மின்சார வாரியம், குடிதண்ணீர்
சப்ளை, இன்ஸூரன்ஸ் கம்பெனி,
வங்கிகள், மருத்துவ மனைகள், கியாஸ் கம்பெனிகள், சப் -ரிஜிஸ்டிரார் அலுவலகம், போன்றவைகள்.
எந்தெந்த துறைகள்
எல்லாம் இதில் அடங்கும் என சட்டத்தில் பட்டியலிடப்படவில்லை. காரணம். சேவை என்ற
வார்த்தைக்கு முழுமையான விளக்கம் கொடுக்க முடியாது. வார்த்தைக்கான விளக்கம்,
வழக்குக்கு வழக்கு
விரிவடையும் என்பதே உண்மை.
உதாரணத்திற்கு
சப்-ரிஜி ஸ்டிரார் ஆபீஸை எடுத்துக்கொள்ளலாம்.
இந்த சட்டம் வந்த
பின்பு, பலர் இந்த
அலுவலகத்தில் அவஸ்தை பட்டு வந்தாலும், இது அரசு அலுவலகம் என நினைத்து விட்டு விட்டனர். பல வருடங்கள் இப்படியே கழிந்தது.
ஒரு சில வருடங்களுக்கு முன்பு ஒருவர் ஒரு சொத்து வாங்க முடிவு செய்து, அதற்கு சம்பந்தப் பட்ட சப்- ரிஜிஸ்டிரார்
அலுவலகத்தில் வில்லங்க சான்றுக்குரிய கட்டணத்தை செலுத்தி விண்ணப்பம் செய்தார்.
எந்த
வில்லங்கமும் இல்லை என சர்டிபிகேட் கொடுத்து விட்டனர். அதை நம்பி, அவர் அந்த சொத்தை வாங்கி விட்டார். அதன் பின்பு
தான் அதில் வில்லங்கம் இருப்பது தெரிய வந்தது.
அதனால் அவருக்கு
நஷ்டம் ஏற்பட்டது. தவறான வில்லங்க சர்டிபிகேட் டிப்பார்ட்மெண்ட் கொடுத்ததினால்
தான் நஷ்டம் என்றும், வில்லங்க
சர்டிபிகேட் வழங்குவது என்பது பணத்தை பெற்றுக்கொண்டு வழங்கப்படும் சேவை என்பதால்,
நுகர்வோர் பாதுகாப்பு
சட்டப்படி குறை பாடான சேவை என்பது அவர் முடிவு. அவர் நுகர்வோர் குறைதீர்
மன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
அரசு தரப்பில்,
நுகர்வோர் பாதுகாப்பு
சட்டப்படி தங்கள் மீது வழக்கு தொடர முடியாது என்றும், சர்டிபிகேட்டில் தவறுகள் இருந்தால் இலாகா
பொறுப்பு அல்ல” என குறிப்பிட்டே
வழங்கட்டுள்ளதால் தாங்கள் பொறுப்பல்ல என வாதம் செய்தனர். ஆனால் அவர்களின் ஆட்சே
பனையை நிராகரித்த நீதிமன்றம் மனுதாரருக்கு நஷ்ட ஈடு வழங்க உத்தரவிட்டது.
இது சட்டம்
பற்றிய விளக்கம் விரிவடையக் கூடியது என்பதற்கு ஒரு உதாரணம்.
வழக்கு தொடர
தேவையான முன் நடவடிக்கைகள்:
உதாரணத்திற்கு
நாம் ஒரு கடைக்குப்போய் ஒரு பொருள் வாங்குகிறோம் என்று வைத்துக் கொள்வோம். அதன்
பாக்கிங்கில் போடப்பட்ட விலைக்கு அதிகமாக பணம் வாங்கினாலோ, எடை மற்றும் அளவு குறைவாக இருந்தாலோ அல்லது
தரம் குறைவாக இருந்தாலோ உடனடியாக அதைப் பற்றி கடைக்காரரிடம் சுட்டிக்காட்டுங்கள்.
அவர் தவறை சரி செய்ய மறுத்தால், அவருக்கு நீங்களே
”குறைபாடுகளை
சுட்டிக்காட்டி அதை சரி செய்யாவிட்டால் நுகர்வோர் வழக்கு தொட ரப்படும்” என அத்தாட்சியுடன் கூடிய பதிவு தபாலில்
நோட்டீஸ் அனுப்புங்கள். அவருக்கு நோட்டீஸ் பட்டு வாடா செய்யப்பட்டுள்ளது
என்பதற்கான ஆதாரத்தை நோட்டீஸ் காப்பியுடன் வைத்துக் கொள்ளுங்கள்.
அதைப் போலவே
பொருள் வாங்கியதற்கான ரசீதும் பத்திரமாக வைத்துக் கொள்ள வேண்டும்.
விலை
சம்பந்தப்பட்ட பிரச்சனை என்றால், விலை
அச்சடிக்கப்பட்ட பாக்கிங் கவரை பத்திரமாக வைத்திருங்கள்.
தரம் சம்பந்த
பிரச்சனை என்றால், அதே பாக்கிங்
கவருடன் பொருளை பாக்கிங் செய்து வைத்துக் கொள்ளுங்கள்.
எடை
சம்பந்தப்பட்ட பிரச்சனை என்றால், நீங்கள்
பாக்கிங்கை பிரிப்பதற்கு முன்பே எடை குறைவு என்பதை ஊர்ஜிதம் செய்து விட்டு பாக்கிங்கை
பிரிக்காமல் இருக்க வேண்டும். ஒரு வேளை பிரித்து விட்ட பின்பு தான் எடை குறைவை
கண்டு பிடித்தீர்கள் என்றால், பிரிக்கப்பட்ட
பாக்கிங்கை ஆதாரமாக வைத்து வழக்கு தொடர முடியாது. எனவே மற்படியும் அதே கடைக்கு
போய், அதே பொருளை, பில் போட்டு வாங்கிக்கொளுங்கள்.
இப்பொழுது சேவை
சம்பந்தப்பட்ட பிரச்சனை என்றால், சேவைக்கான ரசீது
இருக்கவேண்டும்.
முன்பு
குறிப்பிட்ட படியே சம்பந்தப்பட்டவர்களுக்கு நோட்டீஸ் அனுப்புங்கள்.
எல்லா
அத்தாட்சிகளையும் பத்திரமாக வைத்துக்கொள்ளுங்கள்.
தேவையான அனைத்து
ஆவணங்களையும் திரட்டிய பிறகு நுகர்வோர் நீதிமன்றத்தில் வழக்கு தொடருங்கள்.
மக்கள் நல்லுறவு
No comments:
Post a Comment