ஆட்சி மாற்றம், மக்கள் மனமாற்றம்,
எதனால்
தேர்தல் வந்தால், அண்ணா, காமராஜர், பெரியார், M G R வந்து விடுகிறார்கள்.
ஐந்து வருடத்திற்க்கு முன் அருமையான வாய்ப்பை கொடுத்தோம் அதற்க்கு பிறகும் (பாராளுமன்றம்) சந்தர்ப்பம் கொடுத்தோம் நன்மையை விட கஷ்டம் தான் வந்தது.
ஒரு வருடத்திற்க்கு முன்பு (பெங்களுருக்கு முன்) வாய்ப்பு நிறைய இருந்தது, மக்கள் ஆதரவு அதிகமாக இருந்தது, பெங்களுரிலிருந்து திரும்பிய பின்பு இனி அம்மா மக்களுக்காக வாழ்வார், தமக்கு வந்த சோதனைகளை சாதனைகளாக மாற்றுவார், இனி மக்களுக்கு நிறைய நல்லது செய்வார், மக்களின் மனங்களில் இடம் பிடிப்பார், என காத்து இருந்து பின்பு ஏமாந்து போன மக்களில் ஒருவன், இங்கு இரண்டாவது வாய்ப்பும் போனது, வெள்ளத்தில் முன்றாவது வாய்ப்பும் போனது.
தினம் தினம் விளம்பரம், போட்டோ, பத்திரிக்கை செய்தி அம்மாவிடம் நல்ல பெயர் வாங்கத்தான் பிள்ளைகள் முன்னுரிமை அளித்தன, இங்கு தனது வாய்ப்பை அமைச்சர்கள் அனைவரும் தவறவிட்டனர், கடமையை மறந்து, காசு பார்பதில் கவனமாக இருந்து விட்டனர் காரணம்
அம்மாவின் கவனக்குறைவு, அம்மாவின் ஆணைப்படி என சொல்லி சொல்லி அனைத்து தப்பையும் செய்து விட்டனர்.
அதிமுக வின் அலை சென்னை வெள்ளத்தோடு போனது, நல்ல உள்ளத்தோடு சிந்தித்து பாருங்கள் உண்மை புரியும்.
வாய்ப்பு கிடைத்தால் வரலாறு படைக்கவேண்டும்.
கஷ்டங்கள் நிறைந்த சோதனைக்காலம்.
No comments:
Post a Comment