Sunday, January 10, 2016

அமுத மொழி

மக்கள் நல்லுறவு
வாடா மல்லிக்கு வண்ணம்
உண்டு வாசமில்லை,
வாசமுள்ள மல்லிகைக்கோ
வயது குறைவு.
வீரமுள்ள கீரிக்கு கொம்பில்லை,
கொம்புள்ள மானுக்கோ
வீரம் இல்லை.
கருங்குயிலுக்குத்
தோகையில்லை,
தோகையுள்ள மயிலுக்கோ
இனிய குரலில்லை.
காற்றுக்கு
உருவமில்லை
கதிரவனுக்கு நிழலில்லை
நீருக்கு நிறமில்லை
நெருப்புக்கு ஈரமில்லை,
ஒன்றைக் கொடுத்து
ஒன்றை எடுத்தான்,
ஒவ்வொன்றிற்கும் காரணம்
வைத்தான்,
எல்லாம் இருந்தும்
எல்லாம் தெரிந்தும்
கல்லாய் நின்றான்
இறைவன்.
எவர் வாழ்விலும் நிறைவில்லை,
எவர் வாழ்விலும் குறைவில்லை,
புரிந்துகொள் மனிதனே
அமைதி கொள் !
-படித்ததில் பிடித்தது.


பொய் சொல்லி தப்பிக்காதே
உண்மையை சொல்லி மாட்டிக்கொள்
பொய் வாழ விடாது
உண்மை சாக விடாது                                         - விவேகானந்தர்


இதயம் சொல்வதை செய்
வெற்றியோ
தோல்வியோ
அதை
தாங்கும் சக்தி
அதற்கு மட்டும் தான் உண்டு                        
தன்னை அறிந்தவன்
ஆசை பட மாட்டான்
உலகை அறிந்தவன்
கோவ பட மாட்டான்
இந்த இரண்டையும்
உணர்ந்தவன்
துன்ப பட மாட்டான்                                          -பகவத் கீதை


யார் என்ன சொன்னாலும்
உன் கொள்கையை மாற்றி கொள்ளாதே
ஒரு சமயம் நீ  மாற்றினால்
ஒவ்வொரு முறையும் நீ மாற வேண்டிஇருக்கும்    -கண்ணதாசன்

வாழ்கையில் வெற்றி பெற வேண்டுமானால்
நல்ல நண்பர்கள் தேவை
வாழ்நாள் முழுவதும்
வெற்றி பெற வேண்டுமானால்
ஒரு எதிரியாவது தேவை                                     - A .P . J . அப்துல்கலாம்


ஜெயிப்பது எப்படி என்று யோசிப்பதை விட
தோற்பது எப்படி என்று யோசித்து பார்
நீ
ஜெயித்து விடுவாய்                                              -ஹிட்லர்


அவமானங்களை சேகரித்து வை
வெற்றி உன்னை தேடி வரும்                              -A .R . ரகுமான்


தோல்வி உன்னை துரத்துகிறது என்றால்
வெற்றியை நீ நெருங்குகிறாய் என்று அர்த்தம்
                                                                               -நெப்போலியன்
கோவம் என்பது
பிறர் செய்யும் தவறுக்கு
உனக்கு நீயே
கொடுத்து கொள்ளும் தண்டனை                          -புத்தர்


விதைத்தவன் உறங்கினாலும்
விதைகள்
உறங்குவது இல்லை.                                             -காரல் மாக்ஸ்


வெற்றி இல்லாத வாழ்கை இல்லை
வெற்றி மட்டுமே வாழ்கை இல்லை                      -பில்கேட்ஸ்


வெற்றிகளை சந்த்தித்தவன் இதயம்
பூவை போல் மென்மையானது
தோல்வி மட்டுமே சந்த்தித்தவன் இதயம்
இரும்பை விட வலிமையானது                                                           
நீ பட்ட துன்பத்தை விட
அதில் நீ பெற்ற அனுபவமே சிறந்தது                  -விவேகானந்தர்


தோல்விக்கு இரண்டு காரணம்
ஓன்று
யோசிக்காமல் செய்வது
இரண்டு
யோசித்த பின்னும்
செய்யாமல் இருப்பது                                            -ஸ்ரீ கிருஷ்ணர்


பெண்கள் இல்லை என்றால்
ஆண்களுக்கு ஆறுதல் சொல்ல ஆள் இல்லை
பெண்களே இல்லை என்றால்
ஆறுதலே தேவை இல்லை                                   -சார்லி சாப்பிளின்


நல்ல உறவுகளுடன் நிலைத்து,  நல்லுறவுடன் வாழ்க வளமுடன்

No comments:

Post a Comment